தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பீகார் மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட விசித்திரமான மீன்களைச் சாப்பிட்ட சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்திலிருந்து வரும் வெள்ள நீரில் பிடிபடும் மீன்களைச் சாப்பிட வேண்டாம் என பீகார் அரசு பொதுமக்களை எச்சரித்துள்ளது. வெள்ள நீரில் அடித்து வரப்படும் மீன்கள்: என்ன ஆபத்து? நேபாளத்தின் திரிசூலி நதியிலிருந்து கண்டகி (Gandak) மற்றும் கோசி நதிகள் வழியாகப் பீகாருக்குள் பெருமளவு […]

எலான் மஸ்க் ஹியூமனாய்டு ரோபோக்களின் (Humanoid robots) எதிர்காலம் குறித்து மற்றொரு அதிரடி கணிப்பை வெளியிட்டுள்ளார். அடுத்த 10 ஆண்டுகளில் உலகிலுள்ள ஒட்டுமொத்த மனிதர்களின் உற்பத்தியை விட, இந்த ரோபோக்களின் உற்பத்தித் திறன் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்கள் குறித்து அவர் தொடர்ந்து பேசி வருவது, இந்தத் துறையின் மீது அவர் கொண்டுள்ள தீவிர ஆர்வத்தையும், எதிர்காலத்தில் நடக்கப்போகும் மாற்றங்களையும் […]

பருவநிலை மாற்றம் மற்றும் கடல் மட்டம் உயர்வு காரணமாக, இந்தியாவின் முக்கிய கடலோர நகரங்களான மும்பை மற்றும் கொல்கத்தாவில் வாழும் பல லட்சம் மக்கள் தங்களது வீடுகளை இழக்கும் “உடனடி ஆபத்தில்” இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. கடல் மட்ட உயர்வு என்பது இனி எதிர்காலப் பிரச்சனை அல்ல; வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் என அனைத்துத் தரப்பினரையும் அச்சுறுத்தும் தற்போதைய பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என ஐ.நா. […]

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ மூலமான பரிவர்த்தனை மதிப்பு ஆண்டிற்கு 20% அதிகரித்து, ரூ. 29.82 லட்சம் கோடியை எட்டியுள்ளது. மேலும், பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 22% உயர்ந்து 2,451 கோடி ஆகப் பதிவாகியுள்ளது என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தினமும் சராசரியாக 79.1 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றன. இதன்படி தினசரி சராசரி பரிவர்த்தனை மதிப்பு ரூ. 96,205 கோடி ஆகும். இதேபோல், ஜூன் […]

தலைவலி ஏற்பட்டவுடன் உடனடியாக மாத்திரை எடுத்துக்கொள்வது பலருக்கும் வழக்கமாக உள்ளது. ஆனால் சில நேரங்களில் உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாதது அல்லது எலக்ட்ரோலைட் சமநிலையில் ஏற்பட்ட மாற்றம் போன்ற எளிய காரணங்களாலும் தலைவலி ஏற்படலாம். இதுபோன்ற சூழலில் தண்ணீர் அருந்துவது உதவியாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா குறிப்பிட்டுள்ள எளிய முறையொன்று கவனம் பெற்றுள்ளது. அவர் பகிர்ந்துள்ள முறையின்படி, சிறிதளவு உப்பை நாக்கில் வைத்து, பின்னர் […]

ஜோதிடக் கலையின் மூலம் ஒருவரின் எதிர்கால நிகழ்வுகளையும், அவருக்கான தனித்துவமான குணாதிசயங்களையும் மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும். அந்த வகையில், தனிநபர் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆச்சரியங்களையும் திருப்பங்களையும் ஏற்படுத்தக்கூடிய, அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 8 முக்கிய ஜோதிட ரகசிய குறிப்புகள் இதோ.. நகைச்சுவை உணர்வு: ஒருவரின் ஜாதகத்தில் குரு மற்றும் புதன் ஆகிய இரு சுப கிரகங்களும் இணைந்து காணப்பட்டால், அந்த நபருக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வும், பேச்சாற்றலும் […]

ஆன்மிக ரீதியாக பல்வேறு சிறப்புகள் நிறைந்த மாதமாக செப்டம்பர் மாதம் விளங்குகிறது. முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி திருநாளும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியும் இம்மாதத்திலேயே கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன. மேலும், முன்னோர்களின் ஆசியை பெறுவதற்குரிய புண்ணிய காலமான மகாளய பட்சம் தொடங்குவதும், பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் பிறப்பதும் இம்மாதத்தின் தனிச்சிறப்பாகும். இவற்றுடன் தொடர்ந்து வரும் நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை போன்ற பெருவிழாக்களுக்கான […]

இந்து தர்மத்தில் துளசி தேவி, செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியின் அம்சமாகப் போற்றி வழிபடப்படுகிறார். துளசிச் செடியை வீடுகளில் வைத்துப் பராமரித்து வளர்ப்பதன் மூலம் ஸ்ரீமன் நாராயணனின் பரிபூரண அருளும், அன்னை மகாலட்சுமியின் ஆசிர்வாதமும் தடையின்றி முழுமையாகக் கிடைக்கும் என்பது தொன்றுதொட்டு வரும் ஐதீகமாகும். இதன் காரணமாகவே, பல குடும்பங்களில் அதிகாலை வேளையில் துளசி மாடத்திற்குத் தீபமேற்றி, வலம் வந்து வழிபடுவதையும், துளசி தளங்களைப் பறித்துப் பெருமாளின் திருவுருவப் படத்திற்கு மாலையாக […]

தமிழ்நாட்டில் உள்ள 52 திருக்கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் மனமுருக இறைவனை தரிசனம் செய்வதை உறுதி செய்யவும், நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றி கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும் செல்போன்கள் எடுத்துச் செல்வதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே பழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சி அம்மன், ராமேஸ்வரம் ஆகிய முக்கிய கோயில்களில் இந்த நடைமுறை செயல்பாட்டில் உள்ள நிலையில், தற்போது மேலும் 52 பெரிய கோயில்களுக்கு இது விரிவாக்கப்பட்டுள்ளது. சுவாமி சிலைகளைப் புகைப்படம் […]

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக வாகனங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகளின்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுழற்சி முறையில் சுங்கக் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 26 முக்கிய சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையிலான கட்டண உயர்வு இன்று […]