சினிமா லைட் மேன் உட்பட ஒரே நாளில்இரண்டு கொலை! சென்னை மக்கள் அதிர்ச்சி!

சென்னையைச் சார்ந்த சினிமா லைட் மேன் ரத்தகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சூளைமேடு பகுதியைச் சார்ந்தவர் கணேசன். இவர் சினிமாத்துறையில் லைட் மேன் ஆக பணியாற்றி  வந்தார் இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் தனது வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் வீடு திரும்பவில்லை. இந்நிலையில்  சென்னை சூளைமேட்டில் சாலையோரத்தில் வாயில் ரத்தம் வழிந்தபடி  உடலின் பல்வேறு பகுதிகளிலும் காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவிட்டு இது தொடர்பாக விசாரணையில் இறங்கினர். அப்போது இறந்த நபர்  சூளைமேட்டை சார்ந்த சினிமா கலைஞர் கணேசன் என்பது தெரியவந்துள்ளது. இவர் எவ்வாறு இறந்தார் ? யாரேனும் இவரை கொலை செய்தார்களா? என்ற கோணங்களில் காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

இந்நிலையில்  இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னையின் விருகம்பாக்கம்  இளங்கோ நகர் அனெக்ஸ் பகுதியில்  தலையில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வரவே  சம்பவ இடத்திற்கு விரைந்து இருக்கின்றனர். அங்கு தலையில் கல்லால் தாக்கப்பட்டு  இரத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்திருக்கிறார். அவரது பிரேதத்தையும் கைப்பற்றி  உடற்கூறாய்விற்கு  காவல்துறையை அனுப்பி வைத்துள்ளது. மேலும் இது தொடர்பாக  தடையவியல் நிபுணர்களைக் கொண்டு தீவிர சோதனையும் நடத்தியுள்ளனர் காவல்துறையினர். அதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து  காவல்துறை நடத்திய விசாரணையில் இறந்த நபர் சென்னை மதுரவாயல்  அடுத்துள்ள  நெற்குன்றம் பகுதியைச் சார்ந்த பாபு என்பது தெரிய வந்திருக்கிறது. இந்த உனக்கையும் காவல்துறையினர்  தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்துள்ள இரண்டு சம்பவங்கள்  மர்மமாக இருப்பதால் பொதுமக்களும் கடும் வீதியில் உள்ளனர். காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் அதனால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் பொதுமக்களை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளில் இந்தக் கொலை தொடர்பாக ஏதேனும் பதிவாகி இருக்கிறதா? என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணையை  முடுக்கி  விட்டுள்ளது.

Baskar

Next Post

பூசாரிகளால் பிறந்தது தான் ஜாதி! மும்பை கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு!

Mon Feb 6 , 2023
சாதிகளை உருவாக்கியது பூசாரிகள் தான்  கடவுள் இல்லை என  ஆர் எஸ் எஸ் இன் தலைவர் மோகன் பகவத் மும்பையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார். ராஷ்ட்ரிய சுயம் சேவக் இது இந்தியாவில் இருக்கக்கூடிய  மதவாத அமைப்புகளில் ஒன்று  இதன் தலைவராக இருப்பவர்  மோகன் பகவத் . இந்த அமைப்பானது மகராஷ்டிரா மாநிலம்  நாக்பூரை தலவிடமாக கொண்டு செயல்பட்டு வரும்  ஒரு அமைப்பு. சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே இந்த […]

You May Like