தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

ஒரு காலத்தில் இந்திய குடும்பங்களில் அதிகம் அறியப்படாத ‘அவகேடோ’ பழம், தற்போது சூப்பர் மார்க்கெட்டுகள், உணவகங்கள் மற்றும் மக்களின் உணவு மேஜைகளில் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. ஆரம்பத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடம்பரப் பழமாகக் கருதப்பட்ட இது, தற்போது இந்தியாவின் ஆரோக்கியமான உணவு முறையின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளதுடன், இந்திய விவசாயிகளாலும் பயிரிடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு […]

காயம் காரணமாக இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா 2026 போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். இதனால், நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய ஈட்டி எறிதல் அணியில் அவருக்குப் பதிலாக யஷ்வீர் சிங் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய தடகளக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற யஷ்வீர் சிங், கடந்த ஜூலை மாதம் கிளாஸ்கோவில் 85.41 மீட்டர் தூரம் வீசி தனது தனிப்பட்ட சிறந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார். […]

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ GSLV-F17 ராக்கெட் மூலம் EOS-05 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி மீண்டும் ஒரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து நள்ளிரவு 2:55 மணியளவில் இந்த ராக்கெட் ஏவப்பட்டது. பலத்த மழைக்கு மத்தியிலும், 51.7 மீட்டர் உயரமும் 420 டன் எடையும் கொண்ட ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட், நள்ளிரவு வானத்தைப் பிளந்துகொண்டு கம்பீரமாக விண்ணை நோக்கிப் […]

துபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசிய கோப்பை T20 போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி 64 பந்துகளில் 124 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற உலக சாதனையை படைத்துள்ளார். முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜின் (10,868 ரன்கள்) சாதனையை முறியடித்து, தனது […]

கிருஷ்ண பரமாத்மாவின் அவதார திருநாளான கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஸ்ரீஜென்மாஷ்டமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணையும் வேளையில் கிருஷ்ணர் அவதரித்தார் என்பது ஐதீகம். வழக்கமாக இந்த இரண்டும் ஒரே நாளில் இணைந்து வருவது அரிது என்றாலும், இந்த ஆண்டு அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் பல மணி நேரம் ஒன்றாக இணைந்து வெள்ளிக்கிழமையில் அமைவது கூடுதல் விஷேசமாக […]

மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களில், எட்டாவது அவதாரமான கிருஷ்ண அவதாரம் நிகழ்ந்த புனித தினமே கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி மற்றும் ஸ்ரீஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் பக்தர்களால் விரதமிருந்து போற்றி வழிபடப்படுகிறது. இத்திருநாளில் நாம் வைக்கும் வழிபாட்டின் மூலமாக, சாட்சாத் பகவான் ஸ்ரீகிருஷ்ணரே நமது இல்லங்களுக்கு நேரில் வருகை தந்து அருள்பாலிப்பதாக ஐதீகம் நிலவுகிறது. குறிப்பாக, மழலைச் செல்வம் இல்லாத தம்பதியினர் இந்நாளில் மனமுருகி விரதமிருந்து கண்ணனை […]

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை, விஷ்ணுவின் அவதார நாயகனான பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதார தினமாக நாடெங்கும் மிகுந்த பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் அதர்மங்கள் தலைதூக்கி, தீய சக்திகளின் ஆதிக்கம் பெருகும் போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டவும் நல்லோரை காக்கவும் தான் யுகம்தோறும் அவதரிப்பதாக பகவத் கீதையில் கண்ணன் அருளிய வாக்கின்படி, தீமைகளை அழித்து நன்மைகளை துளிர்க்கச் செய்த புனித நாளாக இந்நாள் போற்றப்படுகிறது. பக்தர்கள் […]

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களால் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வரும் முன்னணி தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ் அப், தனது பயனர்களின் வசதிக்காக புதிய கட்டணச் சேவை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் இனி தங்கள் அன்றாட அத்தியாவசிய பயன்பாட்டுக் கட்டணங்களை வாட்ஸ்அப் செயலியில் இருந்தே நேரடியாகவும், பாதுகாப்பாகவும் செலுத்தும் வகையில் இந்த அதிரடி மாற்றத்தை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இச்சேவை NPCI கீழ் இயங்கும் அதிகாரப்பூர்வ ‘பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்’ (Bharat […]

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மறைந்த வெங்கடாசலத்தின் குடும்பத்தில் சொத்துத் தகராறு முற்றிய நிலையில், அவரது தம்பியைச் சொந்த அண்ணனே விரட்டிச் சென்று கத்தியால் குத்தி, சிலிண்டரை தலையில் போட்டுப் படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் வெங்கடாஜலத்தின் முதல் மனைவி மகனான ராஜபாண்டி, அதிமுக அம்மா பேரவையின் மாநில இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது […]

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில், 8ம் வகுப்பு மாணவனை சக மாணவர்களே கொடூரமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுமார் 500- மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் இந்தப் பள்ளியில், பாதிக்கப்பட்ட மாணவனை வகுப்பறையிலேயே நிர்வாணப்படுத்தி நிற்க வைத்து, ஸ்கேல் மற்றும் ரப்பர் பேண்டுகளால் பிறப்புறுப்பில் அடித்து தாக்கியுள்ளனர். ஆணுறுப்பில் மிளகாய் பொடியை தூவியும், பபுள்கம்மை ஒட்டியும் […]