10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மேலும் வரும் 16-ம் தேதி 11-ம் வகுப்பு தேர்வு நடைபெறும். மார்ச் 24-ம் தேதி நடைபெற இருந்த 12-ம் வகுப்பு தேர்வை எழுத இயலாதவர்களுக்கு வரும் 18-ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில் பொதுத்தேர்வு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உடல்நிலை குறித்த விவரங்களை பதிவேட்டில் எழுத வேண்டும். மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால், விருப்பத்தின் அடிப்படையில் அவர்களை வீட்டிற்கு அனுப்பலாம். வீட்டிற்கு அனுப்படும் மாணவர்கள், துணைத் தேர்வில் தேர்வுகளை எழுதி கொள்ளலாம்.

காய்ச்சல் இருந்தாலும் மாணவர்கள் விரும்பினால், தனி அறையில் தேர்வு எழுதலாம். அளவுக்கு அதிகமாக காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும். மாணவர்களுக்கு காலையிலும் மாலையிலும், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.