தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

காதலித்து வந்த இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த நிலையில், தற்போது சாதியை காரணமாகக் கூறி திருமணத்திற்கு மறுப்பதாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பல இடங்களுக்கு தன்னை அழைத்துச் சென்று நெருக்கமாக பழகிவிட்டு தற்போது தன்னை சந்திப்பதையும் தவிர்ப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளம்பெண் தனது குடும்பத்தினருடன் சென்று மனு அளித்த சம்பவம் பரபரப்பை […]

தமிழக அரசியலில் முதல்வர் விஜய்க்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. சட்டப்பேரவையில் விஜய் பேசிய விவகாரத்துக்கு பதிலளித்த ஸ்டாலின், அவசரநிலை காலத்தில் தான் கைது செய்யப்பட்ட பின்னணி குறித்து விரிவாக பதிவிட்டதுடன், தனது தாடையை சுட்டிக்காட்டிய விஜய்யின் சைகைக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அவசரநிலை காலத்தில் தனது கைது குறித்து விஜய் குறிப்பிட்டது சரிதான் என ஸ்டாலின் குறிப்பிட்டார். ஆனால், […]

தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்கான முயற்சியாக, தமிழக முதல்வர் விஜய் லண்டனுக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தின் தொழில் வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து பயணிகள் விமானம் மூலம் முதலில் துபாய்க்கு சென்ற முதல்வர் விஜய், அங்கிருந்து லண்டனுக்கு புறப்பட்டுள்ளார். இந்தப் பயணத்தில் தனி விமானத்தை பயன்படுத்தாமல், வழக்கமான பயணிகள் விமானத்திலேயே […]

காணாமல் போன இரு மகன்களை மீட்பதற்காக பீகாரைச் சேர்ந்த தம்பதி எடுத்த முடிவு தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மகன்களைத் தேடும் பணியில் காவல்துறையுடன் இணைந்து முயற்சி மேற்கொண்ட அவர்கள், தாங்களும் பிச்சைக்காரர்களைப் போல வேடமிட்டு பல மாநிலங்களில் சுற்றித் தேடியுள்ளனர். இறுதியில் இரு மகன்களையும் தனித்தனியாக கண்டுபிடித்து மீட்டுள்ளனர். குஜராத் மாநிலம் முந்த்ரா பகுதியில் வசித்து வந்த அந்தத் தம்பதியின் 14 வயது மகன் ராகுல், 11 வயது […]

செங்கோட்டை தாக்குதல் தொடர்பான விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதி ஜசீர் பிலால் வானி, ராக்கெட் மற்றும் வெடிகுண்டு சாதனங்களை உருவாக்குவது குறித்து YouTube மற்றும் ChatGPT மூலம் தகவல்களைத் தேடியதாக தேசிய புலனாய்வு முகமை (NIA) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் பயங்கரவாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ராக்கெட் அல்லது வெடிகுண்டு சாதனங்களை உருவாக்குவது தொடர்பாக ஆய்வு செய்த சம்பவம் […]

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் மற்றும் யஷ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்டமான புராணத் திரைப்படமான ‘ராமாயணம்: பாகம் 1’ (Ramayana: Part 1) குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. உலகளாவிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும், வெளிநாட்டு ரசிகர்களுக்கு ஒரு நாள் முன்பாகவே இப்படம் திரைக்கு வரவுள்ளது. ஆஸ்திரேலியாவில் முன்கூட்டியே ரிலீஸ்: தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா அறிவித்தபடி, இப்படம் இந்தியாவில் நவம்பர் 8-ம் தேதியும், உலகின் பிற […]

டெல்லியில் நாளை (செப்டம்பர் 11) முதல் 13 வரை நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி, தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்காக டெல்லி முழுவதுமே ஒரு பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. துக்ளக் ரோடு காவல் நிலையத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு அறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. டெல்லி மாவட்டத்தின் முக்கிய சாலைகள், வெளிநாட்டு விருந்தினர்கள் தங்கும் தாஜ் மான் சிங் […]

டெல்லி பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டிற்காகவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வருகைக்காகவும் இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் தளவாட ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், புதிதாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் முதல் முறையாக வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளன. செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 5:30 மணியளவில், ரஷ்யாவின் சக்திவாய்ந்த IL-76 […]

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தவெக அறிவித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அதி​முக எம்​எல்​ஏ-க்​களாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மதுராந்தகம் மரகதம் குமர​வேல், தாராபுரம் சத்​தி​ய​பா​மா, பெருந்​துறை ஜெயக்​கு​மார், அம்​பாச​முத்​திரம் […]

வரவிருக்கும் 2026 இடைத் தேர்தலில் குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றினால், அமெரிக்காவில் உள்ள 18 வயது நிரம்பிய ஒவ்வொருவருக்கும் $5,000 ரொக்க பணப் பரிசு (சுமார் ரூ.4.76 லட்சம்) வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி வாக்குறுதியளித்துள்ளார். டெக்சாஸ் மாநிலம் டல்லாஸில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் இடைக்கால மாநாட்டில் புதன்கிழமை உரையாற்றிய டிரம்ப், தனது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் மிகச் சிறப்பாகச் செயல்படுவதால் […]