இரவு முழுவதும் போதுமான நேரம் தூங்கிய பிறகும், காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாமல் உடல் சோர்வும் தூக்க கலக்கமும் ஏற்படுவது பலரது அன்றாட பிரச்சனையாக உள்ளது. தொடர்ச்சியாக நீடிக்கும் இந்த மந்தநிலை அன்றைய நாளின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனையும் உற்சாகத்தையும் பாழாக்கிவிடும் சூழலில், காலை நேரப் பழக்கவழக்கங்களில் சில எளிய மாற்றங்களை செய்வதன் மூலம் உடலையும் மனதையும் இயல்பாகவே சுறுசுறுப்படையச் செய்ய முடியும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். விடிந்தவுடன் […]

புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் B12 உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிவப்பு இறைச்சிகளில் ஆட்டுக்கறி முக்கிய இடத்தை பிடிக்கிறது. சந்தைகளில் பொதுவாக வெள்ளாட்டுக்கறி மற்றும் செம்மறி ஆட்டுக்கறி என இரு வகைகள் கிடைக்கின்ற சூழலில், உடல் எடையை கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கும் குறைந்த கொழுப்பு உணவை விரும்புபவர்களுக்கும் இந்த இரண்டிற்கும் இடையிலான ஊட்டச்சத்து வேறுபாடுகளை புரிந்துகொள்வது அவசியமாகிறது. வெள்ளாட்டுக்கறியை பொறுத்தவரை, அது ஒப்பீட்டளவில் குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்த கலோரிகளை […]

கணவன்-மனைவி உறவில் கருத்து வேறுபாடுகளும், சின்னச் சின்ன சண்டைகளும் வருவது இயல்பானதுதான். ஆனால், அந்த நேரத்தில் இருவரும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் உறவு நீண்ட காலம் மகிழ்ச்சியாக நீடிக்குமா என்பதை தீர்மானிக்கிறது. குறிப்பாக, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மனம் திறந்து பேசும் பழக்கம் தம்பதிகளின் உறவை வலுப்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். திருமண வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் கணவன்-மனைவிக்கு ஒரே கருத்து இருக்க வேண்டும் என்ற […]

குஸ்கா என்றாலே ஹோட்டல் பிரியாணியின் மணமும், சால்னாவுடன் சேர்ந்து சாப்பிடும் அந்த தனி சுவையும் நினைவுக்கு வரும். இறைச்சி அல்லது காய்கறிகள் இல்லாமலேயே, சரியான மசாலா மற்றும் அரிசி பக்குவத்துடன் செய்தால் குஸ்கா சுவையாக இருக்கும். பொதுவாக பாசுமதி அல்லது சீரக சம்பா அரிசியைப் பயன்படுத்தி குஸ்கா தயாரிக்கப்படுகிறது. ஹோட்டலில் கிடைக்கும் அதே மாதிரியான வாசனையும் சுவையும் வீட்டிலும் கிடைக்க வேண்டுமென்றால், கல்பாசி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற வாசனைப் […]

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி செய்வது மட்டுமின்றி, தினசரி உணவிலும் கவனம் செலுத்துவது முக்கியம். குறிப்பாக காலை நேரத்தில் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கக்கூடிய சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது உதவியாக இருக்கும். அந்த வகையில், பாரம்பரிய கருப்பு கவுனி அரிசியில் தயாரிக்கப்படும் கஞ்சி ஒரு நல்ல காலை உணவு தேர்வாக இருக்கலாம். கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உள்ளன. இதனால் நீண்ட நேரம் […]

மார்பகப் புற்றுநோய் என்றாலே மார்பகங்களில் தோன்றும் கட்டிகள் அல்லது தோற்ற மாற்றங்கள் மட்டுமே அறிகுறிகள் என பெரும்பாலோர் கருதி வரும் நிலையில், தொடர்ச்சியான முதுகுவலியும் அதன் அறிகுறியாக இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சமூக ஊடகங்களில் கவனம் ஈர்த்த 27 வயது இளம்பெண் ஒருவரின் மருத்துவப் பின்னணி பலரையும் உறைய வைத்துள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த அந்தப் பெண்ணை […]

வீட்டில் தினமும் அதிகம் பயன்படுத்தப்படும் இடங்களில் சமையலறையும் ஒன்று. உணவு தயாரிக்கும் இடம் என்பதால், அங்கு சுத்தம் மட்டுமல்லாமல் பாதுகாப்பும் முக்கியம். ஆனால் நீண்ட நாட்களாக பயன்படுத்திய சில பொருட்களை, அவை சேதமடைந்த பிறகும் பலர் மாற்றாமல் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். இது உணவு சுகாதாரம் முதல் தீ விபத்து வரை பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாகலாம். சமையலறையை அவ்வப்போது சுத்தம் செய்வதுடன், அங்கு இருக்கும் பொருட்களின் நிலையை சரிபார்த்து தேவையற்றவற்றை அகற்றுவதும் […]

வீட்டில் தினமும் சமையலுக்குப் பயன்படுத்தும் பிரஷர் குக்கரை சுத்தமாக கழுவினாலும், அதன் மூடியில் இருக்கும் ரப்பர் கேஸ்கட்டை (Gasket) பலர் கவனிக்காமல் விட்டுவிடுவதாக ஆரோக்கிய வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த சிறிய ரப்பர் வளையத்தை சரியாக பராமரிக்கத் தவறினால், அதுவே பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கின்றனர். பொதுவாக குக்கரை பயன்படுத்திய பிறகு, இந்த ரப்பர் வளையத்தின் அடியில் எண்ணெய் பிசுக்கு, சிறிய அளவிலான உணவுத் துகள்கள் மற்றும் ஈரப்பதம் […]

மூச்சை எவ்வளவு நேரம் அடக்கி வைத்திருக்க முடிகிறது என்பதை கொண்டு ஒருவரின் நுரையீரல் ஆரோக்கியத்தை முழுமையாக மதிப்பிட முடியாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக, ஒருவர் நீண்ட நேரம் மூச்சை அடக்கும் போது நுரையீரலின் திறன் சிறப்பாக இருப்பதாக பலரும் தவறாக கருதுகின்றனர். ஆனால், மூச்சை அடக்கும் தருணத்தில் உடலுக்குள் முற்றிலும் வேறு விதமான உடலியல் மாற்றங்களே நிகழ்கின்றன. நாம் மூச்சை அடக்கிய உடனேயே, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனை […]

உள்ளங்கை திடீரென அல்லது தொடர்ச்சியாக சிவந்து காணப்படுவதை பலர் சாதாரணமான சரும மாற்றமாக கருதி அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். ஆனால், ‘பால்மர் எரிதீமா’ (Palmar Erythema) என்று மருத்துவ உலகில் அழைக்கப்படும் இந்த உள்ளங்கை சிவத்தல், உடலின் உட்புறத்தில், குறிப்பாகக் கல்லீரலில் ஏற்படும் நாள்பட்ட பாதிப்புகளின் வெளிப்பாடாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஹைதராபாத் யசோதா மருத்துவமனையின் அறுவைசிகிச்சை இரைப்பைக் குடலியல் துறைத் தலைவர் டாக்டர் டி.எல்.வி.டி. பிரசாத் பாபு […]