தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

கேரளாவில் ஒருவயது பெண் குழந்தையின் உடலுக்குள் ஊசி இருந்தது கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது இந்த ஊசி குழந்தையின் உடலிலேயே விட்டுச் செல்லப்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். கோழிக்கோடு சாத்தமங்கலத்தைச் சேர்ந்த வினீஷ் – அஞ்சு தம்பதியரின் குழந்தைக்கு, கடந்த ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட தீவிர மருத்துவப் பரிசோதனையில் வலது விலா எலும்புப் பகுதியில் ஊசி இருப்பது தெரியவந்தது. […]

வீட்டிலேயே மட்டன் பிரியாணி செய்தாலும், ஹோட்டலில் கிடைக்கும் அதே மணமும் சுவையும் வர வேண்டும் என்பது பலரது ஆசை. ஆனால் அரிசி பதம், மட்டன் வேகும் நிலை, மசாலாவின் அளவு என சில விஷயங்களில் சிறிய தவறு ஏற்பட்டாலே பிரியாணியின் சுவை மாறிவிடும். இதனால் ஹோட்டல் ஸ்டைல் மட்டன் பிரியாணி செய்ய சில முக்கியமான சமையல் நுணுக்கங்களை தெரிந்து வைத்திருப்பது உதவும். முதலில் மட்டனை நன்றாக சுத்தம் செய்து, தயிர், […]

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், தமிழ்நாட்டை சேர்ந்த 8 பொறியியல் கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே உள்ள பனம்பரிக்குன்னு பகுதியில், வெள்ளிக்கிழமை இரவு 11:40 மணியளவில் பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது. குருவாயூரில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கிச் சென்ற கார், தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் அதிவேகமாக […]

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமில் தங்கும் மலையேற்ற வீரர்களால் வெளியாகும் சிறுநீர் மற்றும் எரிபொருள் பயன்பாடு, அங்கிருக்கும் பனிப்பாறைகளை வேகமாக உருக்கி வருவதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. Regional Environmental Change என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வை, நேபாளத்தின் முதன்மை நில அளவையாளரும் புவிசார் விஞ்ஞானியுமான கிம் லால் கெளதம் (Khim Lal Gautam) தலைமையிலான குழுவினர் நடத்தியுள்ளனர். ஆய்வில், உயரமான பகுதியில் […]

40 வயதைக் கடந்த பெண்களுக்கு உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழியாக மட்டும் இல்லாமல், வயதுக்கு ஏற்ப உடலில் ஏற்படும் மாற்றங்களை சமாளிக்க உதவும் முக்கியமான பழக்கமாகவும் மாறுகிறது. வேலை, குழந்தைகள், குடும்பப் பொறுப்புகள் என பரபரப்பாக இயங்கும் பெண்களுக்கு நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வது சிரமமாக இருந்தாலும், தினசரி வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் குறுகிய நேரத்தை ஒதுக்குவது பல்வேறு நன்மைகளை அளிக்கும். 40 வயதுக்குப் பிறகு […]

தலைநகர் டெல்லியில் பெய்த கனமழை காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவில் தண்ணீர் தேங்கியது. இதனால் மும்பை, அகமதாபாத் மற்றும் போர்ட் பிளேர் ஆகிய நகரங்களில் இருந்து டெல்லி வந்தடைய வேண்டிய பல உள்நாட்டு விமானங்கள் கடுமையாக தாமதமாகின. விமான நிலையத்தின் வருகை பகுதி மற்றும் முனையங்களில் தண்ணீர் முழங்கால் அளவிற்கு தேங்கியதால், பயணிகள் தங்கள் உடமைகளை சுமந்து கொண்டு தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய நிலைக்குத் […]

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் சோலார் நிறுவன ஊழியர் ஒருவர் சமையலறை கத்தியால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காளப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகன் பாண்டித்துரை (35), தனியார் சோலார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லாத நிலையில், கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி நள்ளிரவு […]

தவெக ஆதரவு கட்சிகளின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர். இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், கூட்டத்தில் பங்கேற்பது குறித்து கட்சியில் பேசி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். தங்களை […]

இந்து தர்மத்திலும் தமிழ் கலாச்சாரத்திலும் திருமணமான பெண்களின் முதன்மை மங்கள அடையாளமாக திருமாங்கல்யம் போற்றப்படுகிறது. அத்தகைய புனிதமான தாலி மற்றும் தாலி சங்கிலியை அணியும் போது பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய சாஸ்திர நெறிமுறைகள், தம்பதியரின் ஆயுள் பலம் மற்றும் குடும்பப் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாக ஆன்மிக பெரியோர்கள் தெரிவிக்கின்றனர். முதலாவதாக, தங்கத்தில் தாலி சங்கிலி செய்யும் போது அதன் எடையை எப்போதும் 3, 5, 7 போன்ற […]

வேத ஜோதிட சாஸ்திரத்தில் திருமணம் என்பது வெறும் இரு மனங்களின் சங்கமமாக மட்டுமே பார்க்கப்படுவதில்லை; அது ஒரு தனிநபரின் விதியையும், குடும்பத்தின் பொருளாதார நிலையையும் ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கும் திருப்புமுனையாகவும் கருதப்படுகிறது. பலரது வாழ்க்கையில் திருமண பந்தம் ஏற்பட்ட பின்னரே எதிர்பாராத தொழில் வளர்ச்சி, பொருளாதார ஸ்திரத்தன்மை, சமூக அந்தஸ்து மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கதவைத் தட்டுவதை நடைமுறையில் பார்க்க முடிகிறது. ஜோதிட ரீதியாக இதனை “களத்திர பாக்கியம்” அல்லது “மனைவி […]