6 மாதங்களில் அம்பலமான மனைவியின் ரகசியங்கள்..!! பயங்கரமான ஆளா இருக்கும் போலயே..!! கணவருக்கு செம ஷாக்..!!

மேட்ரிமோனி மூலம் பழகிய பெண்ணுடன் தன் வாழ்நாள் முழுவதும் வாழப் போவதாக எண்ணி வாழ்க்கையை தொடங்கியவருக்கு எண்ணி ஆறே மாதத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அது என்னவென்றால், மணமுடித்து வாழ்ந்து வந்த பெண் ஒரு தேர்ந்த குற்றவாளி என்பதுதான் அந்த அதிர்ச்சி. இந்த நிகழ்வு குஜராத்தின் போர்பந்தரைச் சேர்ந்தவருக்கு நடந்திருக்கிறது. போர்பந்தரின் ஜலராம் குதிர் பகுதியைச் சேர்ந்தவர் விமல் கரியா. காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர், கடந்த 2021இல் மணமகள் தேடி ஆன்லைன் மேட்ரிமோனி தளத்தில் பதிவு செய்திருந்தார். அப்போதுதான் அசாமை சேர்ந்த ரிடா தாஸ் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்திருக்கிறது.

6 மாதங்களில் அம்பலமான மனைவியின் ரகசியங்கள்..!! பயங்கரமான ஆளா இருக்கும் போலயே..!! கணவருக்கு செம ஷாக்..!!

இருவரும் மேட்ரிமோனி மூலமே பேசி பழகி வந்தவர்கள் ஒருகட்டத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். அப்போது ரிடா தன்னுடைய பக்கத்தில் விவாகரத்தானவர் என குறிப்பிட்டதால் அவருடைய விவாகரத்து சான்றிதழை விமல் கேட்டுள்ளார். அதற்கு, அந்த கல்யாணம் பஞ்சாயத்துதாரர்களால் நடத்தி வைக்கப்பட்டது. அதற்கு சான்றிதழ் எதுவும் இல்லை எனக் கூற இதனை நம்பிய விமல், அவரை அகமதாபாத்தில் வைத்து முறைப்படி திருமணமும் செய்துக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். சுமார் 6 மாதங்கள் கழிய திடீரென அசாமில் இருந்து தன்னுடைய அம்மா தொடர்புகொண்டு நிலப் பிரச்னை தொடர்பாக வந்து செல்லும்படி கூறியதாகச் சொல்லி ரிடா தாஸ் அசாம் சென்றுள்ளார். ஊருக்கு போன ரிடா திரும்பி வராததால் சற்று தவித்து போயிருக்கிறார் விமல்.

இந்நிலையில்தான் ரிடாவின் வழக்கறிஞர் எனக் கூறி ஒருவர் விமலை தொடர்புகொண்டு, ரிடாவுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டிருக்கிறது. அதில் ரிடாவுக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்றால், ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், பதற்றப்பட வேண்டாம். பிரச்சனையாக எதுவும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, பணத்தை அனுப்பி வைத்த விமலுக்கு அந்த வழக்கறிஞர் அனுப்பி வைத்த ஆவணத்தில் இருந்த தகவல் அவருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதாவது ரிடா தாஸின் பெயர் ரிடா செளஹான் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுபோக மோசடி, திருட்டு, கொலை மற்றும் விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் அதன் மூலம் அறிந்துகொண்ட விமல் ரிடாவிடம் ஃபோனில் பேசியிருக்கிறார்.

அப்போது விமலின் கேள்விக்கு முறையாக பதிலளிக்காமல் ஃபோனை துண்டித்த ரிடா, அவரை பிளாக் லிஸ்ட்டில் போட்டிருக்கிறார். இதையடுத்து, சந்தேகமடைந்த விமல் கூகுளில் ரிடா குறித்து தேடவே முழு விவரமும் தெரிய வந்திருக்கிறது. அதன்படி, திருட்டு, ஆயுதக்கடத்தல், மோசடி, காண்டாமிருகங்களை வேட்டையாடுதல் போன்ற பல குற்றப் பின்னணிகளை கொண்டவர் என்பது தெரியவந்துள்ளார். மேலும், கடந்த 24 ஆண்டுகளில் 5,000 கார்களை திருடிய அனில் செளகான் என்ற பிரபல குற்றவாளியின் மனைவிதானாம் இந்த ரிடா. 2007ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணமான நிலையில் 2015இல் இவர்கள் மீது கார் திருட்டு வழக்கு பதியப்பட்டதாகவும், அதற்கு பிறகு அனில் சிறையில் அடைக்கப்பட்டதால், இருவருக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று ரீடா கூறியதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் அறிந்த பிறகு, தன்னை ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்ட ரிடாவை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு போர்பந்தர் காவல்துறையினர் விமர் கரியா புகார் அளித்திருக்கிறார்.

Chella

Next Post

”போதும்யா என்னால முடியல”..!! மொத்தம் 11..!! குடும்பக் கட்டுப்பாடு செய்ததால் வீட்டை விட்டு வெளியேற்றிய கணவன்..!!

Sun Feb 19 , 2023
ஒடிசா மாநிலம் கியோஜ்ஹர் என்ற பகுதியில் 11 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் ஒருவர், கணவரின் விருப்பத்துக்கு மாறாக குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்காக தன் கணவனால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். கணவரின் இச்செயலால் ஜானகி என்ற அப்பெண், தனது சில குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆவதாக சொல்லப்படுகிறது. 11 வருடங்களில் 11 குழந்தைகளை ஜானகி பெற்றிருக்கிறார். கடந்த 11 வருடங்களாக […]
”போதும்யா என்னால முடியல”..!! மொத்தம் 11..!! குடும்பக் கட்டுப்பாடு செய்ததால் வீட்டை விட்டு வெளியேற்றிய கணவன்..!!

You May Like