மதிய உணவிற்கு எளிமையாகவும், குறைந்த நேரத்திலேயே சுவையான ஒரு குழம்பை செய்ய நினைத்தால், சௌ சௌ வைத்து இந்த பொரிச்ச குழம்பை செய்து பார்க்கலாம். வழக்கமாக சௌ சௌவை சாம்பார் அல்லது பொரியலாக மட்டுமே செய்வவர்கள், இந்த வித்தியாசமான ரெசிபியை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். சூடான சாதம் மட்டுமல்லாமல், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடனும் இந்த குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். இந்த ரெசிபியை செய்வதற்கு தேவையான பொருட்கள்: […]
இன்றைய அவசர வாழ்க்கை முறையில் பெரும்பாலான வீடுகளில் அரிசியை கழுவியவுடன் நேரடியாக குக்கர் அல்லது ரைஸ் குக்கரில் சமைக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. ஆனால், பழைய தலைமுறையினர் அரிசியை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்த பிறகே சமைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இது வெறும் பாரம்பரிய பழக்கம் மட்டுமல்லாமல், உணவின் தரத்தையும் உடல்நலத்தையும் மேம்படுத்த உதவும் ஒரு நடைமுறையாகவும் கருதப்படுகிறது. அரிசியை ஊறவைக்கும் போது அதன் தானியங்களில் இயற்கையாகவே சில மாற்றங்கள் […]
மழைக்காலம் தொடங்கியவுடன் இயற்கை ஆர்வலர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் காட்சிகளில் ஒன்று மயில் தோகையை விரித்து ஆடுவதுதான். பலரும் மழை பெய்யப்போகிறது என்ற மகிழ்ச்சியால் மயில்கள் நடனமாடுகின்றன என்று நினைத்தாலும், உண்மையில் அதற்கு இயற்கை மற்றும் உயிரியல் சார்ந்த பல காரணங்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக பருவமழை தொடங்கும் காலத்தில்தான் மயில்களின் இனப்பெருக்க பருவமும் ஆரம்பமாகிறது. இந்த நேரத்தில் ஆண் மயில்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் அவற்றின் […]
கடுமையான வெயில், காற்று மாசுபாடு மற்றும் தூசி போன்ற காரணங்களால் சருமம் அதன் இயற்கையான பொலிவை இழப்பது மிகவும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக நீண்ட நேரம் வெளியில் இருப்பவர்களுக்கு முகம் கருமையாகத் தோன்றுதல், எண்ணெய் பசை அதிகரித்தல், பருக்கள் வருதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க, பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் சருமத்திற்கு போதுமான பராமரிப்பு அளிப்பது அவசியம். பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களின் சருமம் சற்று தடிமனாகவும், […]
பின்னணி பாடகர்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் இசைக்குயில் எஸ். ஜானகி. பல தசாப்தங்களாக இந்திய திரையிசையில் தனது இனிமையான குரலாலும், அபாரமான பாடும் திறமையாலும் ரசிகர்களை கவர்ந்த அவர், பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி தனித்துவமான சாதனையை படைத்துள்ளார். அவரது இசைப் பயணத்தைப் போலவே, பாடும் முறைகள் மற்றும் சொத்து மதிப்பு குறித்த தகவல்களும் அவ்வப்போது ரசிகர்களிடையே பேசுபொருளாகி வருகின்றன. எஸ். ஜானகி பல மொழிகளில் […]
சென்னை பல்லாவரம் பச்சையப்பன் தெருவில் வாடகைக்கு வீடு விடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறி, 56 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பல்லாவரம் பச்சையப்பன் தெருவில், வாடகைக்கு வீடு தேடி புதிய நபர் ஒருவர் வந்துள்ளார். அப்போது, அருகருகே வசித்து வந்த இரண்டு வீட்டு உரிமையாளர்களும் தங்களது வீட்டை […]
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்த பெண், மூன்றாவது மாடி பால்கனியில் துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தபோது தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் 34 வயதான லட்சுமி. இவர் வழக்கம் போல், இன்று காலை தனது வீட்டின் […]
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து பி.எம்.ஆர் நகரை சேர்ந்தவர் சின்னதுரை. இவருக்கு 39 வயதான புவனேஸ்வரி என்ற மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில், தனது தந்தை வீட்டில் வசித்து வந்த இவருக்கும், இவரது உறவினரான முதனை கிராமம் மேலத்தெருவை சேர்ந்த 39 வயதான செல்வமணி என்பவருக்கும் இடையே கடந்த 2018-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜம்புலிங்கம் என்பவரின் மகனான செல்வமணி, […]
திருச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவனுடன் பெண் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இருந்து திருச்சி நோக்கி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் திருச்சியின் லால்குடி மற்றும் காட்டூர் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் திடீரென அந்த ரெயில் முன்பு பாய்ந்துள்ளனர். […]
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த ஆம்னிப் பேருந்து எதிர்திசையில் வந்த அரசுப் பேருந்தின் மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மதுரை கொட்டாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில், வேகமாக வந்த ஆம்னிப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் எதிர்புறம் பயணிகளை ஏற்றிச் […]

