டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல்நிலைத் தேர்விற்கான நுழைவுச் சிட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டது. அதன்படி, முதல்நிலை எழுத்து தேர்வானது அக்டோபர் 30ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
நிர்வாகக் காரணங்களுக்காக இத்தேர்வு நவம்பர் 19க்கு ஒத்தி வைக்கப்பட்டது. வரும் 19ல் நடைபெறும் இத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்று வெளியாகி உள்ளது. இதை டி.என்.பி.எஸ்.சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்துத் தேர்வு 19ம் தேதி காலை 9.30க்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற உள்ளது.
இணைதள முகப்பு பக்கத்தில் ஹால் டிக்கெட் டவுன்லோட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது வேறு ஒரு பக்கம் திரையில் காண்பிக்கப்படும். அங்கு நிரந்தர பதிவு விவரங்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் உங்கள் பயனர் ஐ.டி மற்றும் கடவுசொல் உள்ளிட்டு, திரையில் கேட்கப்படும், கேப்சா வினாவிற்கு விடையளித்து உள் நுழைய வேண்டும். இல்லை எனில் நேரடியாக முகப்பு பக்கத்தில் நிரந்தர பதிவு விவரங்கள் என்பதை கிளிக் செய்து உள் நுழைய வேண்டும்.