தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

  • பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த 7 இந்திய Sequel படங்கள்..! ‘துரந்தர் 2’ இந்த சாதனைகளை முறியடிக்குமா?

    பாகுபலி, கேஜிஎஃப் மற்றும் புஷ்பா ஆகிய படங்களில் 2-வது பாகங்கள் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்துள்ளன. இந்த 2-ம் பாக பாடங்கள் மிகப்பெரிய வருவாயை ஈட்டியுள்ளன. சமீபத்தில், துரந்தர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்துள்ளது.

    ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் உருவான இந்த ஸ்பை த்ரில்லர் படம் டிசம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.. இந்த படம் உலகளவில் ரூ.1,305 கோடிக்கு மேல் வசூலித்து, மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது. இந்தியில் மட்டும் ரூ.1,000 கோடியை உள்நாட்டு நிகர வசூலில் தாண்டிய முதல் இந்தியப் படம் என்ற பெருமையையும் இந்த படம் பெற்றது.. துரந்தர் படத்தின் 2-வது பாகம், அடுத்த மாதம் வரவுள்ளது. துரந்தர் 2, முந்தைய சாதனைகளை முறியடிக்குமா? இதுவரை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பிய சீக்வல் (Sequel) அதாவது 2-வது பாக படங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

    கடார் 2

    அனில் சர்மா இயக்கத்தில் சன்னி தியோல் நடித்த ‘கடார் 2’ படம் 2023 இல் வெளியிடப்பட்டது. இதில் அமீஷா படேல், உத்கர்ஷ் சர்மா, சிம்ரத் கவுர், மனிஷா வாத்வா மற்றும் கௌரவ் சோப்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ.691.08 கோடியை வசூலித்தது. இது நாட்டில் அதிக வசூல் செய்த 7வது சீக்வல் படமாகும்.

    2.0

      ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான ‘2.0’ திரைப்படம் நாட்டில் அதிக வசூல் செய்த 6-வது சீக்வல் படமாகும். 2010-ம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக 2.0 உருவானது.. இதில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் நடித்த இந்தப் படம் உலகளவில் ரூ.723 கோடியை வசூலித்தது. ஆனால் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது என்பது கவனிக்கத்தக்கது.

      ஸ்த்ரீ 2

      ஸ்த்ரீ 2 என்பது 2024 இல் வெளியான ஒரு நகைச்சுவை திகில் படம். இதை அமர் கௌசிக் இயக்கியுள்ளார். ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர், பங்கஜ் திரிபாதி, அபிஷேக் பானர்ஜி மற்றும் அபர்சக்தி குரானா ஆகியோர் நடித்த இந்தப் படம் உலகளவில் ரூ.874.58 கோடியை வசூலித்தது. நாட்டில் அதிக வசூல் செய்த சீக்வல் படங்களின் பட்டியலில் இது 5வது இடத்தைப் பிடித்தது.

      காந்தாரா 2

      ‘காந்தாரா: எ லெஜண்ட் அத்தியாயம் 1’.. என்பது 2025 இல் வெளியான ஒரு கன்னட புராண ஆக்‌ஷன் திரைப்படமாகும். இந்த படத்தை ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியிருந்தார்.. ரிஷப்புடன், இந்தப் படத்தில் ஜெயராம், ருக்மணி வசந்த் மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் உலகளவில் ரூ.850-900 கோடிகளை வசூலித்தது. இது நாட்டில் நான்காவது அதிக வசூல் செய்த சீக்குவல் படமாகும். கதை களத்தின் படி காந்தாரா படத்தின் ப்ரீகுவலாக இந்த படம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது..

      கேஜிஎஃப் 2

      கேஜிஎஃப் சேப்டர் 2′ 2022 இல் ஒரு பீரியட் ஆக்‌ஷன் படமாக வெளியானது. இதை பிரசாந்த் நீல் எழுதி இயக்கியுள்ளார். இதில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், அர்ச்சனா ஜோயிஸ், ஷரன் சக்தி, ஈஸ்வரி ராவ், ஜான் கோக்கன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1250 கோடி வசூலித்தது. இந்த படம் கன்னட சினிமாவின் திசையை மாற்றியது. நாட்டில் அதிக வசூல் செய்த சீக்வல் படங்களின் பட்டியலில் இந்த படம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

      புஷ்பா 2

      அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ நாட்டில் அதிக வசூல் செய்த இரண்டாவது சீக்வல் படமாகும். சுகுமார் இயக்கிய இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ஜகபதி பாபு, சுனில் மற்றும் ராவ் ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2024 இல் வெளியான இந்தப் படம் உலகளவில் ரூ. 1642 கோடி வசூலித்துள்ளது.

      பாகுபலி 2

      இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ திரைப்படம் நாட்டில் அதிக வசூல் செய்த சீக்வல் படங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதில் பிரபாஸ், ராணா டக்குபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா பாட்டியா, ரம்யா கிருஷ்ணா, சத்யராஜ், நாசர் மற்றும் சுப்பராஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பீரியட் ஃபேன்டஸி ஆக்ஷன் டிராமாவாக உருவனா இந்த இப்படம் உலகம் முழுவதும் ரூ.1810.60 கோடிகளை வசூலித்துள்ளது. அதிக வசூல் செய்த படமாக இது அமைந்தது..

      Read More : 3 முறை திருமணம் செய்து கொண்ட தென்னிந்திய ஹீரோயின்கள்.. லிஸ்டில் யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க..!

