தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் ராம லக்ஷ்மணன் என்பவருக்கு பூபதி ராஜா என்ற 28 வயது மகன் இருந்துள்ளார். இந்த மகன் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு தற்போது தனியார் பவர் பிளான்ட் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
பகுதி நேரமாக வேலை பார்த்து வந்த பூபதி ராஜாவுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடுகின்ற பழக்கம் இருந்தது. தமிழகத்தில் ரம்மி விளையாட்டு தடை செய்யப்படுவதற்கு முன்பு பூபதி ராஜா இந்த விளையாட்டின் மூலம் நிறைய பணத்தை இழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டதன் காரணமாக சமீப காலமாக பூபதி ராஜா மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். ஒரு விளையாட்டு தடை செய்யப்பட்டதற்கு குடிமூழ்கி போய்விட்டது போல இருப்பதை கண்டு வேதனை அடைந்த பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
இதனால் அதிகப்படியான மன உளைச்சலுக்கு ஆளான பூபதி ராஜா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இளைஞரின் இந்த முடிவு பெற்றோருக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.