தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

  • விடாமல் அடிக்கும் இஸ்ரேல்.. ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சரும் கொலை.. பதவியேற்ற 2 நாட்களில் அதிர்ச்சி..!

    அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு முழுவதும் போர் தீவிரமடைந்துள்ளது. சமீப ஆண்டுகளில் இதுவே மிகக் கடுமையான மோதலாக கருதப்படுகிறது. அமெரிக்கா–இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் இடையே நேரடி மோதல் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா ஈரானின் அரசாங்க மற்றும் ராணுவ இலக்குகளை தாக்கியுள்ளன. இதற்கு பதிலடியாக, ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதால், இந்த மோதல் ஒரு பிராந்தியப் போராக மாறி உள்ளது..

    சனிக்கிழமை தொடங்கிய இந்தப் போரில் ஈரானில் இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.. இதுவரை 176 குழந்தைகள் உட்பட 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் 900-க்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குறைந்தது 85 பேர் உயிரிழந்ததாக அந்த அமைப்பு கூறியுள்ளது; மேலும் நூற்றுக்கணக்கான மரணங்கள் தொடர்பான தகவல்களை அது சரிபார்த்து வருகிறது.

    இதனிடையே, ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்சாதே கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, புதிய பாதுகாப்பு அமைச்சர் சையத் மஜித் எப் அல்-ரேசா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், புதிய அமைச்சரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது..

    சனிக்கிழமை நடந்த தாக்குதல்களில் நசீர்சாதே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் இருவரும் கொல்லப்பட்ட நிலையில் தற்போது ஈரானின் புதிய அமைச்சரும் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் கொலை

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கையை தொடங்கியதன் பின்னணியில், ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல்கள், கடந்த பல தசாப்தங்களில் நடந்த மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றாகக் கூறப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள இராணுவ மற்றும் முக்கியமான மூலோபாய இடங்கள் குறிவைக்கப்பட்டன. ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி அலுவலகங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளும் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காமெனியின் மரணம் ஈரான் அரசு ஊடகங்களாலும், வெளிநாட்டு ஊடகங்களாலும் உறுதி செய்யப்பட்டது..

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’ (Operation Epic Fury) என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, ஈரானின் அணு மற்றும் ஏவுகணை திட்டங்களால் உருவாகும் உடனடி அச்சுறுத்தல்களை தடுக்கவே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

    தாக்குதல் ஏன் நடந்தது?

    அமெரிக்காவின் சிறப்பு தூதர் Steve Witkoff உள்ளிட்ட அதிகாரிகள் கூறுகையில், ஈரானுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததற்குக் காரணம், அணு எரிபொருள் செறிவூட்டுவது தங்களின் “மாற்ற முடியாத உரிமை” என்று ஈரான் வலியுறுத்தியதே என தெரிவித்தனர். ஈரான் சுமார் 60% செறிவூட்டப்பட்ட 460 கிலோ கிராம் யூரேனியத்தை வைத்திருப்பதாகவும், அதனை பயன்படுத்தி சுமார் 11 அணு குண்டுகள் உருவாக்க முடியும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்…

    இதற்கு பதிலாக, தங்களின் அணு நடவடிக்கைகள் முழுவதும் அமைதியானவை என ஈரான் மறுத்து, சர்வதேச கவலைகளை ஏற்கவில்லை.

    அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் இஸ்ரேல் மீது, வளைகுடா பகுதிகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது, மேலும் பொதுமக்கள் பகுதிகளிலும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இதனால், முழு மத்திய கிழக்கு பகுதியில் பெரிய அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

    இந்த மோதல் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தையும் பாதித்துள்ளது. தினமும் சுமார் 2 கோடி பீப்பாய் எண்ணெய் கடந்து செல்லும் முக்கிய வழியான ஹார்முஸ் நீரிணையில் ஈரான் எடுத்த நடவடிக்கைகள், உலகம் முழுவதும் எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார அதிர்வுகளை ஏற்படுத்தும் என்ற கவலையை அதிகரித்துள்ளது..

