ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் நிலக்கரி சுரங்கத்திற்குள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் போவ்ரா கோலியரி பகுதியில் பாரத் கோக்கிங் கோல் லிமிடெட்  நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில் இன்று காலைஇல்  திடீரென நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஏராளமான தொழிலாளர்கள் […]

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. வங்க கடல் பகுதியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் வேகமாக காற்று வீசும் காரணமாக மாவட்ட மீன்வளத்துறை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்துள்து. கடலூரில் கடல் சற்று சீற்றத்துடனும் கொந்தளிப்புடனும் காணப்படுகிறது.  அரபிக் கடலில் புயல் உருவாகியுள்ளதால் தமிழக வங்கக் கடல் […]

தெலங்கானா மாநில அமைச்சர் பயணம் செய்துகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்திலிருந்து நூலிலையில் அமைச்சர் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் பிற்படுத்தோர் நலத்துறை மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சரான காங்குலா கமலாகர், தெலங்கானா மாநிலம் உருவாகி பத்து ஆண்டுகள் ஆனதை கொண்டாடுவதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.  தெலங்கான மாநிலம் கரீம் நகரில் உள்ள ஆசிஃப் நகருக்கு […]

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பாடகர் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் குருகிராம் நகரில் வசித்துவரும் போஜ்புரி பாடகர் அபிஷேக் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் பிரபலமானவராக திகழ்கிறார். யூடியூபில் 27 ஆயிரம் பேர் இவரை பின்தொடர்கின்றனர்.  இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அபிஷேக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுமி ஒருவரின் அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

இந்தியாவில் 10 கோடி பேருக்கும், தமிழ்நாட்டில் 1 கோடி பேருக்கும் சர்க்கரை வியாதி இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய தேசிய அளவிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, உடல் பருமன் உள்ளிட்ட தொற்றாத நோய்களும் அவற்றுக்கான முக்கிய காரணிகள் என்னென்ன மற்றும் மக்களிடம் இந்த நோய்கள் எவ்வளவு பரவி உள்ளது என்பதை கூறுகிறது.  இந்தியாவில் 11.4% பேருக்கு நீரிழிவு […]

தமிழ்நாட்டில் விளம்பர பலகைகள், விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகளை உரிய அனுமதியின்றி நிறுவக்கூடாது என்றும் அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் விதிமீறலினால் ரூ. 25,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று […]

மத்தியபிரதேச மாநிலம் முங்காவல்லி என்னும் கிராமத்தில்  கடந்த 6 ஆம் தேதி ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழந்தார். சேகோர் மாவட்டத்திற்கு உட்பட்ட முங்காவல்லி கிராமத்தில் 6 ஆம் தேதி அன்று தனது வீடு அருகிலுள்ள பண்ணை நிலப்பகுதியில் சிருஷ்டி குஷ்வாகா என்கிற இரண்டரை வயது சிறுமி அங்கே மூடாமல் விடப்பட்டிருந்த 300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்தார். இதில் 30 அடி […]

குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ஊட்டி மலை ரயில் தடம்புரண்டது. இதனையடுத்து அந்த ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்ட மலை ரயிலின் கடைசி பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர். மலை ரயில் தடம் புரண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து, தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட […]

6 மற்றும் 10ஆம் வகுப்பு பள்ளி பாட புத்தகங்களில் சீட்டுக் கட்டு தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் தலைவர்களும், கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்ததை அடுத்து, இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் 6ம் வகுப்புக்கான மூன்றாவது பருவ கணிதப் பாட நூலில்  முழுக்கள் என்ற தலைப்பிலான பாடம்  சீட்டுக்கட்டு உதாரணத்துடன் கொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் புள்ளியியலும் நிகழ் தகவும் என்ற […]

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி விவரங்கள்: பொறியாளர், மேற்பார்வையாளர் சம்பளம்: பொறியாளருக்கு மாதம் ரூ.82,620, மேற்பார்வையாளருக்கு மாதம் ரூ.46,130 சம்பளம் வழங்கப்படுகிறது. தேர்வு முறை: நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு  கல்வித் தகுதி: 10ம்வகுப்பு, 12ம் வகுப்பு, இளங்கலை பட்டம், டிப்ளமோ, ஐ.டி.ஐ  வயது வரம்பு: 18-34 விண்ணப்பிக்க கடைசி நாள்: 08-06-2023 விண்ணப்பிக்கும் முறை: https://careers.bhel.in:8443/bhel/jsp/#openings என்ற […]