    உலகம்

    இந்திய பொருளாதாரம் மற்றும் நெறிமுறைகளின் தந்தை என்று அழைக்கப்படும் ஆச்சார்ய சாணக்கியர், மனித வாழ்க்கை எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை வழங்கினார். சாணக்கியர் எழுதிய சாணக்கிய நிதி என்ற புத்தகத்தில், ஒரு நபரின் அன்றாட வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு நபரின் இயல்பே அனைத்திற்கும் காரணம் என்று சாணக்கியர் கூறினார். ஒருவர் பணக்காரர் ஆகிறார், பெரும் வெற்றியை அடைகிறார். அவர் எல்லா வகையான மகிழ்ச்சியையும் அனுபவிக்கிறார். […]

    பாகுபலி, கேஜிஎஃப் மற்றும் புஷ்பா ஆகிய படங்களில் 2-வது பாகங்கள் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்துள்ளன. இந்த 2-ம் பாக பாடங்கள் மிகப்பெரிய வருவாயை ஈட்டியுள்ளன. சமீபத்தில், துரந்தர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்துள்ளது. ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் உருவான இந்த ஸ்பை த்ரில்லர் படம் டிசம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.. இந்த படம் உலகளவில் ரூ.1,305 கோடிக்கு மேல் வசூலித்து, […]

    ரயில்வே பயணிகளுக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதுவரை முன்பதிவு செய்யப்படாத மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட் முன்பதிவு மற்றும் பிற சேவைகளை வழங்கி வந்த ரயில்வே யுடிஎஸ் செயலி இனிமேல் நிறுத்தப்படும். இந்த செயலியின் சேவைகள் மார்ச் 1 முதல் நிறுத்தப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக ரயில் ஒன் செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இனிமேல், ரயில் ஒன் செயலி ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே […]

    இந்திய குடிமக்களின் அடையாள சான்றாக திகழும் ஆதார் அட்டை, தற்போது வெறும் முகவரிச் சான்றாக மட்டுமல்லாமல், எளிய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு துருப்புச் சீட்டாகவும் உள்ளது. குறிப்பாக, சிறு தொழில் செய்யும் வியாபாரிகளுக்கு, பிணையம் ஏதுமின்றி 50,000 ரூபாய் வரை கடன் பெறும் வசதி ஆதார் அட்டை மூலம் சாத்தியமாகிறது. மத்திய அரசின் இந்தச் சிறப்பான நிதி உதவித் திட்டம் குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்தில் […]

    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இன்று உலகத்தையே தனது விரல் நுனியில் சுழல வைத்து வருகிறது. மருத்துவம் முதல் விண்வெளி ஆய்வு வரை என அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஏஐ, சமூக ஊடகங்களில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று நாம் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற தளங்களை ஒருமுறை மேய்ந்தாலே, கண்களைக் கவரும் ஏஐ வீடியோக்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. ஆனால், இந்த ஆச்சரியத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் […]

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.. இருப்பினும் தவெகவினர் சிலரின் செயல்களால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.. திரையரங்குகளுக்கு கொடியை கொண்டு செல்வது, பொது இடங்களில் விசில் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பழனி […]

    பிரதமர் நரேந்திர மோடியின் உலகளாவிய பயணங்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள பொருளாதாரச் செலவினங்கள் குறித்த விரிவான புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சர்வதேச உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தக ஒப்பந்தங்களை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் இத்தகைய பயணங்களுக்கு, கடந்த 2021 முதல் 2025 வரையிலான 4 ஆண்டுகளில் மட்டும் இந்திய அரசு சுமார் 462.58 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. அண்மையில் தனது இரண்டு நாள் மலேசிய பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நாடு […]

    திரையுலகில் 2-வது திருமணம், 3-வது திருமணம் என்பதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயம்.. அந்த வகையில் சில தென்னிந்திய கதாநாயகிகள் தனிப்பட்ட காரணங்களுக்காக மூன்று முறை திருமணம் செய்து கொண்டனர். இந்த நடிகைகளின் திரை வாழ்க்கை நன்றாக இருந்தபோதிலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்தனர். அந்த கதாநாயகிகள் யார் யார் என்று பார்க்கலாம்.. நடிகை வனிதா விஜயகுமார் வனிதா தமிழ் நடிகர் விஜயகுமாரின் மகள். இவர் விஜய்யின் […]

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பருவமழை போன்றதொரு சூழல் மீண்டும் உருவாக தொடங்கியுள்ள நிலையில், வானிலை ஆய்வு மையம் தற்போது மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளது. பிப்ரவரி மாதத்தின் தளர்வான காலநிலைக்கு இடையே, வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தமிழகத்தின் மழை நிலவரத்தை மாற்றியமைக்க உள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) சமீபத்திய அறிவிப்பின்படி, வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு […]

    ஜோதிடத்தில், செவ்வாய் ஒன்பது கிரகங்களின் ‘தளபதி’. செவ்வாய் சக்தி, தைரியம் மற்றும் செயல்திறனைக் குறிக்கிறது. தைரியம், வீரம், கோபம், பிடிவாதம் மற்றும் தலைமைத்துவ குணங்கள் செவ்வாய் கிரகத்தால் ஏற்படுகின்றன. இது நிலம் (ரியல் எஸ்டேட்), அறுவை சிகிச்சை, பொறியியல், இராணுவம் மற்றும் காவல்துறை ஆகிய துறைகளுக்கு பொறுப்பாகும். செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகத்தின் அதிபதி. இது மகரத்தில் அதன் உயர்ந்த நிலையையும் கடகத்தில் அதன் மிகக் குறைந்த நிலையையும் அடைகிறது. […]