முத்துராமலிங்கத்தேவர் மற்றும் அறிஞர் அண்ணா குறித்து பொய்யான தகவல்களை பரப்பிய புகாரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மதுரையில் அண்ணாமலை பேசும்போது முத்துராமலிங்க தேவர் பேசியதாக ஒரு கருத்தை சுட்டிக்காட்டி முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையை விமர்சித்தார். இதைதொடர்ந்து, திமுக, அதிமுக கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். தொடர்ந்து அவரது கருத்து பொய்யானது என்றும் கூறினார். இதை அண்ணாமலை தொடர்ந்து மறுத்து […]

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளது. கடந்த சில நாட்களாக காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் சவுக்கு சங்கர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து காவல்துறையில் உள்ள பெண் காவலர்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பேசிய விவகாரத்தில் அவரை கோவை சைபர் கிரைம் போலீசார் தேனியில் […]

கோவை மாவட்டம் முழுவதும் கடைகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 3,100 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது கோவை மாவட்ட காவல் துறை மற்றும் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருடன் இணைந்து 23 சிறப்பு குழுக்கள் தமிழக அரசால் அமைக்கப்பட்டு கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அதன்படி 5,568 கடைகளில் திடீர் கூட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது 692 கடைகளில் சுமார் 3098.38 […]

கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பழச்சாறு, மோர், இளநீர் வழங்க கூடிய தண்ணீர் பந்தல் மக்கள் பயன்பாட்டிற்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயத்துடனே வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “எந்த விதமான தடுப்பூசியாக இருந்தாலும் […]

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் அன்னையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று நாடு முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதில், உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா” “தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் […]

ADMK: தேர்தலுக்கு பின் செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமையில் அதிமுக இயங்கும் என்று செய்திகள் வருவதாக கூறி அமைச்சர் ரகுபதி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்த கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக – பாமக உள்ளிட்ட கட்சி கூட்டணியுடன் களமிறங்கின. திமுக – […]

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய […]

திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சியில் ரூ 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டு வீடற்ற மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதன் காரணமாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை 37,720 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மக்கள் தாமாக வீடுகட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2,078.37 கோடியில் 69,071 தனி வீடு […]

பள்ளிக் கல்வித் துறையில் அலகுவிட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் மே 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களிடையே பொது மாறுதல் விண்ணப்பம் ஆண்டு தோறும் பெறப்பட்டு வருகிறது. அதன் படி, நடப்பு ஆண்டிற்கான பொது மாறுதலுக்கு […]

நடத்துனர்களுக்கு பேருந்தில் பயணம் செய்யும் குழந்தைகளின் வயது குறித்து சந்தேகம் எழும் பட்சத்தில் பிறந்த நாள் சான்று அல்லது ஆதார் அடையாள அட்டை மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசப் பயணம் திட்டம் உள்ளது. இதுவரை, மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டுமே இது அனுமதிக்கப்பட்ட நிலையில், […]