தமிழ்நாட்டில் அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் ஒரே தளத்தில் வழங்கும் வகையில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் “வெற்றிப் பாதை” என்ற புதிய மொபைல் செயலி உருவாக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில் நடைபெற்ற மனிதவள மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பதிலளித்து பேசிய அமைச்சர், அரசு ஊழியர்கள் மற்றும் […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
சமூக வலைதளங்களில் எழும் சிறிய விமர்சனங்களுக்குக் கூட காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்வதும், கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதும் துரதிருஷ்டவசமானது என முதலமைச்சர் விஜய்க்கு, ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில் மக்களின் மாற்றுக்கருத்துகளையும் நியாயமான விமர்சனங்களையும் அலட்சியப்படுத்தியதே கடந்த காலங்களில் திமுக வீழ்ச்சியடைந்ததற்கான முதன்மைக் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது தவெக […]
தமிழ்நாடு அரசின் 2026–27 நிதிநிலை அறிக்கையின் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையின் கீழ், அரசு ஊழியர்கள், போட்டித் தேர்வர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் சரத்குமார் சட்டப்பேரவையில் அறிவித்தார். ➣ அரசுப் பெண் பணியாளர்களுக்கு மூன்றாவது குழந்தைப் பேறுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மகப்பேறு விடுப்பானது 12 வாரங்களிலிருந்து 365 நாட்களாக (1 ஆண்டு) உயர்த்தி வழங்கப்படும். ➣ டிஎன்பிஎஸ்சி (TNPSC), எஸ்எஸ்சி (SSC), ரயில்வே […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு மாமல்லபுரம் அடுத்த கோவளத்தில் தனியார் நட்சத்திர ஓட்டலில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில் இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், கேரள முதல்வர் சதீசன், […]
பாமகவை சாதி கட்சியாக முத்திரை குத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், பாமக இதுவரை 6 இடஒதுக்கீடுகளை போராடிப் பெற்றுத் தந்துள்ளதை சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை மூலம் ஒரு நல்ல அரசியல் மாற்றம் […]
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யூடியூபர் மற்றும் நாளிதழ் செய்தியாளர்களை தாக்கியதாக எழுந்த புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தின் சோளிங்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கபில், அவரது சகோதரர் தனஞ்செழியன் உள்ளிட்டோர் மீது 21 நாட்களுக்குப் பிறகு காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சோளிங்கரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்த எம்.எல்.ஏ கபிலிடம், யூடியூபர் சிவா என்பவர் படம் குறித்த விமர்சனத்தை கேட்க […]
மகாராஷ்டிராவின் மூத்த அரசியல் தலைவரான சரத் பவார், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதுடன், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவையும் மத்திய அமைச்சரவைக்குள் கொண்டுவருவதற்கான மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தேசிய அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. டெல்லி மேலிடத்திற்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே திரைமறைவில் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், மத்திய அமைச்சரவையில் திமுகவிற்கு 2 அமைச்சர் பதவிகளையும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் […]
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான சேர்க்கை தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் உயர்கல்வித் துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் கலந்துகொண்டு, மாணவிகளுக்குச் சேர்க்கை ஆணைகளை வழங்கிப் பேசினார். அப்போது பேசிய அமைச்சர் நமச்சிவாயம், பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டு வருவது போல, புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் இலவசப் பேருந்து வசதியை ஏற்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். […]
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அமைச்சர் அருண்ராஜ் இன்று (ஆகஸ்ட் 17) வெளியிட்ட முக்கிய திட்டங்களின் விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம். ➣ தமிழகத்தில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்கள் வருமான உச்சவரம்பு ஏதுமின்றி கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சைகள் பெறும் வகையில் “முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். ➣ அனைத்து மாவட்ட […]
தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பல தலைமுறைகளாக நடைமுறையில் இருந்து வந்த நிலவரி வசூலிக்கும் முறை, நடப்பு 1436-ஆம் பசலி ஆண்டு முதல் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அதிரடி முடிவின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் நீண்டகால வரிச் சுமையிலிருந்தும், வருவாய்த் துறையின் தேவையற்ற நிர்வாக நடைமுறைகளிலிருந்தும் முழு விடுதலை […]

