தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

வீட்டில் வெள்ளை நிற தரை இருந்தால், வீடு சுத்தமாகவும் விசாலமாகவும் இருப்பது போன்ற தோற்றம் கிடைக்கும். ஆனால், அதை முறையாக பராமரிக்காமல் விட்டால் தூசி, காலடித் தடங்கள் மற்றும் பல்வேறு கறைகள் எளிதில் படிந்து தரையின் அழகை பாதிக்கலாம். குறிப்பாக வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால், தரையில் கறைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இதுபோன்ற கறைகளை அகற்றுவதற்காக சந்தையில் கிடைக்கும் ரசாயன கிளீனர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. […]

ஸ்மார்ட்போன் வாங்கி சில காலம் ஆன பிறகு, முன்பைவிட பேட்டரி சார்ஜ் வேகமாக குறைவதை பலரும் கவனிப்பார்கள். இதற்கு பேட்டரி திறன் குறைந்திருப்பது மட்டும் காரணமாக இருக்காது. போனை நாம் பயன்படுத்தும் விதம், செயலிகளுக்கு வழங்கியுள்ள அனுமதிகள் மற்றும் சில அம்சங்கள் தொடர்ந்து இயங்குவது ஆகியவையும் சார்ஜ் விரைவில் குறைவதற்கு காரணமாக இருக்கலாம். குறிப்பாக, நாள் முழுவதும் அதிக நேரம் மொபைல் டேட்டாவை பயன்படுத்துவது, வீடியோ பார்ப்பது, கேமிங் செய்வது […]

அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கான தங்குமிட வசதிகள் குறித்து கடும் அதிருப்தி எழுந்துள்ளது. ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அடிப்படை வசதிகள் மோசமாக உள்ளதாக பிசிசிஐ மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிருப்தி தெரிவித்துள்ளன. இதன் காரணமாக, அங்கு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கு இந்திய ‘பி’ அணியை அனுப்ப பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் செப்டம்பர் 19 முதல் […]

நேபாளம் – திபெத் எல்லை மற்றும் போடேகோசி (Bhotekoshi) நதிப் பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து, நேபாளப் பிரதமரும், அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத ஊதியத்தைப் பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். அமைச்சரவை ஒப்புதல்: வியாழக்கிழமையன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக நேபாள அரசின் செய்தித் தொடர்பாளரும், கல்வி அமைச்சருமான சஸ்மிதா பொகரேல் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் இந்த […]

நேபாளம் மற்றும் திபெத் எல்லையில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 600ஐ நெருங்கிவிட்டது. மேலும் 2,500-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. பேரிடர் நிகழ்ந்தபோது அப்பகுதியில் வேலை செய்வதற்காகவும், மலையேற்றத்திற்காகவும், புனித யாத்திரைக்காகவும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் அங்கு முகாமிட்டிருந்தனர். ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்தவர்களில் சிலர் நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேபாளம் மற்றும் சீனா: நேபாள நாட்டின் […]

நேபாளம் மற்றும் சீனாவில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமையன்று 586 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,400-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. நிலையற்ற தடுப்பு ஏரிகளால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற அபாயத்திற்கு மத்தியிலும், மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். நேபாளத்தின் எட்டு மாவட்டங்களில் 579 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திபெத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் […]

சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், பாக்கெட் பால் விற்பனையை தடுத்து தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை அமைக்குமாறு தனியார் பால் நிறுவனங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மலைப்பிரதேசங்களில் பிளாஸ்டிக் தடையை முழுமையாக அமல்படுத்தக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு, பிளாஸ்டிக் கவர்களில் பால் விநியோகம் செய்வதற்கு மாற்றாக புதிய வழிகளைக் […]

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சீன எல்லைப் பகுதியில் சிக்கியுள்ளனர். அவர்களில் பலர் பாதுகாப்பாக உள்ள நிலையில், 320 பேரை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் வெளியிட்டுள்ள தகவலில், மானசரோவர் புனித யாத்திரைக்காக சென்ற […]

தமிழ்நாட்டில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) பேருந்துகளைத் தவிர்த்து, பிற அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளிலும் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தை முழுமையாக விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சென்னையில் சாதாரண மற்றும் டீலக்ஸ் (சொகுசு) கட்டணப் பேருந்துகள் என மொத்தம் 3,633 பேருந்துகளிலும், வெளி மாவட்டங்களில் இயக்கப்படும் நகர மற்றும் சாதாரண கட்டணப் பேருந்துகள் உட்பட 9,000-க்கும் […]

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில், ஓசூர் புதிய சர்வதேச விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓசூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி ஆவேசமாக பேசினார். அவர் பேசுகையில், “ஓசூரில் புதிய விமான நிலையம் தேவையில்லை என்பது என் தனிப்பட்ட குரல் அல்ல; நிலத்தை இழக்க அஞ்சும் ஓசூர் விவசாயிகளின் ஒட்டுமொத்த குரல். பரந்தூர் […]