சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி வதந்தி என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுவரை தமிழ்நாட்டில் 34,914 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 307 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 24,545 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் சென்னையில் பாதிக்ப்பட்டோரின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவை தடுக்க பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே சாத்தியம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் முழு ஊரங்கு அமல்ப்படுத்த படுகிறது என்ற செய்தி முற்றிலும் தவறானது என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி இராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.