உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச்சுற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

உலகின் ‘நம்பர்-1’ டென்னிஸ் வீரர் செர்பியாவின் ஜோகோவிச். சக வீரர்களுடன் இணைந்து கண்காட்சி டென்னிஸ் தொடர் நடத்த முடிவு செய்தார். அட்ரியாவில் முதல் தொடர் நடந்தது. இதில் சமூக இடைவெளியே ரசிகர்கள் பின்பற்றவில்லை என புகார் எழுந்தது.
டென்னிஸ் வீரர்கள் உட்பட 1000 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. உலகத் தரவரிசையில் 19வது இடத்திலுள்ள பல்கேரியாவின் கிரிகர் டிமிட்ரோவுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து குரோஷியாவில் ஜோகோவிச் விளையாட இருந்த பைனல் உட்பட தொடர் முழுவதும் ரத்தானது.
டிமிட்ரிரோவுக்கு எதிராக விளையாடிய மற்றொரு முன்னணி வீரர் குரோஷியாவின் போர்னா கோரிச்சிற்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. தவிர செர்பிய கிளப்பின் 5 வீரர்களுக்கும் தொற்று இருப்பது தெரிந்தது. அடுத்தடுத்து பல வீரர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால், ஜோகோவிச்சும் பெல்கிரேடு சென்று சோதனை செய்து கொண்டார்.
அந்த சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தன்னால் பாதிக்கப்பட்ட அணைவரிடமும் மன்னிப்பு கோருவதாக ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.