நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நயன்தாரா விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைகள் விவகாரத்தில் விதிகளை மீறியதாக கூறப்பட்ட புகாரில் தற்போது விதிகளை மீறியது உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மருத்துவமனை நிர்வாகத்திடம் உரிய விளக்கம் கேட்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகின்றது. இந்து விளக்கம் திருப்திகரமாக இல்லை எனும் போது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் நயன்-விக்கி தம்பதிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்துகொண்டே இருக்கின்றது..
கடந்த ஜூன் 9ம் தேதி விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து 4 மாதங்களிலேயே இரட்டை குழந்தைகளுக்கு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் .. முறைகேடாக விதிகளை மீறி குழந்தை பெற்றுள்ளதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநகராட்சி ஆணையம் இது பற்றி விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர். இற்கான குழு விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தலை தீபாவளியை ஒட்டி தங்களின் இரட்டை குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு தம்பதியினர் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டனர்.
வீடியோ வெளியான சில மணி நேரங்களில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றது. விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என கூறப்படுகின்றது