தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

  • வங்கதேசத்தின் புதிய பிரதமராக பதவியேற்றார் தாரிக் ரஹ்மான்..! யார் இவர்?

    வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்றார்.. தாரிக் ரஹ்மான் தலைமையில், பங்களாதேஷ் தேசிய கட்சி ( Bangladesh Nationalist Party BNP)யைச் சேர்ந்த வெற்றி பெற்ற எம்.பி.க்களும் செவ்வாய்க்கிழமை டாக்காவில் உள்ள தேசிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பதவியேற்றனர். இந்த நிகழ்வு, நாட்டின் அரசியல் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திருப்பமாக பார்க்கப்படுகிறது.

    இந்தப் பதவியேற்பு விழா, பிப்ரவரி 12 அன்று நடைபெற்ற 13-வது பாராளுமன்றத் தேர்தலில் BNP கட்சி பெரும் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து நடைபெற்றது. பங்களாதேஷ் குடியரசுத் தலைவர் முகமது ஷகபுதீன், தாரிக் ரஹ்மான் மற்றும் அவரது ஆரம்ப அமைச்சரவைக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

    பெரும் விழா – 1,200 விருந்தினர்கள் பங்கேற்பு

    தேசிய நாடாளுமன்ற வளாகத்தின் தெற்கு பிளாசா பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில் 1200 விருந்தினர்கள் பங்கேற்றனர்.. BNP-யைச் சேர்ந்த 25 தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் அமைச்சர்களாகவும், மேலும் 24 புதிய எம்.பி.க்கள் மாநில அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

    தேர்தல் முடிவுகள் – BNPக்கு பெரும் பெரும்பான்மை

    13-வது பாராளுமன்றத் தேர்தலில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான BNP, மொத்த 297 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றியது. வலதுசாரி கட்சியான ஜமாத் இ இஸ்லாமி i 68 இடங்களை பெற்றது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை செய்யப்பட்டிருந்தது.

    எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம்

    புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணத்தை தலைமை தேர்தல் ஆணையர் ஏ.எம்.எம். நசீர் உதீன் செய்துவைத்தார். 13-வது நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து 297 எம்.பி.க்களும், முதலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், பின்னர் அமைச்சியமைப்பு சீர்திருத்தக் குழு (Constitutional Reform Council) உறுப்பினர்களாகவும் பதவியேற்றனர் என செயலாளர் அலுவலகம் தெரிவித்தது.

    பிரதமர் தேர்வு நடைமுறை

    BNP கட்சி, நாடாளுமன்றக் கட்டிடத்தில் காலை 11.30 மணிக்கு நாடாளுமன்றக் கட்சி கூட்டத்தை நடத்தி, கட்சி தலைவரை தேர்வு செய்தது.. BNP நிர்வாகக் குழு உறுப்பினர் சலா உதீன் அகமது பேசிய போது “பெரும்பான்மை கட்சியின் தலைவராக, எங்கள் கட்சி தலைவர் தாரிக் ரஹ்மானே பிரதமராக இருப்பார்” என்று கூறியிருந்தார்..

    அமைச்சியமைப்பு விதிகளின்படி, பதவியேற்ற உடனே BNP எம்.பி.க்கள் தங்கள் தலைவரைத் தேர்வு செய்வார்கள். பின்னர் குடியரசுத் தலைவர் அவரை அரசாங்கம் அமைக்க அழைப்பார் என குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரி தெரிவித்தார்.

