காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் (40) மற்றும் அவரது மனைவி தேன்மொழி (35) ஆகியோர், வெள்ளகேட் பகுதியில் உள்ள ஒரு மரக்கிடங்கில் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் மரக்கிடங்கின் உரிமையாளரான ஆறுமுகம் என்பவரிடம் ரூ.20,000 கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்கு திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல […]

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு திடீர் மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் நிறைவடைந்த தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் முழுமையாகப்பங்கேற்றிருந்த எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு, நேற்று அதிகாலை திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்பாக […]

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்த பிரதீப் ராஜ் (26) என்ற இளைஞர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல்துறையிடம் குடும்பத்துடன் நேரில் சென்று புகாரளித்த அடுத்த நாளே, மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்படுவதற்கு முன்பாக, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த பிரதீப் ராஜ், காவல்துறையினர் […]

3 பச்சிளம் குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட லின்ட்ஸே கிளான்சி (36) என்ற தாயின் வழக்கில், ஒருமித்த முடிவை எட்ட முடியாததால், இதனை ‘முடிவுக்கு வர இயலாத வழக்கு’ என்று நீதிபதி அறிவித்துள்ளார். கடந்த 2023 ஜனவரி 24 அன்று, அமெரிக்காவின் மாசசூசெட்ஸின் டக்ஸ்பரி நகரில் உள்ள தனது வீட்டில் ஐந்து வயது கோரா, மூன்று வயது டாசன் மற்றும் எட்டு மாதக் குழந்தை கேலன் ஆகிய மூன்று […]

வாகனத்தில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்ய ஏற்கெனவே போதுமான சட்ட விதிகள் உள்ளன. அவற்றை முறையாக அமல்படுத்த வேண்டியது காவல்துறை உள்ளிட்ட அமலாக்க அமைப்புகளின் பொறுப்பு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்குவதற்கான கூடுதல் உத்தரவுகளை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. […]

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இடைத்தேர்தல் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போட்டி தற்போதே சூடுபிடித்துள்ளது. மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிவிப்பின்படி, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் போட்டியிடுகின்றனர். இருவரும் ஏற்கனவே அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் […]

தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்தை மாநில அளவிலான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அக்கட்சியின் பிரதான அடையாளமாக விளங்கும் ‘விசில்’ சின்னம் தவெக-வுக்கே நிரந்தரமாக ஒதுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தவெக, யாரும் எதிர்பாராத வகையில் 35 சதவீத வாக்குகளை வாரிக் குவித்து அசத்தியது. சுமார் 1.8 கோடிக்கும் அதிகமான […]

இளம் பெண்களுக்கான HPV தடுப்பூசி திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. நாடு முழுவதும் 14 வயது சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் இந்த தடுப்பூசி திட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு […]

காதலித்து வந்த இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த நிலையில், தற்போது சாதியை காரணமாகக் கூறி திருமணத்திற்கு மறுப்பதாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பல இடங்களுக்கு தன்னை அழைத்துச் சென்று நெருக்கமாக பழகிவிட்டு தற்போது தன்னை சந்திப்பதையும் தவிர்ப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளம்பெண் தனது குடும்பத்தினருடன் சென்று மனு அளித்த சம்பவம் பரபரப்பை […]

தமிழக அரசியலில் முதல்வர் விஜய்க்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. சட்டப்பேரவையில் விஜய் பேசிய விவகாரத்துக்கு பதிலளித்த ஸ்டாலின், அவசரநிலை காலத்தில் தான் கைது செய்யப்பட்ட பின்னணி குறித்து விரிவாக பதிவிட்டதுடன், தனது தாடையை சுட்டிக்காட்டிய விஜய்யின் சைகைக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அவசரநிலை காலத்தில் தனது கைது குறித்து விஜய் குறிப்பிட்டது சரிதான் என ஸ்டாலின் குறிப்பிட்டார். ஆனால், […]