சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சொந்த ஊருக்குச் செல்லக் காத்திருந்த தொழிலாளியிடம், உல்லாச ஆசை காட்டி வரவழைத்துத் தாக்கி, பணம் மற்றும் செல்போனைப் பறித்துச் சென்ற 3 இளம்பெண்கள் உட்பட 4 பேர் கொண்ட ‘ஹனி டிராப்’ கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த 34 வயது வாலிபர் ஒருவர், சென்னை தரமணியில் உள்ள விடுதியொன்றில் சமையல் கலைஞராகப் பணியாற்றி வருகிறார். விநாயகர் சதுர்த்தி […]
தமிழக அரசுத் துறைகளில் ஊழலை ஒழித்து, நிர்வாகச் சீர்திருத்தங்களை வேகப்படுத்தும் நோக்கில், ஒரே அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக முகாமிட்டுள்ள ஊழியர்களை கண்டறிந்து உடனடியாக பணியிட மாற்றம் செய்ய தவெக அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அரசு அலுவலகங்களில் ஒரே இடத்தில் நீண்ட காலம் ஒரே நபர் பணியாற்றி வரும்போது, நிர்வாகத்தில் மந்தநிலை ஏற்படுவதோடு, பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் தேவையில்லாத நெருக்கம் ஏற்பட்டு முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக அரசு கருதுகிறது. குறிப்பாகக் […]
பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மனைவி செல்வராணி (45). இவர், அரியலூர் காந்தி மார்க்கெட் பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி கொளஞ்சி (46). இவர் திருமணத்திற்கு பெண் பார்க்கும் புரோக்கராக பணியாற்றி வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செல்வராணியிடம் இருந்து கொளஞ்சி ₹1 லட்சம் பணத்தை வட்டிக்கு கடனாகப் பெற்றுள்ளார். ஆனால், குறிப்பிட்ட […]
மாத சம்பளம் கைக்கு வரும் நிலையில் புதிதாக ஒரு கடன் வாங்குவது எளிதான முடிவாகத் தோன்றலாம். புதிய கடனுக்கான EMI மட்டும் குறைவாக இருந்தால் அதை சமாளித்துவிடலாம் என நினைப்பது இயல்புதான். ஆனால் ஏற்கெனவே செலுத்தி வரும் EMIகளுடன் வீட்டு வாடகை, குடும்பச் செலவுகள், காப்பீட்டு பிரீமியம் உள்ளிட்ட மாதாந்திர பொறுப்புகள் சேரும்போது, வருமானத்தில் கடனுக்காக ஒதுக்கப்படும் தொகை அதிகரிக்கலாம். ஒருவருக்கு எவ்வளவு EMI பாதுகாப்பானது என்பதற்கு அனைவருக்கும் பொருந்தக்கூடிய […]
சேலம் மாநகரில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் வகையில் 10 மெகாவாட் திறன் கொண்ட ஆலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வெள்ளக்கல்பட்டி அருகே அரசுக்குச் சொந்தமான 92.49 ஏக்கர் நிலத்தில் திடக்கழிவுகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பு ரூ.291 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றதாக வெளியான செய்திகளை முன்வைத்து, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், கனிமொழியின் இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. எக்ஸ் தளத்தில் […]
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பசியின்றி கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம் அடுத்தகட்ட விரிவாக்கத்தை எட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியலில் புதிய வகை உணவுகளைச் சேர்ப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதில் சிக்கன் பிரியாணியை இடம்பெறச் செய்வது குறித்த பரிசீலனையும் கவனம் பெற்றுள்ளது. மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் […]
கர்நாடக மாநிலம் வணகெரே மாவட்டத்தில் 45 வயது பெண் ஒருவர் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 36 வயது நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டவுன் சேகரப்பா பகுதியைச் சேர்ந்த நாகரத்னா (45), மூன்று குழந்தைகளின் தாய். அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (36) என்பவருடன் அவருக்கு பழக்கம் இருந்துள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கம் […]
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ரூ.2,000க்கு மேல் UPI பணப்பரிவர்த்தனைகளை ஏற்கமாட்டார்கள் என்றும், செப்டம்பர் 23ஆம் தேதி இந்தூரில் “No-UPI Day” கடைபிடிக்கப்படும் என்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் போலியானது மற்றும் தவறானது என Indian Oil Corporation Ltd (IndianOil) தெரிவித்துள்ளது. பெட்ரோல் பங்க் டீலர்களிடம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கான Merchant Discount Rate (MDR) கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கை […]
குழந்தைகளுடன் வெளியில் செல்லும் பெற்றோர்கள் சாலையோரங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஹைதராபாத்தில் சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையை கடக்க முயன்ற 3 வயது சிறுவன் கார் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் வயதைக் கருத்தில் கொண்டு, சாலையோரங்களில் அவர்களை தனியாக விடாமல் கையைப் பிடித்தபடி அழைத்துச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது. ஹைதராபாத்தின் IS சதன் […]

