#Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 27-ம் தேதி விடுமுறை…! தமிழக அரசு உத்தரவு…! இங்கு மட்டும் தான்…

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ம் தேதி விடுமுறை தினமாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா சமிபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனுடன் ஈரோடு கிழக்கு தொகுதி உட்பட மற்ற மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை முழுமையாக ஆற்ற வேண்டும் என்ற காரணத்தினால் அன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் அரசு நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் வாட்ச்!... விரைவில் அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டம்!

Wed Feb 15 , 2023
கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் வாட்ச்-ஐ விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், தயாரிக்கும் கணினி, ஐபேடு மற்றும் ஐபோன், வாட்ச் உள்ளிட்டவைகளுக்கு பயனாளர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இது மட்டுமல்லாமல் வாட்சில் கேமராவை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான காப்புரிமை விண்ணப்பம் கடந்த 2019ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆப்பிள் வாட்ச் ஆனது கடிகாரத்தை பட்டையில் இருந்து […]

You May Like