மக்களவை தேர்தல், தமிழக்தில் 21 தொகுதிகளில் திமுக தனித்து போட்டியிடுகிறது, இதன் வேட்பாளர் பட்டியால் நாளை வெளியாகவுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடக்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற […]

நெற்குன்றத்தில் தேர்தல் நடத்தை விதி மீறி அதிமுக கொடியேற்றி 200 பேருக்கு பிரியாணி வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை நெற்குன்றம் மீனாட்சி அம்மன் நகரில் நேற்று முன்தினம் தேர்தல் விதிமுறை மீறி அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கொடி ஏற்றி 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரியாணி வழங்குவதாக கோயம்பேடு காவல்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். நிகழ்ச்சியை உடனடியாக […]

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக – பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. மக்களவைத் தேர்தலில் பாஜக – பாமக இணைநது செயல்படும் கூட்டணி ஒப்பந்தத்தில் ராமதாஸ் கையெழுத்திட்டார். நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் கூட்டணி ஒப்பந்தத்தில் ராமதாஸ், அண்ணாமலை கையெழுத்திட்டனர். கடந்த 10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக பாமக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 […]

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2021ஆம் ஆண்டு நீக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வானார். தற்போது அதிமுக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று கூறி அறிக்கைகளை ஓபிஎஸ் வெளியிட்டு வந்தார். இதையடுத்து அதிமுக பெயர், கொடி, லெட்டர் பேடு மற்றும் இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் இபிஎஸ் மனுதாக்கல் செய்தார். இந்த […]

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, 300 பெண்களுக்கு இலவச எம்பிராய்டிங் பயிற்சி வழங்க பிரேமலதா விஜயகாந்த், டோக்கன் வழங்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த மக்களவை […]

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 27-ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினா் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தனா். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மார்ச் 18ஆம் தேதி (நேற்று) திங்கட்கிழமையுடன் முடிவடைந்தது. இந்நிலையில், […]

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணியை நேரில் சந்தித்த பாஜக நிர்வாகிகள் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்தானது. பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக, மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை சில சிறிய கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இணைந்துள்ளன. மேலும், பாஜகவும் தமது தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து வருகிறது. அதிமுகவுடன் நேற்று வரை கூட்டணிப் பேச்சுவார்த்தை […]

தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி வைத்துள்ள பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சி மேற்கொண்டன. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த முறை போலவே 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக உறுதி அளித்தனர். இதற்கிடையே, அன்புமணியிடம் பேச்சுவார்த்தை நடத்திய பாஜக மேலிட பொறுப்பாளர்களான வி.கே.சிங், கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் 10 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை […]

தேர்தல் தொடர்பான செலவினங்களுக்கு தற்போது வரை ரூ.750 கோடி கேட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டத்தில் தமிழகத்தில் உள்ள 39 மற்றும் புதுச்சேரி என 40 மக்களவை தொகுதிகள், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரேநாளில் ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை மார்ச் 20-ம்தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுத்தாக்கலின் கடைசி நாள் மார்ச் […]

மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்யவும் தொகுதிகளை பகிர்ந்து கொண்டு வேட்பாளர்களை அறிவிக்கவும் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு […]