சென்னையை அடுத்துள்ள கோவளத்தில் நடைபெற்ற 31-வது தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கலந்துகொண்டு பேசினார். நதிநீர் விவகாரங்களில் மோதல் போக்கை மாற்றிவிட்டு, மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது என்று அவர் வலியுறுத்தினார். அரசியல் எல்லைகளை நதிகள் அறிவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், கர்நாடக அரசு மற்ற மாநிலங்களின் உரிமைகளை மதிக்கிறது என்றும், அதே நேரத்தில் கர்நாடகத்துக்கான சட்டப்பூர்வமான நீர் பங்கை […]
தமிழக சட்டசபையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி,”தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி தான்” என்று கூறினார். தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி தான். அங்கிருந்த அனைத்து விவசாயிகளையும் ஒரே இரவில் தூக்கிப்போட்டுவிட்டு தண்ணீரையும் உறிஞ்சிவிட்டு அதன் வளத்தையும் கெடுத்துவிட்டார்கள். நிலம் கொடுத்த விவசாயிகள் பிள்ளைகளுக்குக்கூட பணி […]
அமெரிக்காவின் தேசிய கடன் சுமை வரலாறு காணாத வகையில் 40 டிரில்லியன் டாலரைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதிகரித்து வரும் பாதுகாப்புச் செலவுகள், சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவக் காப்பீடு போன்ற முக்கிய சமூக நலத் திட்டங்கள் மற்றும் பெடரல் பற்றாக்குறைக்கான வட்டி செலுத்துதல் அதிகரிப்பு ஆகியவை இந்த மாபெரும் கடன் அதிகரிப்புக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மட்டும் இந்த […]
ஈரானுக்கு நிதி உதவி செய்யும் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு நிதி அல்லது தளவாட உதவிகளை வழங்கும் நாடுகள் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். ஈரான் மீதான தற்போதைய ராணுவ நடவடிக்கை, வரலாற்றிலேயே எந்தவொரு நாட்டின் மீதும் மேற்கொள்ளப்பட்ட மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கை என்று அவர் வர்ணித்துள்ளார். தான் தவிர வேறு […]
மாத சம்பளத்தில் எவ்வளவு வந்தாலும், மாத இறுதியில் பணம் எங்கே செலவானது என்றே தெரியாமல் போகிறதா? தினசரி வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை செய்யாமல், சில எளிய பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் குடும்பத்தின் தேவையற்ற செலவுகளை கணிசமாக குறைத்து, சேமிப்பை அதிகரிக்க முடியும். பதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு பதிலாக முழுமையான உணவுப் பொருட்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் முன்கூட்டியே நறுக்கி, கழுவி பேக்கிங் செய்யப்பட்ட காய்கறிகள் வசதியாக இருந்தாலும், அவற்றுக்கு கூடுதல் விலை செலுத்த […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணை, மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு வற்புறுத்திய கள்ளக்காதலன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சாலநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். தொழிலாளியான இவரது மனைவி குருவலட்சுமி (42). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் […]
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீட் தேர்வு நடைமுறைகளை மேலும் பாதுகாப்பானதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றக் கோரி அகில இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மத்திய அரசு […]
ராய்பூரில் 16 வயது மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரது கர்ப்பத்தை மறைத்து குழந்தையையும் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தந்தை, அத்தை உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கடந்த 2023-ஆம் ஆண்டு கணவரை பிரிந்து சென்றுள்ளார். அதன் பின்னர் மூன்று மகள்களும் தந்தையின் பராமரிப்பில் இருந்த […]
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், பள்ளி முதல்வர் கல்லு ரூபா ரெட்டி என்பவர், அதே பள்ளியில் பயிலும் இரண்டு 10-ஆம் வகுப்பு மாணவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொந்தமல்லிப்பள்ளி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த இக்கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த சிறுவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மாணவர்கள் இருவரின் ஆடம்பரச் செலவுப் பழக்கம் மற்றும் அவர்களின் அறையில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் குறித்து முதல்வர் ரூபா ரெட்டி கண்டித்துள்ளார். […]
பெங்களூருவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய திட்டமிட்ட பெண், தனது 4 வயது மகனையும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக பெண்ணையும் அவரது கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு சிக்கபனவரா பகுதியைச் சேர்ந்தவர் அபிநந்தன் (36). இவரது மனைவி ஹரிணி (26). இவர்களுக்கு யதுவீர் என்ற 4 வயது மகன் இருந்தார். கணவன், மனைவி இடையே அடிக்கடி […]

