தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி சமூக வலைதளங்களில் தரக்குறைவாகப் பேசியதாக எழுந்த புகாரில், பிரபல யூடியூபர்களான பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சைபர் கிரைம் போலீசாருக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான அறிக்கையை அடுத்த நாளே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த […]

உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இதற்காக மாதம் ஒருமுறை கூட்டங்கள் நடத்தப்பட்டு, நீர் இருப்பு மற்றும் மழைப்பொழிவு நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் […]

ஜப்பானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கியூஷு தீவின் குமாமோட்டோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரத்தால் நாடு முழுவதும் பரவலாக நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், கடலோரப் பகுதிகளுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் உடனடியாக சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து குமாமோட்டோ, […]

இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே காகிதத்தினாலான பணத்தாள்களையே நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், நாட்டின் பணப்புழக்க வரலாற்றில் முதன்முறையாகப் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைச் சோதனை முறையில் அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக, அதிக பயன்பாட்டில் இருக்கும் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகள் புழக்கத்திற்கு வரவுள்ளன. ரிசர்வ் வங்கியின் இந்தப் பரிந்துரையை ஏற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, […]

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “மேகதாதுவில் அணை கட்டுவதற்குத் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டிய அவசியமில்லை எனக் நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ராஜ்பூஷன் தெரிவித்த பதில் மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்திற்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிராக அமைந்துள்ள அந்த […]

குழந்தைகள் அடிக்கடி அடம் பிடிக்கிறார்களா? ஒவ்வொரு முறையும் அதை குறும்பு அல்லது பிடிவாதம் என்று நினைத்துவிட வேண்டாம் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சில நேரங்களில் குழந்தைகளின் உணவுப் பழக்கம், தூக்கமின்மை, அதிக திரை பயன்பாடு அல்லது மனஅழுத்தம் போன்ற காரணங்களாலும் அவர்கள் எரிச்சலாகவும், அடிக்கடி கோபப்படுபவர்களாகவும் மாறலாம். எனவே, முதலில் அதன் காரணத்தை கண்டறிவதே முக்கியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். மருத்துவர்களின் விளக்கப்படி, 2 முதல் 8 […]

இன்றைய வாழ்க்கை முறையில் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகளை தேர்வு செய்வது மிகவும் அவசியமாகிவிட்டது. அப்படிப்பட்ட சத்தான உணவுகளில் ஒன்றுதான் பார்லி. குறிப்பாக பார்லி கஞ்சியை அடிக்கடி குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இதில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. பார்லி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவலாம். இதனால் இதய ஆரோக்கியத்தை […]

ஒரு நடிகரின் வெற்றியை ரசிகர்கள் திரையில் மட்டுமே பார்ப்பார்கள். ஆனால் அந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் தியாகங்களையும், குடும்பத்திற்காக அவர் செய்த சமரசங்களையும் நெருங்கியவர்கள் மட்டுமே உணர முடியும். அந்த வகையில், நடிகர் செந்தில் குறித்து அவரது மகன் பகிர்ந்துள்ள நினைவுகள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. 80 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் நடிகர் செந்தில். குறிப்பாக கவுண்டமணியுடன் இணைந்து அவர் […]

இன்றைய காலத்தில் ஸ்பூன், ஃபோர்க் போன்றவற்றைப் பயன்படுத்தி சாப்பிடுவதையே பலர் நாகரிகத்தின் அடையாளமாக கருதுகின்றனர். சில பள்ளிகளிலும் கூட குழந்தைகளை கைகளால் சாப்பிட விடாமல், ஸ்பூன் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. ஆனால் நம் முன்னோர்கள் பல தலைமுறைகளாக கைகளால் உணவு சாப்பிட்டு வந்ததற்கு பின்னால் ஆரோக்கியம் சார்ந்த பல காரணங்கள் இருப்பதாக ஆயுர்வேதமும், சில ஆரோக்கிய நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். சரியான முறையில் கைகளை சுத்தமாக கழுவி உணவு சாப்பிடுவது […]

சுவையான சுவையால் அனைவரையும் கவரும் சீத்தாப்பழம், உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் சத்துமிக்க பழங்களில் ஒன்றாகும். இதில் வைட்டமின்கள், நார்ச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம் உள்ளிட்ட பல முக்கிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. குறிப்பாக செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு ஆதரவாக செயல்படும் இந்தப் பழத்தை சரியான முறையில் சாப்பிட்டால் அதன் முழு நன்மைகளையும் பெற முடியும். சீத்தாப்பழம் இயற்கையாகவே மன அமைதியை மேம்படுத்த உதவும் […]