உத்திரபிரதேச மாநிலத்தின் கண்ணஜ் பகுதியில் ஒரு 12 வயது சிறுமி ரத்த வெள்ளத்தில் மூழ்கியவாறு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். அப்பொழுது அந்த சிறுமியை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கவோ அவருக்கு உதவி செய்யவும் யாரும் முற்படாமல் கும்பல் கும்பலாக செல்போனில் படம் பிடித்த காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12 வயதான அந்த சிறுமி நேற்று மாலை உண்டியல் வாங்குவதற்காக அருகில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார். அதன் பின்னர், அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரை அங்கும் இங்கும் தேதி அலைந்த பெற்றோர் போலீசில் சென்று புகார் கொடுத்துள்ளனர்.
இத்தகைய சூழலில் இன்று காலை அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்த வாறு கண்டறியப்பட்டுள்ளார். அந்த சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பாரோ என்று சந்தேகிக்கப்படுகிறது ஆனால் போலீசார் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது குறித்து எந்த தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
போலீஸ் வந்து அந்த பெண்ணை மீட்கும் வரை யாருமே இந்த பெண்ணை காப்பாற்றாமல் வீடியோ எடுத்து வந்துள்ளனர். இது குறித்து பரவிய ஒரு வீடியோவில் அந்த பெண் உயிருக்கு போராடியவாறு அங்கு இருப்பவர்களை பார்த்து கையை உயர்த்த முயற்சிக்கிறார். அப்பொழுது கூட அவருக்கு யாரும் உதவவில்லை இந்த துயரமான வீடியோ நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.