சட்டப்பேரவையில் முதலமைச்சருக்கு அளிக்க வேண்டிய மரியாதை மற்றும் சட்டமன்ற மாண்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு மூத்த உறுப்பினர்கள் கற்றுத்தர வேண்டும் என அமைச்சர் ரமேஷ் பேசியது அவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தவெக அமைச்சர் ரஞ்சித் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.எல்.ஏ-வும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அவையின் கண்ணியத்தை உறுப்பினர்கள் அனைவரும் […]
காவிரி ஆணையத்தின் உத்தரவை ஏற்று கர்நாடகா ஏன் தண்ணீர் திறக்கவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காவிரியில் இருந்து தமிழ்நாடிற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத்த தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி, காவிரி நீர் மேலாண்மை […]
முழுமையாக பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், 2வது முறையாக கூடுதலாக பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் பேசி வரும் முதலமைச்சர் விஜய், விவசாயிகளுக்கு துணை நிற்கும் அரசு இருக்கும் நாடு தான் வளமாக இருக்கும். எனவே த.வெ.க அரசு பதவி ஏற்ற 15 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் சுமை குறைக்கப்பட்டது. கடந்த காலங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்கடன் தொகை தாமதமாகவே […]
இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தபோது உதயநிதி என்ன பேசினார்?. போதைப்பொருளுக்கு எதிராக அப்போதைய துணை முதல்வராக இருந்த உதயநிதி என்ன செய்தார் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையின் இன்றைய அமர்வில், கோவையில் மாணவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தை திமுக முன்மொழிந்தது. இந்தத் தீர்மானத்திற்குப் பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகே மாநிலத்தில் […]
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி இடையே நடந்த காரசார விவாதத்திற்கு மத்தியில், அரசு உரிய விளக்கமளிக்கவில்லை என்று கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் கோவை மாணவர் அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். தொடர்ந்து, “100 நாள் சாதனை எனப் பெருமை பேசும் த.வெ.க அரசு, இந்த 100 நாட்களில் […]
2026-27-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் நிதி அமைச்சர் மரிய வில்சன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண்துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனையடுத்து ஆகஸ்ட் 7, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 4 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை […]
பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அசோக்தாம் கோவிலில் இன்று (திங்கள்கிழமை) காலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். புனிதமான ஷ்ராவண மாதத்தின் இறுதி திங்கள்கிழமையை முன்னிட்டு, அசோக்தாம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 6.30 மணி முதல் 6.45 மணிக்குள் அசோக்தாம் ஹால்ட் ரயில் நிலையத்திற்கு இரண்டு ரயில்கள் அடுத்தடுத்து […]
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் திறமை மட்டுமே போதாது. தொடர்ந்து முயற்சி செய்வது, தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்வது, இலக்கில் கவனம் செலுத்துவது போன்ற பழக்கங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. சவால்கள் வந்தவுடன் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து முன்னேறுபவர்களிடம் சில பொதுவான பழக்கங்கள் இருப்பதாக பல்வேறு தனிநபர் மேம்பாட்டு நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 1. இலக்கை தெளிவாக வைத்திருப்பார்கள் “வெற்றி பெற வேண்டும்” என்ற பொதுவான எண்ணத்தை மட்டும் வைத்திருக்காமல், எதை […]
நாள் முழுவதும் வேலை, பயணம் என பிஸியாக இருக்கும் போது பலரும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை மறந்துவிடுகிறார்கள். உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்காமல் போனால், முதலில் தாகம், வாய் வறட்சி போன்ற அறிகுறிகள் தோன்றலாம். தொடர்ந்து தண்ணீர் குறைவாக எடுத்துக்கொண்டால் உடலின் இயல்பான செயல்பாடுகளும் பாதிக்கப்படலாம். உடலில் தண்ணீர் அளவு குறைவதை நீரிழப்பு (Dehydration) என்கிறோம். அதிக வெப்பம், அதிகமாக வியர்ப்பது, உடற்பயிற்சி, வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு […]
‘7 ஹவர்ஸ் டு கோ’ (7 Hours to Go), ‘தி ஃபைனல் எக்சிட்’ (The Final Exit), மற்றும் ‘கோஸ்ட்’ (Ghost) போன்ற பிரபல இந்தி திரைப்படங்களில் நடித்த இளம் நடிகை அனன்யா ராஜ் (27) காலமானார். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உடல் மற்றும் மனரீதியான ஆரோக்கிய பிரச்சினைகளுடன் போராடி வந்த அவர், கடந்த ஜூலை 15 அன்று அதிகாலையில் தூக்கத்திலேயே உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். […]

