தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூருியில் 2-ம் ஆண்டு மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த மாணவர் தற்கொலையில் முக்கியமான கடிதம் சிக்கியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் மாவட்டத்தில் முத்துநாயக்கன்பட்டி பகுதியில் வசித்து வருபவர் கண்ணன்-பிரேமலதா தம்பதி. இவர்களுக்கு இளம்பரிதி(18) என்ற மகன் உள்ளார். இவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார்.
இவர் முதலாம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில்தோல்வி அடைந்தார். நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகின்றது. நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை சக மாணவர்களுடன் தங்கியிருந்த விடுதிக்கு சென்றார்.
அப்போது விடுதி அறையில் மாணவர்கள் வெளியே சென்றிருந்த நேரத்தில் இளம்பரிதி மட்டும் அறையில் தனியாக இருந்துள்ளார். வெளியே சென்ற மாணவர் வந்து பார்த்தபோது உள்பக்கம் பூட்டியிருந்தது. தட்டி பார்த்தும் திறக்க முடியவில்லை. எனவே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தான். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது மாணவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். மருத்துவம் படிப்பது கடினமாக உள்ளது. இதனால் நான் தற்கொலை செய்து கொள்கின்றேன். என எழுதியிருந்தது. இது சக மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.