அஜித் நடிக்கவிருக்கும் அவருடைய 62வது படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டு விட்டார். ஆகவே விக்னேஷ் சிவனுக்கும், நடிகர் அஜித்துக்கும் இடையே பிரச்சனை என்பதைப் போல செய்திகள் பரவத் தொடங்கின.
அதோடு மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவனை அவருடைய திரைப்படத்திலிருந்து வெளியேற்றியதால் இனி வரும் காலங்களில் அஜித் உடன் எந்த ஒரு திரைப்படத்திலும் நயன்தாரா நடிக்க மாட்டேன் என்று முடிவு செய்து விட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் அனைத்து விதமான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நடிகர் அஜித்குமார் அழகாக சிரித்தபடி எடுத்த புகைப்படம் ஒன்றை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படத்திலிருந்து வெளியேறிய பின்னரும் அஜித்குமாரின் உண்மையான ரசிகராக விக்னேஷ் சிவன் நடந்து கொள்கிறார் என ஒருபுறம் பேசப்பட்டு வருகிறது.