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் மணி பிளாண்ட் வைத்திருப்பது மிகவும் நல்லது. யாருடைய வீட்டில் பணச்செடி இருக்கிறதோ அவர்கள் நிதி ரீதியாகவும், ஆரோக்கியமாகவும், தொழில் ரீதியாகவும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இருப்பினும், ஒருவரின் வீட்டில் மணி பிளாண்ட் இருந்தால், அந்த செடியின் அருகில் இந்த பொருளை வைத்திருப்பது நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவது மட்டுமல்லாமல் செல்வத்தையும் அதிகரிக்கும். எனவே இதைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம். வீட்டில் மணிபிளாண்ட் வைத்திருப்பது அனைத்து வகையான […]

திரையுலகில் பல உயர்மட்ட வழக்குகளை கையாண்ட ஒரு தனியார் துப்பறிவாளர் தன்யா புரி. இவர் தற்போது, ஒரு முன்னணி பாலிவுட் நடிகரைச் சேர்ந்த திருமணத்தை மீறிய விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த நடிகரின் மனைவியின் மேலாளர், தனது கணவரின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க தன்னை அணுகியதாகவும், விசாரணையின் போது அந்த நடிகர் பல இளம் நடிகைகளுடன் உறவுகளில் இருந்தது தெரிய வந்ததாகவும் அவர் தெரிவித்தார். துப்பறிவாளர் தன்யா புரி, […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 குறைந்துள்ளது.. அதன்படி இன்று […]

அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு முழுவதும் போர் தீவிரமடைந்துள்ளது. சமீப ஆண்டுகளில் இதுவே மிகக் கடுமையான மோதலாக கருதப்படுகிறது. அமெரிக்கா–இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் இடையே நேரடி மோதல் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா ஈரானின் அரசாங்க மற்றும் ராணுவ இலக்குகளை தாக்கியுள்ளன. இதற்கு பதிலடியாக, ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதால், […]

இந்த மாதம் (மார்ச் 2026) குறைந்தது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் சாதகமாக இருக்கும் சில ராசிக்காரர்கள் உள்ளனர். மார்ச் மாதம் முழுவதும் அவர்களுக்கு செல்வ யோகங்கள் மற்றும் பிற அதிர்ஷ்ட யோகங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.. ரிஷபம், மிதுனம், துலாம், தனுசு மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கு நடக்கும் அனைத்தும் தங்கமாக மாறும். இந்த ராசிகளில் பிறந்த ஒரு சாதாரண நபர் கூட செல்வந்தராகும் வாய்ப்பு உள்ளது. நேர்மறையான அணுகுமுறை […]

பல்வேறு கால அளவுகளைக் கொண்ட நிலையான வைப்புத்தொகை (FD) திட்டங்களுக்கு பாங்க் ஆஃப் பரோடா தனது வாடிக்கையாளர்களுக்கு 3.50% முதல் 7.05% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த பொதுத்துறை வங்கியில் குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு நிலையான வைப்புத்தொகைகளைத் திறக்கலாம். பாதுகாப்பான முதலீடு மற்றும் உத்தரவாதமான வருமானத்தை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சரியான தேர்வாகும். 5 ஆண்டு நிலையான வைப்புத்தொகை […]

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா கமேனி கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த நிலையில் அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. இஸ்ரேல் பல ஆண்டுகளாக ஈரானின் போக்குவரத்து கேமரா வலையமைப்பை ஹேக் செய்து, உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க மொபைல் போன் […]

ஈரானில் உள்ள நடன்ஸ் அணு நிலையத்தில் கட்டமைப்பு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது சமீபத்திய செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேதம், அந்த அணு நிலையத்தின் நுழைவுப் பகுதியில் உள்ள கட்டடங்களை பாதித்துள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) தெரிவித்துள்ளது. அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், கதிர்வீச்சு கசிவு எதுவும் இல்லை என்றும், முக்கியமான நிலத்தடியில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் நிலையத்திற்கு கூடுதல் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. […]

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எப்படி எதிரி நாடுகளின் இலக்காக மாறினார்? அதிநவீன பாதுகாப்பு இருந்தபோதிலும் இஸ்ரேலிய ஏவுகணைகள் அவரை எவ்வாறு கண்காணித்தன? இந்தக் கேள்விகளுக்கு இப்போது பரபரப்பான பதில்கள் கிடைத்து வருகின்றன. கமேனியின் குடியிருப்பு வளாகம் முதல் அவர் பயன்படுத்தும் தகவல் தொடர்பு அமைப்புகள் வரை அனைத்தும் பல ஆண்டுகளாக இஸ்ரேலிய கண்காணிப்பின் நிழலில் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.. இஸ்ரேலிய உளவுத்துறை நீண்ட காலத்திற்கு […]

நவீன யுகத்தில் மாறிவரும் வாழ்க்கை முறையால் வைட்டமின் டி குறைபாடு நமது ஆரோக்கியத்தை பாதிக்கும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாக மாறியுள்ளது. முன்னதாக, எலும்பு ஆரோக்கியத்திற்கு மட்டுமே வைட்டமின் டி தேவை என்று நம்பப்பட்டது, ஆனால் சமீபத்திய ஆராய்ச்சி மற்றும் மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, இது உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியத்தையும் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் உடலில் வைட்டமின் டி போதுமான அளவு இருக்கும்போது, ​​அது ஒரு […]