கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு முக்கிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. காலாவதியான பழைய மென்பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவது, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்குப் பெரும் ஆபத்தாக முடியும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது வெளியாகி வரும் தகவல்களின்படி, ஆண்ட்ராய்டு 13 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளில் இயங்கும் ஸ்மார்ட்போன்கள் சைபர் குற்றவாளிகளின் நேரடிப் பார்வையில் உள்ளன. உலகம் முழுவதும் சுமார் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்த்போன்கள் போதிய […]
இன்றைய அவசர உலகில், மீந்துபோன உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து, தேவைப்படும்போது மீண்டும் சூடுபடுத்தி உண்பது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. ஆனால், சூடுபடுத்துவதுதானே என்று நாம் சாதாரணமாக நினைக்கும் இந்த செயல், சில குறிப்பிட்ட உணவுகளைப் பொறுத்தவரை மெதுவான நஞ்சாக மாறக்கூடும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எந்தெந்த உணவுகளை மறுமுறை சூடுபடுத்தக் கூடாது, அதன் பின்னணியில் உள்ள அறிவியல் அபாயங்கள் என்ன என்பது குறித்து இங்கே விரிவாகப் பார்ப்போம். […]
நவீன காலத்தின் வேகமான ஓட்டத்தில், நமது சமையலறைகளில் புகுந்துள்ள மைக்ரோவேவ் அவன் மற்றும் எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்கள் வேலையை எளிதாக்கி இருக்கலாம். ஆனால், இந்த அவசர கதியில் நாம் மறந்துபோன ஒரு மிகச்சிறிய விஷயம் ‘அரிசியை ஊறவைப்பது’ நமது ஆரோக்கியத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை. அரிசியைக் கழுவி அப்படியே அடுப்பில் ஏற்றுவது நேரத்தை சேமிக்கலாம், ஆனால் அது நீண்ட கால நோக்கில் உடலுக்குப் […]
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் செயல்பாடுகள் நாளுக்கு நாள் வேகம் எடுத்து வரும் நிலையில், சேலம் – கோவை பிரதான சாலையில் அமைந்துள்ள மகுடஞ்சாவடியில் அக்கட்சியின் முக்கியப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 25 ஏக்கர் பரப்பளவிலான பிரம்மாண்ட மைதானத்தில் முன்னேற்பாட்டு பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆனால், பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, இக்கூட்டத்திற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் காவல்துறை மிக கடுமையான […]
சென்னை நீலாங்கரை கணேஷ் நகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு (40) என்பவர், ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறார். அவரிடம் சுமார் 40-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் சிலம்பம் பயின்று வருகின்றனர். தைப்பூச திருவிழாவையொட்டி ஈஞ்சம்பாக்கம் விநாயகர் கோயிலில் திருநாவுக்கரசு தலைமையில் சிலம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து 10-ஆம் வகுப்பு பயிலும் 15 வயது மாணவி மட்டும் பேருந்துக்காக தனியாக காத்திருந்துள்ளார். இதைப் […]
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான (EV) மினுமினுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே தற்போது விலைப்போர் உச்சத்தை எட்டியுள்ளது. டெஸ்லா மற்றும் வின்ஃபாஸ்ட் போன்ற சர்வதேச ஜாம்பவான்கள் இந்திய சந்தையில் கால்பதித்துள்ள நிலையில், தனது சந்தைத் தரத்தைத் தக்கவைத்துக்கொள்ள உள்நாட்டு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அதிரடியான விலை குறைப்பை அறிவித்துள்ளது. இந்த பிப்ரவரி மாதம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் இந்தச் சிறப்புத் தள்ளுபடி திட்டத்தின் […]
மேற்கு வங்காளத்தின் புருலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ‘பெகுன்கோடர்’ (Begunkodor) ரயில் நிலையம், இந்திய ரயில்வே வரலாற்றிலேயே மிகவும் மர்மமான மற்றும் விசித்திரமான ஒரு இடமாகப் பார்க்கப்படுகிறது. சுமார் 42 ஆண்டுகள் ‘பேய்களின் நடமாட்டம்’ இருப்பதாகக் கூறப்பட்டு மூடப்பட்டிருந்த இந்த நிலையம், இன்றும் பல அமானுஷ்ய கதைகளை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது. தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தின் அத்ரா – போஜுதி ரயில் பாதையில் அமைந்துள்ள இந்த நிலையம், 1960-களின் தொடக்கத்தில் சாதாரணமாகவே […]
தமிழகத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் பணியாளர்கள் நாளை (பிப்ரவரி 9, திங்கட்கிழமை) போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, சுமார் 3 மணி நேரம் மூடப்படும் என தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பாக, கடந்த 5 நாட்களாக […]
தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் முதன்முதலாக எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற விவாதம் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. பல்வேறு தொகுதிகளின் பெயர்கள் அடிபட்டாலும், விக்கிரவாண்டி தொகுதியே அவரது முதல் தேர்வாக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விக்கிரவாண்டியை தேர்வு செய்வது ஏன்..? தமிழக வெற்றிக் கழகத்தின் வரலாற்றில் நீங்காத இடம்பிடித்த வி.சாலை மாநாடு நடைபெற்ற இடமே விக்கிரவாண்டி என்பதுதான் இதற்கு […]
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையே வாக்குறுதிப் போர் உச்சத்தை எட்டியுள்ளது. வாக்காளர்களை கவரும் வகையில் இரு தரப்பிலிருந்தும் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது தேர்தல் பிரச்சாரங்களில் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை முன்வைத்து வருகிறார். குறிப்பாக, மாணவர்கள் நீண்டகாலமாக சுமந்து வரும் கல்விக்கடன் சுமையை குறைக்கும் வகையில், […]

