தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

‘ஸ்வச் வாயு சர்வேக்ஷன் 2026’ (Swachh Vayu Sarvekshan 2026) ஆய்வின்படி, தற்போது இந்தியாவில் லக்னோ தூய்மையான காற்று கொண்ட நகரமாகத் திகழ்கிறது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில் இது 198 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்த தரவரிசையில் நொய்டா 3-10 லட்சம் மக்கள் தொகை பிரிவில் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேசமயம் பெங்களூரு, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய மாநகரங்கள் முறையே 32, 35 […]

கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் அமைந்துள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் ஆப்பிளின் அடுத்த தலைமுறை ஐபோன் அறிமுக நிகழ்வுக்கான மேடை தயாராகி வருகிறது. சில மணி நேரங்களில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஐபோன்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது. இந்த ஆண்டு ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் (Foldable iPhone – ஐபோன் டுஓ) ஆகியவை முக்கியக் கவனத்தைப் […]

ஜப்பானின் நாகோயா நகரில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, அங்கு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நகரில் ஒரே மணி நேரத்தில் சுமார் 104 மி.மீ மழை பதிவானதை அடுத்து, நகராட்சி அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெளியேற்ற உத்தரவைப் பிறப்பித்தனர். இதனால் அங்கு தங்கியிருந்த நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டனர். கப்பல் கொள்கலன்களிலிருந்து தற்காலிகத் தங்குமிடங்களாக மாற்றப்பட்ட கார்டன் பியர் […]

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியான சில நாட்களில் இரண்டு (பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு) தொகுதிகளில் வென்றதன் காரணமாக, திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்தார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியான பரபரப்பு அடங்குவதற்குள், […]

2024ஆம் ஆண்டு தவெக கட்சி தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான ஜோசப் விஜய் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். தனக்கு ஆதரவு தந்த பெண்கள் ,இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பல திட்டங்களை தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார் விஜய். அதில் ஒன்று தான் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். அரசு மருத்துவ மனைகளில் புதிதாகப் […]

இங்கிலாந்தில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவையில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. லண்டன் ஹீத்ரோ, கேட்விக், மான்செஸ்டர், ஸ்டான்ஸ்டெட் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் ஏராளமான விமானங்கள் தாமதமாகின அல்லது ரத்து செய்யப்பட்டன. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவையை வழங்கும் NATS நிறுவனத்தின் விமானச் செயலாக்க அமைப்பில் கோளாறு ஏற்பட்டதே இதற்கு காரணம். இதையடுத்து லண்டன் விமானத் தகவல் மண்டலத்தில் […]

அரசு மருத்துவமனைக்கு தடுப்பூசி போட அழைத்துச் செல்லப்பட்ட 2 வயது பெண் குழந்தை, ஊசி செலுத்திய சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு தவறான தடுப்பூசி செலுத்தப்பட்டதே மரணத்துக்கு காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டியதுடன், மருத்துவமனை வளாகத்தில் திரண்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக அவரது தந்தை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த மருத்துவர் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார். தடுப்பூசி […]

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகரில் பர்னிச்சர் கடை நடத்தி வந்த 53 வயது நபர், வேலைக்கு வந்த கல்லூரி மாணவியை தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக அத்துமீற முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணையில், கடையில் ஏற்கனவே பணியாற்றிய 4 பெண்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி, அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். திங்கள் நகரில் ‘அன்னை வேளாங்கன்னி எண்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் பர்னிச்சர் கடை […]

ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக இந்திய கிரிக்கெட் அணிக்கு வழங்கப்பட்ட தங்குமிட வசதிகள் குறித்து பிசிசிஐ அதிகாரிகளிடையே திருப்தியின்மை நிலவி வந்தது. இந்தியாவைப் போலவே வேறு சில நாடுகளும் இது குறித்து கவலை தெரிவித்தன. இருப்பினும், விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், தங்குமிடம் தொடர்பான குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டதாகவும், தற்போது செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளில் தாங்கள் திருப்தியடைந்துள்ளதாகவும் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் […]

“இன்னும் 4 ஆண்டுகள்தான்?” என்ற கேள்வியை எழுப்பும் வகையில், செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் குறித்த எச்சரிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, AI துறையில் பணியாற்றியவர்களே அதன் அதிவேக வளர்ச்சி குறித்து வெளிப்படையாக கவலை தெரிவிப்பது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. AI பாதுகாப்பு துறையில் பணியாற்றிய Anthropic நிறுவனத்தின் ஆய்வாளர் ஜேக்கப் காக்ஸன் (Jacob Coxon), நிறுவனத்தில் இருந்து திடீரென விலகியதுடன், AI வளர்ச்சியின் தற்போதைய போக்கு குறித்து கடுமையான எச்சரிக்கையையும் […]