காதலிக்க மறுத்த பெண் வீடு தேடிப்போய் பெற்றோர் முன்னிலையில் அரங்கேற்றிய கொடூரம்.!

காதலிக்க மறுத்த இளம் பெண்ணை, கத்தியால் குத்திய சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் , பெரியகுளம் வடகரை அழகர் சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 25). அதே பகுதியை சேர்ந்த ஹேமலதா என்ற கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இவர் தினமும் அந்த பெண்ணை பின் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ள,ல் நிலையில் அவர் அந்த பெண்ணிடம் காதலை கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த இளைஞர் பெண்ணின் வீட்டிற்கு சென்று பெற்றோர் முன்னிலையில் தான் வைத்திருந்த கத்தியை கொண்டு இளம் பெண்ணின் கழுத்து, முதுகு கைகளில் தொடர்ந்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

பெற்றோரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை மடக்கி பிடித்து பெரியகுளம் காவல் நிலைய போலீஸிடம் ஒப்படைத்தனர். இதனிடையில் படுகாயமடைந்த இளம் பெண்ணை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இளம் பெண் ணை வீட்டிலேயே சென்று கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Baskar

Next Post

ஒரே மாதத்தில் 2 முறை அடக்கம்..!! இடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலம் முட்புதரில் கிடந்ததால் பரபரப்பு..!!

Wed Oct 26 , 2022
ஈரோடு அருகே இறந்துபோன முதியவரின் உடலை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அடக்கம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பாசூர் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள முட்புதரில் முதியவரின் உடல் கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், முதியவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அருகில் உள்ள ஊரைச் சேர்ந்த உதயகுமாரின் தந்தை […]
ஒரே மாதத்தில் 2 முறை அடக்கம்..!! இடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலம் முட்புதரில் கிடந்ததால் பரபரப்பு..!!

You May Like