fbpx

சூப்பர் திட்டம்…! சுயதொழில் தொடங்கும் நபர்கள் ரூ‌.10 லட்சம் வரை பெறலாம்…! முழு விவரம் இதோ

சுயதொழில் தொடங்க ஆர்வம்‌ உள்ள நபர்கள் மத்திய மாநில அரசு வழங்கும் மானிய தொகையை பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

தமிழக அரசு சுயதொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ உதவி பெறத்தக்க மானியத்துடன்‌ கூடிய கடனுதவித்‌ திட்டங்களை முனைப்புடன்‌ செயல்படுத்தி வருகிறது. அவற்றுள்‌ ஒன்று, மத்திய அரசின்‌ 60% நிதிப்பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ “பிரதமரின்‌ உணவுப்‌ பதப்படுத்தும்‌ குறுந்தொழில்‌ நிறுவனங்கள்‌ ஒழுங்குபடுத்தும்‌ திட்டம்‌ ஆகும்‌.

தொழில்‌ தொடங்கவும்‌ மேம்படுத்தவுமான தொழில்‌ நுட்ப ஆலோசனைகள்‌ மற்றும்‌ திறன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சி வழங்கப்பட்டு, திட்ட அறிக்கை தயாரிக்கவும்‌ வழிகாட்டுதல்‌ வழங்கப்படுகிறது. நிதி நிறுவனங்கள்‌ மூலம்‌ மானியத்துடன்‌ கூடிய கடனுதவிக்கு ஏற்பாடு செய்யப்படுவதுடன்‌ தொழில்‌ நடத்திடத்‌ தேவையான சட்ட பூர்வ உரிமங்கள்‌ மற்றும்‌ தரச்‌ சான்றிதழ்கள்‌ பெறவும்‌ சந்தைப்படுத்தலை மேம்படுத்தத்‌ தேவையான உதவிகளும்‌ வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ புதிதாகத்‌ தொழில்‌ தொடங்க ஆர்வமுள்ளோர்‌, ஏற்கனவே உணவுப்பதப்படுத்தும்‌ தொழிலில்‌ ஈடுபட்டுள்ளோர்‌ மற்றும்‌ குறு நிறுவனங்கள்‌, சுய உதவிக்‌ குழுவினர்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌ அமைப்பினர்‌, உற்பத்தியாளர்‌ கூட்டுறவு சங்கங்கள்‌ ஆகியோர்‌ பயன்‌ பெறலாம்‌. ரூ. 1 கோடி வரையிலான திட்டத்‌ தொகை கொண்ட உணவுப்‌ பதப்படுத்தும்‌ தொழில்‌ திட்டங்கள்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ உதவி பெறத்‌ தகுதி. திட்டத்‌ தொகையில்‌ 10% முதலீட்டாளர்‌ தம்‌ பங்காகச்‌ செலுத்த வேண்டும்‌. 90% வங்கிகளால்‌ பிணையமில்லாக்‌ கடனாக வழங்கப்படும்‌. அரசு 35% மானியம்‌, அதிகபட்சம்‌ ரூ.10.00 இலட்சம்‌ வரை வழங்கும்‌. சுய உதவிக்‌ குழுவினர்‌ உணவுப்‌ பதப்படுத்தும்‌ தொழிலில்‌ ஈடுபட்டால்‌ அவர்கள்‌ ஒவ்வொருவருக்கும்‌ ரூ.40,000 வீதம்‌ தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும்‌.

தனியான தொழில்‌ திட்டங்களுக்கு வழங்கப்படும்‌ மானியத்துடன்‌ கூடிய கடனுதவி மட்டுமின்றி, உணவுப்பதப்படுத்தும்‌ தொழிலில்‌ ஈடுபட்டுள்ள தொகுப்புக்‌ குழுமங்களுக்கு தேவையான பொதுக்‌ கட்டமைப்பு வசதிகள்‌ மற்றும்‌ பொது வசதியாக்க மையங்களை ஏற்படுத்த திட்டத்‌ தொகையில்‌ 35% மானயித்துடன்‌ கடனுதவி வழங்கப்படும்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயன்‌ பெற https://pmfme.mofpi.gov.in/ என்ற இணையதளத்தில்‌ விண்ணப்பத்தினைப்‌ பதிவு செய்ய வேண்டும்‌.

Read More: பரபரப்பு..! ஜம்மு- காஷ்மீரில் சிக்கி தவிக்கும் 52 தமிழக மாணவர்கள்… உதவி எண் அறிவித்த தமிழக அரசு…!

English Summary

People starting self-employment can get up to Rs. 10 lakhs

Vignesh

Next Post

‘ஆபரேஷன் சிந்தூர்’ படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. இந்தியா - பாக்., பதற்றத்திற்கு மத்தியில் வெளியான முதல் போஸ்டர்..

Sat May 10 , 2025
A film is to be made based on the Operation Sindoor attack.

You May Like