#ராமநாதபுரம் : செயின் பறித்த கள்வனை.. கட்டிவைத்து தோலுரித்த கிராம மக்கள்.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் பனைத்தொழிலாளி ராஜலட்சுமி(42).  வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்கி விட்டு திரும்பியபோது, டூவீலரில் வந்த இருவர் ராஜலட்சுமி போட்டிருந்த 4 சவரன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பியுள்ளனர்.

அலறல் சத்தம் கேட்டு, ஓடிவந்த குடும்பத்தினர் காரில் திருடர்கள் இருவரையும் விரட்டிச் சென்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் 10 கிமீ தூரம் வரை துரத்தி சென்ற நிலையில், டூவீலரை போட்டு விட்டு இருவரும் ஓடினர். இதில் ஒருவர் பிடிபட்டார்.

பிடிபட்ட நபரை ஊருக்கு நடுவே உள்ள கம்பத்தில் கட்டி அடித்து சாயல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் விசாரணை செய்ததில், அவர் சக்திவேல் (22) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவலை பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் தப்பிய நபர் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த விமல் என்பதும் தெரிய வந்ததுள்ளது. இதனை தொடர்ந்து 

சாயல்குடி போலீசார் அவர்களின் மீது வழக்குப்பதிந்து 4 சவரன் செயின் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

Baskar

Next Post

'துணிவு' படத்தின் முதல் சிங்கிள்..!! அனிருத்தை களமிறங்கிய ஜிப்ரான்..!! அடுத்த ’ஆலுமா டோலுமா’ ரெடி..!!

Sun Nov 6 , 2022
அஜித் நடித்து வரும் துணிவு படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அஜித் சமீபத்தில் டப்பிங் பேசும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. வலிமை படத்துக்கு சிறப்பாக பின்னணி இசை அமைத்த ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். நேர்கொண்ட பார்வை […]
துணிவு படத்தின் முதல் சிங்கிள்..!! அனிருத்தை களமிறங்கிய ஜிப்ரான்..!! அடுத்த ’ஆலுமா டோலுமா’ ரெடி..!!

You May Like