சந்தேகத்தை ஏற்படுத்திய வாணி ஜெயராம் மரணம்.. வெளியானது உடற்கூராய்வு அறிக்கை..

வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என உடற்கூராய்வில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்..

பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று காலமானார்.. அவரின் மரணத்திற்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அவரின் மரணம் இந்திய திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது, இடறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் போலீசார் தெரிவித்திருந்தனர்.. மேலும் வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்..

இந்நிலையில் வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என உடற்கூராய்வில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.. தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.. மேலும் வாணி ஜெயராம் கீழே விழுந்து தலையில் அடிபட்டதே உயிரிழப்புக்கு காரணம் என்றும் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 19 மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களில் 10,000க்கும் அதிகமான பாடல்களை அவர் பாடி உள்ளார்.. சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்றவர் வாணி ஜெயராம்.. குடியரசு தினத்தை ஒட்டி அண்மையில் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷ்ண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

சொந்த வீடு வாங்கப் போறீங்களா..? இதெல்லாம் இருக்கான்னு பார்த்துட்டு வாங்குங்க..!! இல்லையென்றால் சிக்கல்தான்..!!

Sun Feb 5 , 2023
நமக்கென்று ஒரு சொந்த வீடு வேண்டும் என்பது நம்மில் பலரின் கனவாக உள்ளது. அந்த கனவை நினைவாக்க பின்வரும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தின் மாத செலவு போக வருமானத்தில் எவ்வளவு தொகை மீதமிருக்கும் என்பதை கணிக்க, முறையாக பட்ஜெட் போடுவது அவசியம். உங்கள் பட்ஜெட்டில் வீடு கடைசியாக இருக்கப் போவதில்லை. ஆகவே, முதலாவதாக வீட்டிற்கான தேவைகளை ஒதுக்கிய பின் மற்றவைகளுக்கு திட்டமிடுங்கள். வீடு அமைந்திருக்கும் இடம்: வீடு […]

You May Like