40 வயதை கடந்துவிட்டாலே வயதாகிவிட்டது என்று அர்த்தமில்லை. இருப்பினும், வயது அதிகரிக்கும்போது உடலில் இயற்கையாகவே சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. தசை நிறை, வளர்சிதை மாற்றம், உடற்பயிற்சிக்குப் பிறகு உடல் மீள்வது மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை மாறக்கூடும் என்பதால், இந்த வயதுக்குப் பிறகு உணவு மற்றும் வாழ்க்கை முறையில் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியமாகிறது. சமச்சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் தேவையான மருத்துவப் பரிசோதனைகளுடன், காலை நேரத்தில் சில […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தலைவலி ஏற்பட்டால் பெரும்பாலும் மன அழுத்தம், தூக்கமின்மை அல்லது நீண்ட நேரம் செல்போன் மற்றும் கணினி பயன்படுத்தியதுதான் காரணமாக இருக்கும் என்று பலரும் நினைப்பார்கள். உண்மையில், தண்ணீர் குறைவாக குடிப்பது, உணவு சாப்பிடாமல் இருப்பது, கண்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பது, மன அழுத்தம், தூக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வானிலை மாற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களாலும் தலைவலி ஏற்படலாம். ஆனால், தலைவலி அடிக்கடி திரும்பத் திரும்ப ஏற்படுவதுடன் அதன் தீவிரமும் […]
மூன்றாம் உலகப் போர் அல்லது பெரும் இயற்கை பேரிடர்கள் நேர்ந்தாலும் தங்களது விலைமதிப்பற்ற கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில், உலகப் பெரும் பணக்காரர்களுக்காக சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அதிநவீன பிரம்மாண்ட பாதாளப் பாதுகாப்புப் பெட்டகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற புரூனிக் மலைப்பகுதியில் (Brunig Pass), ‘புரூனிக் மெகா சேஃப்’ (Brünig Mega Safe AG) என்ற தனியார் நிறுவனம் இந்த மெகா தற்காப்பு அரண் […]
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கருவாட்டா பகுதியில் பூட்டிய வீட்டிற்குள் 65 வயது முதியவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது 13 வயது பேத்தி உட்பட நான்கு சிறுவர்களைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லம் பரவூர் பகுதியைச் சேர்ந்த சிவன்குட்டி செட்டியார் என்பவர் தனது 13 வயது பேத்தியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வீடு பூட்டிக்கிடந்துள்ளது. 8-ஆம் வகுப்பு […]
ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது மட்டுமல்லாமல், அவற்றை எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதும் உடல்நலத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக இரவு உணவை மிகவும் தாமதமாக எடுத்துக்கொள்வது அல்லது தூங்குவதற்கு சற்று முன்பு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தால், அது செரிமானம், ரத்தச் சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தாமதமான இரவு உணவும் ரத்தச் சர்க்கரையும் உணவு எடுத்துக்கொள்ளும் நேரத்துக்கும் வளர்சிதை […]
மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசின் ஒப்புதலுக்காக கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளது. 2027-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக கர்நாடக பெரும் மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் துறை மற்றும் மண்டியா மாவட்ட பொறுப்பு அமைச்சர் என். செலுவராயசாமி தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை நிறைவேற்ற சுமார் 12,500 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், தற்போது சுமார் 20,000 ஏக்கர் நிலம் அடையாளம் […]
தமிழ்நாட்டில் அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் ஒரே தளத்தில் வழங்கும் வகையில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் “வெற்றிப் பாதை” என்ற புதிய மொபைல் செயலி உருவாக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில் நடைபெற்ற மனிதவள மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பதிலளித்து பேசிய அமைச்சர், அரசு ஊழியர்கள் மற்றும் […]
புதுச்சேரியில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மாதாந்திர உணவு தானிய மானிய தொகையை தடையின்றி பெறுவதற்கு, ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கைப்பேசி எண்களை உரிய ஆவணங்களுடன் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும், தவறினால் மானியம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை திட்டவட்டமாக எச்சரித்துள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன […]
தேசிய தேர்வு முகமை (NTA) தனது தேர்வு முறையில் பல்வேறு அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, தனது குழுக்களிலிருந்து 600 நிபுணர்களை நீக்கிவிட்டு, புதிய வல்லுநர்களைப் பணியமர்த்தத் தொடங்கியுள்ளது. மேலும், ஒவ்வொரு தேர்வுக்கும் முன்பாக வினாத்தாள்களை நான்கு கட்டங்களாகத் தீவிர ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களின் வினாத்தாள்களில் கடுமையான குறைபாடுகள் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது […]
இன்றைய காலத்தில் குழந்தைகள் சாப்பிட மறுக்கும் போது, அவர்களை சமாதானப்படுத்துவதற்காக செல்போனில் வீடியோ, யூடியூப் அல்லது ரீல்ஸ் போன்றவற்றை காட்டியபடியே உணவு கொடுப்பது பல வீடுகளில் வழக்கமாகிவிட்டது. ஆரம்பத்தில் குழந்தையை எளிதாக சாப்பிட வைக்கும் ஒரு வழியாகத் தோன்றினாலும், தொடர்ந்து இதே முறையைப் பின்பற்றும்போது, செல்போன் இல்லாமல் சாப்பிட முடியாத நிலைக்கு குழந்தைகள் பழகிவிடும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, இந்தப் பழக்கம் அவர்களின் உணவு உண்ணும் முறையிலும் சில மாற்றங்களை […]

