தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

முதல்வர் விஜய், நடிகை திரிஷா குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணையை முடித்த காவல்துறையினர், அவரை காவல்நிலைய ஜாமீனில் விடுவித்தனர். தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தவெக தலைவர்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தவெக மகளிரணி தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில், காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காவல்துறையினர் உதயநிதியை […]

தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது இல்லத்தில் வைத்துக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தவெக மகளிரணி நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், காலை 11 மணியளவில் உதயநிதியை அவரது இல்லத்திலேயே வைத்துப் பிடித்த காவல்துறையினர், உடனடியாக தஞ்சைக்கு அழைத்துச் செல்லப் புறப்பட்டனர். […]

கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் 8 மாவட்டங்களுக்கு அதிதீவிர மழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் இடைவிடாது பெய்து வரும் மழையால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பல பகுதிகளில் மழையின் அளவு 100 மில்லி மீட்டரை கடந்து பதிவாகியுள்ளது. இந்நிலையில், […]

கரூர் மாவட்டம் நரசிம்மபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அருணன் ஆகியோரின் தாயார் தேவகி என்பவர் கடந்த 3ஆம் தேதி காலமானார். அவரது அஸ்தியைக் காவிரி ஆற்றில் கரைப்பதற்காக இருவரும் தங்கள் உறவினர்களுடன் கரூர் அருகே உள்ள நெரூர் காவிரி ஆற்றுப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு அஸ்தியைக் கரைத்த பின்னர், அனைவரும் ஆற்றில் இறங்கிக் குளித்துள்ளனர். அப்போது, அவர்களுடன் வந்த உறவினரான சீனிவாசன் (64) என்பவர் ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்று, […]

முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த ஜூன் 20ம் தேதி கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், நெல்லை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து, பிணை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நெல்லை மத்திய சிறை என்பது தி.மு.க.வினருக்கு முக்தி தரும் இடம். சிறைச்சாலை என்பது எங்களுக்கு […]

காவிரி நீர் உரிமை மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது செய்ததை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியாமலும், மேகதாது அணை திட்டத்தை தடுக்க இயலாமலும் தவெக அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனை கண்டித்து தஞ்சையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம், ஒட்டுமொத்த தமிழகத்தின் கொந்தளிப்பை எதிரொலிக்கும் வகையில் அமைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அப்போது உரையாற்றிய, […]

ஓ.டி.டி-யில் தினமும் புதுப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், எந்த படத்தை பார்க்கலாம் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். திகில், மர்மம், சஸ்பென்ஸ் நிறைந்த படங்களை விரும்புபவர்களாக இருந்தால், இந்த வாரம் தவறாமல் பார்க்க வேண்டிய திரைப்படங்களில் ஒன்றாக ‘டெத் விஸ்பரர் 3’ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான ‘டெத் விஸ்பரர் 3’ (Death Whisperer 3) திரைப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது. […]

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இல்லம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டதால் நீலாங்கரை பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிலையில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் சஞ்சீவ் தனது வீட்டின் பால்கனியில் இருந்து அங்கிருந்த பரபரப்பான காட்சிகளை செல்போனில் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவிரி உரிமை தொடர்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரது […]

தவறுதலாக வந்த ஒரு தொலைபேசி அழைப்பு, திருமணமான பெண்ணின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கிய பழக்கம் காதலாக மாறிய நிலையில், கணவரை விட்டு காதலருடன் சென்ற பெண், பின்னர் போலீஸ் விசாரணையில் சிக்கிய சம்பவம் ஆந்திரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷோபா, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினரின் விருப்பப்படி குடுபள்ளி மண்டலம், குடிகோத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவரை […]

வெளிநாட்டில் வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றிய கணவர், சந்தேகமும் குடும்பத் தகராறும் முற்றிய நிலையில் மனைவியையும் மாமியாரையும் அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்குச் செல்லத் தயாராக இருந்த இரண்டு சிறுமிகள் கண்முன்னே இந்த கொடூரம் அரங்கேறிய நிலையில், இரட்டைக் கொலையை அரங்கேற்றிய நபர் ரத்தம் சொட்டிய ஆயுதத்துடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். ராமநாதபுரம் வைகை நகர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் செல்லமுத்து (48). […]