கணவனால் உயிரோடு புதைக்கப்பட்ட பெண்..!! போலீசுக்கு சென்ற கால்..!! உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்..!!

உயிரோடு புதைக்கப்பட்ட பெண், தனது கையில் இருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

டிஜிட்டல் யுகத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகள் உலகளவில் அறிமுகமாகி வருகிறது. அந்த வகையில், மெசேஜ்கள், நோட்டிபிகேஷன், தொலைபேசி அழைப்புகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஸ்மார்ட்வாட்ச் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதேநேரம் ஸ்மார்ட்வாட்ச் தற்போது ஒரு பெண்ணின் உயிரையும் காப்பாற்றியுள்ளது.

கணவனால் உயிரோடு புதைக்கப்பட்ட பெண்..!! போலீசுக்கு சென்ற கால்..!! உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்..!!

அமெரிக்காவின் வாஷிங்டனில் வசிக்கும் 42 வயதான யங் சூக் அன் என்ற பெண், தனது கணவரோடு சண்டையிட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த அவரது கணவர் அந்த பெண்ணை கத்தியால் குத்தியதில் மயக்கமடைந்துள்ளார். இந்நிலையில், பதறிப்போன கணவன், மனைவியை குழிதோண்டி புதைத்துள்ளார். அப்போது, அந்த பெண் கையில் கட்டிருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் அவசர எண்ணிற்கு கால் செய்து தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். ஆனால், அதற்குள்ளாகவே, அந்த பெண் தானாகவே குழியிலிருந்து போராடி வெளியில் வந்துள்ளார்.

கணவனால் உயிரோடு புதைக்கப்பட்ட பெண்..!! போலீசுக்கு சென்ற கால்..!! உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்..!!

மேலும், படுகாயமடைந்த நிலையில் அந்த பெண்ணை மீட்ட போலீசார், அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த வாட்சை அந்த பெண்ணின் கணவர் சம்மட்டியால் அடித்தும் அது உடையாமல் தக்க நேரத்தில் அந்த பெண்ணின் உயிரை காத்துள்ளதாக தகவல் தெரிகிறது.

Chella

Next Post

கோவை வெடிவிபத்தில் 5 பேர் கைது... பலத்த பாதுகாப்பு..

Tue Oct 25 , 2022
கோவை வெடிவிபத்தில் இதுவரை 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகரத்தில் உக்கடம் பகுதியில் சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜமேசா முபின் (29) என்பவர் உயிரிழந்தார்.இவரது வீட்டை சோதனை நடத்தியதில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதே போல உயிரிழநு்த ஜமேசா முபின் வீட்டில் […]

You May Like