மனைவி தூக்கிலிட்டதை வீடியோவாக ரெக்கார்ட் செய்த கணவன்…

மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தடுக்காமல் அதை வீடியோ எடுத்து மாமனாரிடம் போட்டுக்காட்டிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இந்த அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது . கொடூரமாக நடந்து கொண்ட கணவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜ் கிஷோர் குப்தா.  இவரது மகள் சோபிதா குப்தா .  குல்மோஹரில் வசிக்கும் சஞ்சய் குப்தாவை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து இருக்கிறார் சோபிதா .   இத்தம்பதிக்கு  இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. 

குழந்தை பிறந்த பின்னர் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.  நேற்று மதியமும் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டபோது சோபிதா ஆத்திரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார்.   இதை சஞ்சய் குப்தா தடுக்காமல் அதை தனது செல்போனில் வீடியோவாக படம் பிடித்திருக்கிறார். 

 மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் அவரது பெற்றோருக்கு போன் செய்து சோபிதா தற்கொலை செய்து கொண்டது தகவல் தெரிவித்திருக்கிறார் பெற்றோர்கள் ஓடி வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதிருக்கிறார்கள்.   என்ன நடந்தது ஏன் சோபிதா தற்கொலை செய்து கொண்டார் என்று மருமகனிடம் கேட்க, சஞ்சய் குப்தா தனது  செல்போனில் எடுத்த அந்த வீடியோவை  காட்டி இருக்கிறார்.

இதை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் சோபிதாவின் பெற்றோர்.  தன் மகள் தற்கொலை செய்து கொண்டதை தடுக்காமல் மருமகன் வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார் என்று அதிர்ச்சி அடைந்தவர்கள்,  போலீசில் புகார் அளித்துள்ளனர்.  போலீசார் விரைந்து வந்து சோபிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.   அதன் பின்னர் சஞ்சீவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  சம்பவ இடத்தை ஆய்வு செய்து உள்ளனர்.

Next Post

நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா …

Thu Oct 27 , 2022
டி.20 உலக கோப்பை போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 56 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. சூப்பர் 12 சுற்றின் குரூப் 2 போட்டி நெதர்லாந்து இந்திய அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து விளையாடி கே.எல். ராகுல் 9 ரன்களில் வெளியேறினார். ரோகித் ஷர்மா 53 […]

You May Like