”என்னடா இந்த அளவுக்கு இறங்கிட்டீங்க”..!! காதலிக்கு காதலர் தின பரிசு கொடுக்க காதலன் செய்த காரியம்..!!

காதலிக்கு பரிசு வாங்குவதற்கு பணம் இல்லாததால் ஆடு திருடனாக மாறிய கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பீரங்கி மேடு மலையரசன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அரவிந்த் குமார் (20). இவரது நண்பர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் (20). இவர்கள் இருவரும் அப்பகுதியில் ரேணுகா என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் இருந்து ஆடு ஒன்றினை இருசக்கர வாகனத்தில் திருடிக் கொண்டு சென்றுள்ளனர். இதனைப் பார்த்து ஆட்டின் உரிமையாளர் ரேணுகா கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆடு திருடிய இருவரையும் மடக்கி பிடித்தனர். பின்னர், இருவருக்கும் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அரவிந்த்குமார் காதலர் தினத்தை கொண்டாடவும், தனது காதலிக்கு பரிசு வாங்குவதற்கும் பணம் இல்லாததால் ஆடு திருடியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆடு திருடுவதற்கு துணையாக அவரது நண்பர் மோகன் செயல்பட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும், ஆடு திருடப் பயன்படுத்திய பல்சர் பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

”எங்க போனாலும் இதே பிரச்சனைதானா”..? நடுவழியில் இறக்கிவிடப்பட்ட வடமாநில வித் அவுட் பயணிகள்..!!

Mon Feb 13 , 2023
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஞாயிற்று கிழமை காலை புறப்பட்ட எர்ணாகுளம் – டாடா நகர் விரைவு ரயில் போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக நேற்று பகல் 2.50 மணிக்கு சேலம் வந்தடைந்தது. ரயிலின் முன்பதிவு பெட்டியில் பயணச்சீட்டு இல்லாமலும், முன்பதிவு செய்யாமலும், ரயிலுக்காக காத்திருந்த வடமாநில தொழிலாளர்கள் பலர் ஏறி அமர்ந்திருந்தனர். இதையடுத்து, சேலத்தை அடுத்த கருப்பூர்-தின்னப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது முறைப்படி […]

You May Like