ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் பனைத்தொழிலாளி ராஜலட்சுமி(42). வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்கி விட்டு திரும்பியபோது, டூவீலரில் வந்த இருவர் ராஜலட்சுமி போட்டிருந்த 4 சவரன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பியுள்ளனர்.
அலறல் சத்தம் கேட்டு, ஓடிவந்த குடும்பத்தினர் காரில் திருடர்கள் இருவரையும் விரட்டிச் சென்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் 10 கிமீ தூரம் வரை துரத்தி சென்ற நிலையில், டூவீலரை போட்டு விட்டு இருவரும் ஓடினர். இதில் ஒருவர் பிடிபட்டார்.
பிடிபட்ட நபரை ஊருக்கு நடுவே உள்ள கம்பத்தில் கட்டி அடித்து சாயல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் விசாரணை செய்ததில், அவர் சக்திவேல் (22) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவலை பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் தப்பிய நபர் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த விமல் என்பதும் தெரிய வந்ததுள்ளது. இதனை தொடர்ந்து
சாயல்குடி போலீசார் அவர்களின் மீது வழக்குப்பதிந்து 4 சவரன் செயின் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.