அஸ்தியை கரைக்க சென்ற மகனுக்கு நேர்ந்த துயரம்!!

அஸ்தியை கரைக்கச் சென்றபோது தாயின் கண் முன்னே நீரில் மூழ்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மாட்டுத் தாவணியை சேர்ந்தவர் முத்துக் கிருஷ்ணனின் மகன் அருண். 28 வயதான இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இவருடைய உறிவினர் வீரம்மாள் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சந்திரத்தில் விஸ்வநாதன் நகரில் 2 நாட்களுக்கு முன் காலமானார்.

தன் தாயை அழைத்துக் கொண்டு ஒட்டன்சத்திரம் துக்க நிகழ்வுக்கு அருண் சென்றார். பின்னர் உறவினர்களுடன் தலையூற்று அருவியில் அஸ்தியை கரைக்க சென்றார். அஸ்தியை கரைத்துவிட்டு குளிக்க சென்றபோது நீரில் முங்கியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தாயின் கண்முன்னே நடந்த துயரான சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து 3 மணி நேரம் போராடி உடலை மீட்டனர். உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Next Post

ஜிம்பாப்வே வீரர்களுக்கு பம்பர் ஆஃபர் அளித்த பாகிஸ்தான் நடிகை!!

Thu Nov 3 , 2022
20 ஓவர் உலககோப்பை போட்டிநடைபெற்று வரும் நிலையில் இந்தியாவை வீழ்த்தினால், ஜிம்பாப்வேவை சேர்ந்த வீரர் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக பாகிஸ்தான் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார் . 20 ஓவர் உலக கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த சேஹர் ஷின்வாரி என்ற நடிகை டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தியா வரும் ஞாயிற்றுக்கிழமை கடைசி சூப்பர் 12 போட்டியில் விளையாட உள்ளது. […]

You May Like