தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

சாக்லேட் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்தமான உணவாக இருக்கிறது. ஆனால், அனைத்து வகையான சாக்லேட்டுகளும் உடலுக்கு ஒரே மாதிரியான நன்மைகளை வழங்குவதில்லை. குறிப்பாக, அதிக அளவு கோகோ கொண்ட டார்க் சாக்லேட், மற்ற வகை சாக்லேட்டுகளை விட ஆரோக்கியமான தேர்வாகக் கருதப்படுகிறது. டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்புச்சத்து, மெக்னீசியம், காப்பர், மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் காணப்படும் ஃப்ளேவனாய்டுகள், உடலில் […]

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் தற்போது பலரையும் பாதிக்கும் முக்கிய பிரச்சனையாக அதிகரித்து வரும் கொலஸ்ட்ரால் உள்ளது. குறிப்பாக உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL அளவு அதிகரிக்கும்போது, இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளின் அபாயம் அதிகரிக்கலாம். கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் சிலர் இரவு உணவைத் தவிர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இரவு உணவை சாப்பிடாமல் இருப்பதால் […]

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, வரும் 2035ஆம் ஆண்டிற்குள் இந்தியாவுக்கான தனித்துவமான விண்வெளி நிலையத்தை விண்ணில் அமைக்கும் இலக்குடன் செயல்பட்டு வருவதாக அதன் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் சுமார் 300 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான இலக்கு இஸ்ரோவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முன்னோடியாக, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து மனிதரில்லா சோதனை விண்கலம் நடப்பாண்டிற்குள் ஏவப்படவுள்ளதாகவும் […]

சாணக்கியர் சிறந்த சிந்தனையாளர், பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல் ஆலோசகராக அறியப்படுகிறார். அவர் எழுதியதாகக் கூறப்படும் ‘சாணக்கிய நீதி’ நூலில், ஒருவர் வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் இடம்பெற்றுள்ளன. சமூகத்தில் சிலருக்கு அதிக மரியாதையும் மதிப்பும் கிடைக்கிறது. அவர்களுக்கு தேவையான நேரங்களில் உதவுவதற்கும் பலர் முன்வருகிறார்கள். அதே நேரத்தில், சிலருக்கு சமூகத்தில் உரிய மதிப்போ மரியாதையோ கிடைப்பதில்லை. அவர்களுக்கு உதவவும் பலர் தயங்குகிறார்கள். ஒருவரின் […]

ஒருவருக்கு பக்கவாட்டில் படுத்து தூங்குவது வசதியாக இருக்கலாம். மற்றொருவருக்கு முதுகில் படுத்து தூங்குவது சௌகரியமாக இருக்கலாம். உண்மையில், அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரே சிறந்த தூங்கும் நிலை என்று எதுவும் இல்லை. ஒருவரின் வயது, உடல் நிலை, உடல் அமைப்பு மற்றும் தனிப்பட்ட சௌகரியம் ஆகியவற்றைப் பொறுத்து தூங்கும் நிலையைத் தேர்வு செய்வது முக்கியம். பக்கவாட்டில் படுத்து தூங்குவது நல்லதா? பலருக்கு பக்கவாட்டில் படுத்து தூங்குவது சௌகரியமாக இருக்கும். இந்த நிலையில் […]

தமிழகத்தில் தவெக அரசு அமைந்து 100 நாட்கள் நிறைவடையும் தருவாயில், இதுவரை அரசால் செயல்படுத்தப்பட்ட முக்கியச் சாதனைகள் மற்றும் முன்னோடித் திட்டங்கள் குறித்த துறைவாரியான அறிக்கையை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதவியேற்றது முதல் ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை மற்றும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை விரைவுபடுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதனடிப்படையில், 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் திட்டங்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து […]

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்பவர், பல்வேறு பெயர்களில் போலியாக சமூக ஊடகக் கணக்குகளை தொடங்கி வந்துள்ளார். இதன்மூலம் முகம் தெரியாத பல ஆண்களுடன் நட்பாக பழகி, அவர்களை தனது வலையில் வீழ்த்தியுள்ளார். ஆரம்பத்தில் இனிமையாக பேசி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் இவர், தனியறைகளில் அவர்களுடன் இருக்கும் தருணங்களை ரகசியமாகப் படம் பிடிப்பதையும், ஆபாசப் படங்களைப் பரிமாறிக் கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் மற்றும் […]

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் இன்று (ஆகஸ்ட் 10) தொடங்கி வரும் 14ஆம் தேதி வரை சிறப்புத் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மண்டல இணை ஆணையர்கள், துணை மற்றும் உதவி ஆணையர்கள், கோவில் செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், ➣ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அறநிலையத்துறை திருக்கோவில்களிலும் ஆகஸ்ட் 10 முதல் 14 வரை (5 […]

தமிழகத்தில் அனைத்து அரசு தொடர்பான நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக கட்டாயமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதற்கான தனித்தீர்மானம் இன்று சட்டமன்றத்தில் கொண்டு வரப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனோன்மணியம் சுந்தரனாரால் 1891ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘மனோன்மணியம்’ என்னும் புகழ்பெற்ற நாடக நூலில் இருந்தே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடந்த 1970-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் மூலம், அரசு […]

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மாநகர், புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. வடபழனி, நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, பூந்தமல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்வதால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், கனமழை மற்றும் சூறைக்காற்றால் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாகச் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல், சுமார் 6 […]