அஸ்தியை கரைக்கச் சென்றபோது தாயின் கண் முன்னே நீரில் மூழ்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மாட்டுத் தாவணியை சேர்ந்தவர் முத்துக் கிருஷ்ணனின் மகன் அருண். 28 வயதான இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இவருடைய உறிவினர் வீரம்மாள் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சந்திரத்தில் விஸ்வநாதன் நகரில் 2 நாட்களுக்கு முன் காலமானார்.
தன் தாயை அழைத்துக் கொண்டு ஒட்டன்சத்திரம் துக்க நிகழ்வுக்கு அருண் சென்றார். பின்னர் உறவினர்களுடன் தலையூற்று அருவியில் அஸ்தியை கரைக்க சென்றார். அஸ்தியை கரைத்துவிட்டு குளிக்க சென்றபோது நீரில் முங்கியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தாயின் கண்முன்னே நடந்த துயரான சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து 3 மணி நேரம் போராடி உடலை மீட்டனர். உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.