தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்டின் (AGS Entertainment) தலைமைச் செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழக அரசு புதிய பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஆண்டிற்கு 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருவாய் கொண்ட திருக்கோவில்களுக்குப் பரம்பரை முறைசாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தகுதியான நபர்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரைக்கும் வகையில் மாநில […]
பெற்றோர் வயதாகும்போது அவர்களுக்கு துணையாக இருப்பது பிள்ளைகள்தான் என்ற எதிர்பார்ப்பு பல குடும்பங்களிலும் இருக்கும். ஆனால், வாழ்க்கையின் வேகத்தில் சில நேரங்களில் வயதான பெற்றோருடன் பிள்ளைகள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதை மறந்துவிடுகிறார்கள். பிள்ளைகளின் வருகைக்காகவும் ஒரு வார்த்தைக்காகவும் காத்திருக்கும் பெற்றோரின் தனிமை கவனிக்கப்படாமல் போகும்போது, அது எவ்வளவு வேதனையான நிலைக்கு வழிவகுக்கும் என்பதற்கு பெங்களூருவில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சி உதாரணமாகியுள்ளது. பெங்களூரு பாகலகுண்டே போலீஸ் எல்லைக்குட்பட்ட ஹவனூர் லே-அவுட்டில் […]
“ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்” என்பார்கள்… ஆனால், ஒரு முக்கிய உண்மையை மறைத்து நடந்த திருமணம் 25 நாட்களிலேயே பிரச்சினையாக மாறிய சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் முடிந்து சில வாரங்களிலேயே மனைவி குறித்து தான் எதிர்பாராத தகவலை அறிந்ததாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல்துறையை அணுகியுள்ளார். திருமணத்திற்கு முன்பு முக்கியமான தகவல் தன்னிடம் மறைக்கப்பட்டதாகவும், இதனால் தான் ஏமாற்றப்பட்டதாகவும் அவர் […]
காதல் என்ற பெயரில் நம்பிக்கை ஏற்படுத்தி 16 வயது சிறுமியை வீட்டை விட்டு வெளியே வரவழைத்து, பின்னர் பணத்துக்காக விபசார விடுதி பகுதியில் விற்பனை செய்த சம்பவம் மேற்கு வங்காளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலனின் வார்த்தைகளை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, பின்னர் எதிர்பாராத சூழலில் சிக்கியுள்ளார். அங்கிருந்து தப்பிக்க வழியின்றி தவித்த அவர், இறுதியில் போலீசார் மற்றும் குழந்தைகள் உதவி எண்ணை தொடர்புகொண்டு கண்ணீருடன் உதவி கேட்டுள்ளார். […]
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் நடந்த பாம்பு கடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த 6 மாணவிகளை பாம்பு கடித்ததில், 3 மாணவிகள் உயிரிழந்தனர். மேலும் 3 மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்ட தனோரா தாலுகாவில் உள்ள ஜப்தலை கிராமத்தில் அரசு உதவி பெறும் பழங்குடியினர் உறைவிடப் பள்ளி […]
கள்ளக்காதல் உறவுக்கு கணவர் இடையூறாக இருப்பதாக கருதிய மனைவி, தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து தோட்டத்தில் புதைத்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு போலீஸ் விசாரணையில் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா கடகலதா கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு கவாடே (40). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவருக்கு பங்காரி என்ற மனைவி […]
கேரளாவில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு விபரீதமாக முடிந்துள்ளது. நடன நிகழ்ச்சிக்கு செல்வதாகக் கூறி ஆண் நண்பருடன் விடுதியில் தங்கிய 55 வயது நடன ஆசிரியை, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலப்புரம் மாவட்டம் குன்னமங்கலம் அருகே சேரூர் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (55). நடன ஆசிரியையாக பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், தேஞ்சிப்பலம் பகுதியைச் […]
தமிழக அரசியலில் எதிர்காலத்தில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரபல ஜோதிடர் ரத்தன் பண்டிட் தெரிவித்துள்ளார். குறிப்பாக, நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், தற்போதைய முதலமைச்சர் விஜய்க்கும் அவருக்கும் இடையே புதிய அரசியல் போட்டி உருவாகலாம் என அவர் கணித்துள்ளார். அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நீண்டகாலமாக ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வருபவர் ரத்தன் பண்டிட். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்ததாகவும், தற்போதைய […]
நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் நடிகை நிகிதா ராவலை அதிர்ச்சியிலும் சங்கடத்திலும் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தி திரையுலகில் நடிகையாகவும் நடனக் கலைஞராகவும் அறியப்படும் நிகிதா ராவல், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அங்கு வழக்கம்போல் புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்ததுடன், ரசிகர்களுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது பெண் ரசிகை ஒருவர் […]
மனம் சோகம், பதற்றம் அல்லது மன அழுத்தத்தால் நிறைந்திருக்கும்போது பலருக்கும் தன்னிச்சையாக கண்ணீர் வருவது இயல்பானது. ஆனால், மனம் கனமாக இருக்கும்போது அழுவது மனநலத்திற்கு நல்லதா என்ற கேள்வி பலரிடமும் உள்ளது. சிறு வயது முதலே “சின்ன விஷயத்துக்கெல்லாம் ஏன் அழுகிறாய்?” அல்லது “அழுவது பலவீனத்தின் அடையாளம்” போன்ற வார்த்தைகளை நாம் கேட்டு வளர்கிறோம். இதனால் பலரும் தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அடக்கிக்கொள்ளத் தொடங்குகிறார்கள். ஆனால், உணர்ச்சிகளை நீண்ட காலம் […]