    இந்தியாவின் பிரதிநிதித்துவம்

    இந்த பதவியேற்பு விழாவில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்றார் அவருடன் இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி, மக்களவைவை செயலாளர் நாயகம் உட்பால் குமார் சிங் Singh ஆகியோரும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    முகமது யூனுஸை மாற்றும் தரீக் ரஹ்மான்

    தாரிக் ரஹ்மான் முதன்முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இடைக்கால அரசின் தலைவராக இருந்த முகமது யூனுஸுக்கு பதில் அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார். யூனுஸின் காலகட்டத்தில், வங்கதேசம் – இந்தியா உறவுகள் கணிசமாக பின்னடைவை சந்தித்தன. ஆகஸ்ட் 2024-ல், பெரும் அரசு எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பிறகு ஆவாமி லீக் ஆட்சி வீழ்ந்ததைத் தொடர்ந்து, யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றார்.

    அரசியல் எதிரிகளுடன் சந்திப்பு – ஒற்றுமை அழைப்பு

    தேர்தல் வெற்றிக்குப் பிறகு, தாரிக் ரஹ்மான் தனது அரசியல் எதிரிகளின் வீடுகளுக்கும் நேரில் சென்று சந்தித்தார். இதில், ஜமாத் இ இஸ்லாமி தலைவர் ஷஃபிகர் ரஹமான் மற்றும் தேசிய சிட்டிசன் கட்சி (NCP) ஒருங்கிணைப்பாளர் நஹீத் இஸ்லாம் ஆகியோர் அடங்குவர். அவர் அவர்களுடன் நட்பான முறையில் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டு கலந்துரையாடினார்.

    “தேசிய ஒற்றுமை அவசியம்” – தாரிக் ரஹ்மான்

    தேர்தலுக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், தாரிக் ரஹ்மான் “தேசிய ஒற்றுமை” மற்றும் “அமைதி” அவசியம் என வலியுறுத்தினார். பிளவுகள் ஜனநாயகத்தை பாதிக்கும் என எச்சரித்த அவர், நாட்டில் பலவீனமான பொருளாதாரம், சிதைந்த நிறுவனங்கள் மற்றும் மோசமடைந்த சட்டம்–ஒழுங்கு நிலைமை உள்ளது என்றும் கூறினார்.

    அரசியல் பின்னணி

    முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மற்றும் பிஎன்பியின் நிறுவனர் மறைந்த ஜனாதிபதி ஜியாவுர் ரஹ்மான் ஆகியோரின் மகன் தான் தாரிக் ரஹ்மான். 17 ஆண்டுகள் லண்டனில் தனியாக வெளிநாட்டு வாழ்க்கை வாழ்ந்த பின்னர், அவர் இரண்டு மாதங்களுக்கு முன் நாடு திரும்பினார். இதுவரை அவர் எந்த பொது பதவியையும் வகிக்காதபோதிலும், அவரது குடும்ப அரசியல் பின்னணி அவருக்கு அரசியல் நுண்ணறிவை வழங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய பொருளாதாரம் மற்றும் நெறிமுறைகளின் தந்தை என்று அழைக்கப்படும் ஆச்சார்ய சாணக்கியரைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இல்லை. அவர் இருபதாம் நூற்றாண்டின் ஞானி மற்றும் மிகவும் கற்றறிந்த மனிதர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். தனது வாழ்நாளில், ஆச்சார்ய சாணக்கியர் பல மனித பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கண்டார். அவற்றில், மனிதகுலத்தின் நலனுக்காக பல முக்கியமான விஷயங்களை அவர் விளக்கினார். ஆச்சார்ய சாணக்கியர் தனது நீதி சாஸ்திரம் என்ற புத்தகத்தில் மனித நடத்தை தொடர்பான […]

3 முறை முதலமைச்சராக இருந்தவரும், ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தலைவராக இருந்தவருமான ஓபிஎஸ் இப்போது அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது தேர்தல் நிலைப்பாட்டையோ அல்லது கூட்டணி தொடர்பான முடிவையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் […]

வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்றார்.. தாரிக் ரஹ்மான் தலைமையில், பங்களாதேஷ் தேசிய கட்சி ( Bangladesh Nationalist Party BNP)யைச் சேர்ந்த வெற்றி பெற்ற எம்.பி.க்களும் செவ்வாய்க்கிழமை டாக்காவில் உள்ள தேசிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பதவியேற்றனர். இந்த நிகழ்வு, நாட்டின் அரசியல் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திருப்பமாக பார்க்கப்படுகிறது. இந்தப் பதவியேற்பு விழா, பிப்ரவரி 12 அன்று நடைபெற்ற 13-வது பாராளுமன்றத் தேர்தலில் […]

தமிழக சட்டமன்ற தேர்தலில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக, எந்த அணியுடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தகவல்களின்படி, தேமுதிக மீண்டும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இரு தரப்பிற்கும் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் மிகவும் ரகசியமாகவும், அதேசமயம் சுமூகமாகவும் முடிந்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரசியல் நகர்வுக்கு அச்சாரமாக அமைந்தது, கோவையில் அண்மையில் […]

அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்புத் துறை நிறுவனம் (BSNL), 2026 ஆம் ஆண்டிற்கான 120 சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி (SET) பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளன, மார்ச் 7 ஆம் தேதி கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலியிட விவரங்கள் மொத்த பதவிகள்: 120 தொலைத்தொடர்புத் துறை: 95 நிதித் துறை: 25 சம்பளம் : ரூ.24,900 – ரூ.50,500 வரை. முக்கிய தகவல் பணியமர்த்தல் நிறுவனம்: […]

ஆரோக்கியம் குறித்த தேடல் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் ஆலோசனைகளை விட, அனுபவம் என்ற பெயரில் பகிரப்படும் சமூக வலைதளக் குறிப்புகளே பலரையும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், “காலையில் ஒரு குவளை வெந்நீர் குடித்தால் நூற்றுக்கணக்கான நோய்கள் ஓடிவிடும்” என்ற தகவல் பரவலாக பேசப்படுகிறது. ஆனால், வெந்நீர் குடிப்பதன் மூலம் உடல் பருமனை அடியோடு குறைத்துவிடலாம் என்பதற்குப் போதுமான அறிவியல் ஆதாரங்கள் எதுவுமில்லை என்று […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர்.. அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் சிலர் திமுகவில் இணைந்தாலும், அதிமுக முன்னாள் […]

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தை சார்ந்து இல்லாமல், பரவலாக்கப்பட்ட தொழில் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது என்பதற்கு இந்த புதிய புள்ளிவிவரங்களே சாட்சி. ஒரு மாநிலத்தின் உண்மையான செழிப்பை அங்குள்ள மக்களின் தலா வருமானமே தீர்மானிக்கிறது. அந்த வகையில், தமிழகத்தின் டாப் 5 பணக்கார மாவட்டங்களின் பட்டியல் பல ஆச்சரியமான தகவல்களை உள்ளடக்கியுள்ளது. இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியாவின் பின்னலாடை தலைநகரான திருப்பூர். ‘டாலர் […]

2000களின் தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தவர் பிரதியுஷா.. அவர் விஜயகாந்துடன் தவசி, முரளி உடன் மனுநீதி ராமராஜனுடன் பொன்னான நேரம், பாரதிராஜாவின் கடல் பூக்கள் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.. நடிகை பிரதியுஷாவும் சித்தார்த் ரெட்ட்டி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.. ஆனால் இவர்களின் காதலுக்கு சித்தார்த் குடும்பம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.. இதனால் கடந்த 2002-ம் ஆண்டு பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து […]

தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் குறித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்குமார் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். இந்த பட்ஜெட் என்பது தமிழக மக்களின் தேவைகளை நிறைவு செய்வதைவிட, ஆளுங்கட்சியின் தற்பெருமைகளை பாடும் அறிக்கையாகவே உள்ளதாக அவர் சாடினார். திமுக அரசின் இந்த இறுதி பட்ஜெட்டில் முதலமைச்சரை பாராட்டு மழையில் நனைய வைத்ததை தவிர, உருப்படியான […]