தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

பொதுவாக தமிழ்நாட்டில் காலை அல்லது இரவு உணவு என்றாலே முதலில் நினைவிற்கு வருவது இட்லி, தோசை தான். இதில் இட்லி சிலருக்கு அதிகம் விருப்பமில்லை என்றும், உடல்நிலை சரியில்லாத போது மட்டும் சாப்பிடும் உணவாகவே பலர் கருதுகிறார்கள். அதனால் பெரும்பாலான வீடுகளில் தோசை தான் அதிகமாக தயாரிக்கப்படுகிறது. தோசை பிடிக்காதவர்கள் மிகவும் குறைவு என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பிரபலமான உணவாக இது உள்ளது. ஆனால், தோசையில் அதிகளவில் ஊட்டச்சத்து […]

பொதுவாக, நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் முதலில் நினைவிற்கு வருவது பழங்கள் தான். பழங்கள் உடல்நலத்தை பாதுகாக்கவும், தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், சில நேரங்களில் பழங்களின் விலை காரணமாக அவற்றை தொடர்ந்து வாங்கி சாப்பிட முடியாத சூழல் பலருக்கு ஏற்படுகிறது. இதனால் சிலர் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டும் சாப்பிட்டு பிறகு நிறுத்திவிடுகின்றனர். இருப்பினும், அதிக விலை […]

இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பைவிட இயந்திரங்களின் உதவியோடு அதிகமாக வாழும் நிலை உருவாகியுள்ளது. அந்த அளவுக்கு தொழில்நுட்ப சாதனங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றில்  வாஷிங் மெஷின் ஒவ்வொரு வீட்டிலும் அத்தியாவசிய சாதனமாக மாறியுள்ளது. பலரும் அவசரமாக இருக்கும் போது வீட்டிலுள்ள அனைத்து துணிகளையும் ஒன்றாக சேர்த்து வாஷிங் மெஷினில் போட்டு துவைப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் அனைத்து வகை துணிகளும் மெஷினில் துவைக்க ஏற்றவை அல்ல […]

தவெக தலைமையிலான கூட்டணி உருவானால் அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) இடம்பெறும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதேசமயம், திமுக கூட்டணியில் இருந்து விலகியதாக தாம் அறிவிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். சென்னையில் நேற்று நடைபெற்ற விசிக விருது வழங்கும் விழாவில் பேசிய திருமாவளவன், தனது அரசியல் நிலைப்பாட்டிற்கென எப்போதும் ஒரு நேர்மை இருக்கிறது. வெறும் பதவி, புகழ் அல்லது தனிப்பட்ட பலன்களுக்காக அரசியல் முடிவுகளை […]

காய்கறிகள் என்றாலே பலருக்கு பெரிதாக விருப்பம் இருக்காது. ஆனால் கிழங்கு வகைகள் என்றால் பலரும் உடனே விரும்பி சாப்பிடுவார்கள். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொதுவாக காணப்படும் ஒரு பழக்கமாகும். அதே நேரத்தில், கிழங்கு வகைகளை அதிகமாக உட்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற பயமும் பலரிடம் உள்ளது. மேலும், இது உடல் நலத்திற்கு நல்லதல்ல என்ற தவறான கருத்தும் சிலரிடையே நிலவுகிறது. ஆனால் உண்மையில், சில குறிப்பிட்ட […]

நாளை காலை நீங்கள் எழுந்து பார்த்தால் உங்கள் மொபைலில் இன்டர்நெட் இல்லாமல் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். உங்கள் மெசேஜ்கள் அனுப்பப்படாது, பிடித்த ஆப்கள் திறக்காது, ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் செயல்படாது, அலுவலக மின்னஞ்சல்களும் நின்றுவிடும். முதலில் இது உங்கள் Wi-Fi பிரச்சனை என்று தோன்றலாம். ஆனால் விரைவில் இது எங்கும் நடப்பதை நீங்கள் உணருவீர்கள். உலகமே இணையம் இல்லாமல் முடங்கியுள்ளது. இது ஒரு திரைப்படக் கதை போல தோன்றினாலும், ஒரு […]

ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்தவர் 25 வயதான அங்கித். இவருக்கும் 22 வயதான ப்ரீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் முடிந்துள்ளது. ஆனால் அங்கித், ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான ரஜினி தேவி என்ற பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், தனது பெற்றோரின் கட்டாயத்தால் ப்ரீதாவை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த கடந்த மே மாதம் 21 அன்று ப்ரீதா […]

குழந்தை வளர்ப்பு என்பது எளிதான காரியம் அல்ல. முன்பெல்லாம் குடும்பத்தில் பெரியவர்கள் இணைந்து வசித்ததால், பெற்றோர் வேலைக்குச் சென்றாலும் குழந்தைகளை கவனிக்கவும், அவர்களுடன் உரையாடவும் வீட்டில் பெரியவர்களின் ஆதரவு இருந்தது. ஆனால் தற்போதைய காலத்தில் பல தம்பதிகள் பெற்றோர்களுடன் இணைந்து வாழ்வதை விரும்பாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் கணவன், மனைவி மற்றும் குழந்தை மட்டுமே உள்ள சிறிய குடும்ப அமைப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குழந்தைகளை சரியாக கவனிக்க முடியாமல் […]

திருமணம் முடிந்த பிறகு விவாகரத்து என்பது தற்போது சாதாரணமான ஒன்றாக மாறி வருகிறது. “வேண்டுமென்றால் வைத்துக்கொள், இல்லை என்றால் கொடுத்துவிடு” என்ற அளவிற்கு அது ஒரு எளிதான முடிவாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக, சகிப்புத்தன்மை குறைவாக இருப்பதே என்று பல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிறிய கருத்து வேறுபாடுகளைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாத நிலை, தம்பதியரை விவாகரத்து என்ற முடிவுக்கு தள்ளுகிறது. இதனால் அவர்களின் வாழ்க்கை மட்டுமல்லாமல், அவர்களை […]

சமீப காலமாக திருமணத்திற்கு புறம்பான உறவுகள் தொடர்பான குற்றச்சம்பவங்கள் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. இத்தகைய உறவுகள் காரணமாக குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள், வன்முறைச் சம்பவங்கள், உயிரிழப்புகள் போன்ற துயரமான நிகழ்வுகள் அவ்வப்போது பதிவாகி வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் சமூகத்தின் நலன் குறித்த கவலையை அதிகரித்துள்ளன. அந்த வகையில், தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேசம் மாநிலம், […]