தமிழில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான கபாலி திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் வெற்றிச்செல்வன் மற்றும் ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய திரைப்படங்களிலும் மேலும் இந்தியில் முன்னணி கதாநாயகியாகவும் நடித்து இருக்கின்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் காதல் ஜோடிகள் மற்றும் தம்பதி ஆகியோர்க்கு அறிவுறை தருகின்ற வகையில் சிறிது நாட்களுக்கு முன் இவர் அளித்துள்ள பேட்டியில் சிலவற்றை கூறியுள்ளார். அதில் “நானும் என் கணவர் பெனடிக்ட்டும் அவரவர்களுக்கு பிடித்த மாதிரி இருந்துகொண்டே அவரவர் சந்தோஷமான உலகத்தில் சுதந்திரமாக அற்புதமான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்” என கூறியிருந்தார்.
மேலும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கணவன்- மனைவி (அ) காதலன்-காதலி ஆகிய இருவருக்கு இடையில் எதேனும் சண்டை சச்சரவு ஏற்பட்டால் 3ம் மனிதரின் ஆலோசனையை பெறவே கூடாது. ஏனெனில் அது காதல் மற்றும் இல்லறவாழ்க்கைக்கு மிகவும் ஆபத்தாக அமையும். 3ம் மனிதரை நாம் எப்போது நம் தனிப்பட்ட வாழ்க்கையில் வரவேற்கிறோமோ அப்போதே உறவில் விரிசல் ஆரம்பமாகி விட்டது என்றே கூறலாம்.
நாம் நேசித்த கணவர் (அ) காதலரை நம்மைவிட வேறு யாரும் நன்றாக புரிந்திருக்கவே முடியாது. இந்த நிலையில் இருக்கும் போது நம்வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினையை எப்படி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பது நம்மால் மட்டுமே அறிய முடியும். அதனை தொடர்ந்து 3ம் மனிதரின் பிரவேசம் நமது உறவில் நடக்கும் போது கண்டிப்பாக அந்த உறவை கொஞ்ச கொஞ்சமாக பிரிவை நோக்கி அழைத்து செல்லும்” என்று கூறியுள்ளார்.