தேங்காய் என்பது நமது அன்றாட உணவில் முக்கிய இடம் வகிக்கும் இயற்கை உணவுப் பொருளாகும். சமையலில் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்கும் சருமத்திற்கும் பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியதாகவும் கருதப்படுகிறது. மேலும், தலைமுடி பராமரிப்பிலும் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்கள் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தேங்காயில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அதை அளவோடு உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு தேவையான […]
பலரும் படுக்கை விரிப்புகள் அழுக்காகத் தெரிந்த பிறகுதான் அவற்றை துவைப்பது வழக்கம். ஆனால், சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி, வெளிப்படையாக சுத்தமாகத் தெரிந்தாலும், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் போர்வைகளில் தினமும் வியர்வை, உடலிலிருந்து உதிரும் சருமத் துகள்கள், உடல் எண்ணெய், தூசி மற்றும் நுண்ணுயிரிகள் படிந்துகொண்டே இருக்கும். இதனால் அவற்றை சரியான இடைவெளியில் சுத்தம் செய்யாவிட்டால், சருமப் பிரச்சினைகள், ஒவ்வாமை, துர்நாற்றம் மற்றும் தூக்கத்தின் தரத்தில் பாதிப்பு போன்ற […]
வெள்ளை நிற ஆடைகள் அணிந்தால் தோற்றத்திற்கு தனி அழகும் நேர்த்தியும் கிடைக்கும். ஆனால் அவற்றை நீண்ட நாட்கள் அதே வெண்மையுடன் பராமரிப்பது பலருக்கும் சவாலாகவே உள்ளது. சில முறை துவைத்த பிறகே வெள்ளை ஆடைகள் மஞ்சள் அல்லது சாம்பல் நிறமாக மாறத் தொடங்குகின்றன. வியர்வை, அழுக்கு, தவறான துவைக்கும் முறை மற்றும் அதிகப்படியான சோப்பு பயன்பாடு போன்ற காரணங்களால் இந்த மாற்றம் ஏற்படுகிறது. இருப்பினும், சில எளிய பராமரிப்பு முறைகளைப் […]
காலை அல்லது மாலை நேரத்தில் சுலபமாகவும், ஆரோக்கியமாகவும் ஒரு டிபன் செய்ய நினைக்கிறீர்களா? அதிலும் மாவை அரைத்து பல மணி நேரம் புளிக்க வைக்க நேரமில்லையா? அப்படியானால், உடனடியாக தயாரிக்கக்கூடிய கம்பு தோசை ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். சிறுதானியமான கம்பில் நார்ச்சத்து, இரும்புச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால், இது உடல்நலத்திற்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. குறிப்பாக உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்புபவர்களும், சமச்சீர் உணவுமுறையை பின்பற்றுபவர்களும் கம்பை உணவில் […]
கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டத்தில் பெற்றோரே பணத்திற்காக தங்கள் மகளை வெளிநாட்டில் உள்ள விபச்சார கும்பலிடம் விற்றதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மல்லேனஹள்ளி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (50) மற்றும் அவரது மனைவி கிராந்தி (48) ஆகியோர் ஹக்கி-பிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். வனப்பகுதிகளில் கிடைக்கும் அரிய மூலிகைகளை சேகரித்து விற்பனை செய்வதே இவர்களின் தொழிலாகும். இதன் […]
சமூக வலைதளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து நடைபெறும் உருவக்கேலி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நடிகை குஷ்புவின் மகள்கள் அவந்திகா மற்றும் குஷியை இழிவுபடுத்தும் பதிவுகளுக்கு நடிகையும் அரசியல்வாதியுமான ராதிகா சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இணையத்தில் பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மனிதர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளார். தான் இந்த பதிவை மிகுந்த வேதனையுடனும் […]
திருச்சி தீரநகரை சேர்ந்தவர் 38 வயதான சம்பத்குமார். மிளகு பாறை பகுதியில் பீடா கடை நடத்தி வரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தனது தாய்மாமன் மகளான கவிதாவை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் ஒரு மகளும் ஏழாம் வகுப்பு படித்து வரும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கவிதா தினமும் சமைத்து தனது கணவருக்கு மதிய உணவு எடுத்துச் செல்வது வழக்கம். தனது […]
தமிழர் பாரம்பரிய மருத்துவ முறைகளில் முக்கிய இடம் பெறும் மூலிகைகளில் ஒன்றாக வசம்பு கருதப்படுகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் இன்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வீட்டு வைத்தியமாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. வசம்பை லேசாகச் சுட்டு, பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் பல குடும்பங்களில் தொடர்கிறது. இதனால் குழந்தைகளுக்கு பசியின்மை குறைவதோடு, சிறிய அளவிலான தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பும் குறையும் என்று பாரம்பரிய நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாகவே வசம்புக்கு […]
காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி மருத்துவர் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கு 45 வயதான விநாயகஜோதி என்ற மனைவியும், 21 வயதான வர்ஷா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், வர்ஷாவுக்கும் முத்துக்குமாரின் அக்கா மகன் 32 வயதான யுவராஜா என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அதன் படி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் நிச்சயதார்த்தம் 2 வீட்டு உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. வர்ஷாவுக்கு 21 […]
குஜராத் மாநிலம், காந்திநகரில் பார்த்த் – ரித்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் வசித்து வரும் அதே பகுதியில், 20 வயதான ஹர்திக் என்ற கல்லூரி மாணவர் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில், ரித்தி குளிப்பதை பல நாட்களாக ஹர்திக் வீடியோ எடுத்து வந்துள்ளார். இது குறித்து ரித்திக்கு முதலில் தெரியாமல் இருந்துள்ளது. ஆனால் ஒரு சில நாட்களுக்கு பிறகு, […]

