சமூக வலைதளங்களில் தற்போது 1980களின் ரெட்ரோ தோற்றத்தை அடிப்படையாகக் கொண்ட AI புகைப்பட டிரெண்ட் வேகமாக வைரலாகி வருகிறது. பழைய கால உடைகள், ஹேர் ஸ்டைல் மற்றும் விண்டேஜ் புகைப்படங்களின் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பலரும் தங்களது புகைப்படங்களை மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த டிரெண்டில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் லெஜண்ட் சரவணனும் தற்போது 80ஸ் ரெட்ரோ […]
நம்மில் பலர் பல ஜோடி காலணிகளை வைத்திருந்தாலும், கடுமையான வெயிலில் வெறும் கால்களுடன் சாலையில் ஓடும் குழந்தைகளையும், தேய்ந்துபோன செருப்புகளுடன் நடப்பவர்களையும் தினமும் காண்கிறோம். பன்னிரண்டாம் வகுப்பு மாணவரான அர்ஹன் ரெட்டி (Arhan Reddy), தனது கவனத்திற்கு வந்த இந்த எளிய மக்களின் துயரத்தை ஒரு பெரிய மாற்றமாக மாற்றிக் காட்டியுள்ளார். தொழிற்சாலைகளில் வீணாகும் ‘ஈவா’ (EVA) எனப்படும் ரப்பர் கழிவுகளை மறுசுழற்சி செய்து, ஏழை எளிய குழந்தைகளுக்குச் செருப்புகளை […]
உலக மக்கள் தொகையில் பாதியளவையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்தையும் கொண்டுள்ள பிரிக்ஸ் (BRICS) அமைப்பு வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், உறுதியான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளாக மாற்றப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். பிரிக்ஸ் வணிக மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 2006-ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் கூட்டு ஜிடிபி உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை விட சுமார் 4.5 மடங்கு அதிகரித்துள்ளதாகத் […]
பாக்கெட் உணவுப் பொருட்களில் ‘சிவப்பு அறுகோண’ (Red Hexagon) எச்சரிக்கை லேபிள்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு மற்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு (FSSAI) உச்ச நீதிமன்றம் 13 முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியம், குறிப்பாக வளரும் குழந்தைகளின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், இது குறித்த விளக்கங்களை 10 நாட்களுக்குள் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யுமாறு FSSAI-க்கு உத்தரவிட்டுள்ள உச்ச […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள பத்ராத்திரி கோத்தகுடேம் மாவட்டம், மாணு குரு, பாகிடேறு கொல்ல கோட்டூர் ஆகிய 3 கிராமங்களில் கிணறுகள் மற்றும் வீடுகளுக்கு வரும் குடிநீர் குழாய்களில் இருந்து திடீரென சூடான நீர் வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வழக்கமாக குடிநீருக்காக பயன்படுத்தப்படும் கிணறு மற்றும் குழாய் நீர் தற்போது மிகவும் சூடாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அன்றாட தேவைகளுக்குக்கூட அந்த நீரை உடனடியாக […]
இந்தோனேசியாவின் கடற்கரைப் பகுதியில் 6.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. ஜாவா தீவில் உள்ள தெலுக்நாகா நகருக்கு வடகிழக்கே சுமார் 115 கிலோமீட்டர் (71 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக USGS குறிப்பிட்டுள்ளது. ஜாவா தீவின் பல்வேறு பகுதிகளிலும் (சுராபயா, துபான், டென்பசார் மற்றும் செமராங் போன்ற முக்கிய நகரங்கள் உட்பட) இதன் அதிர்வுகள் லேசாக உணரப்பட்டன. இதற்கிடையில், […]
டெல்லியில் நடைபெற்ற BRICS வர்த்தக மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் சிவப்புக் கம்பளப் பாதையில் கைகளை கோர்த்துக்கொண்டு இணைந்து நடந்து சென்றார். தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் BRICS உறுப்பு நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பை இந்தப் புகைப்படம் அப்பட்டமாக வெளிப்படுத்தியது. பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, […]
நெய் இந்தியர்களின் பாரம்பரிய உணவுப் பழக்கத்தில் நீண்ட காலமாக இடம்பெற்று வருகிறது. ரொட்டி, பருப்பு வகைகள் முதல் இனிப்புகள் வரை பல்வேறு உணவுகளில் நெய் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதில் கொழுப்பு அதிகம் இருப்பதால், நெய்யை அதிகமாக சாப்பிடுவது பித்தப்பையில் கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. பித்தப்பைக் கற்களில் பெரும்பாலானவை கொலஸ்ட்ரால் சார்ந்தவை என்பதால், நெய் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கும் இதற்கும் நேரடி தொடர்பு […]
மழைநீர் தேங்கியிருந்த பகுதியில் காலணிகள் நனையக்கூடாது என்பதற்காக, முதியவர் ஒருவரின் முதுகில் ஏறி சென்ற வருவாய் அதிகாரி, இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அரசு அதிகாரி மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், சித்தி மாவட்டத்தில் உள்ள மாதா கிராம பஞ்சாயத்து பகுதியில் கள ஆய்வுக்கு சென்ற வருவாய் அதிகாரி நிலேஷ்நம்தேவ் என்பவர் தண்ணீர் தேங்கியிருந்த […]
சருமத்தில் முகப்பரு, வறட்சி, எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்படுகிறதா? இதற்கு வெளிப்புறமாக பயன்படுத்தும் கிரீம்கள், சீரம்கள் மட்டுமே காரணத்தை தீர்க்காது. தினசரி உணவுப் பழக்கம், போதுமான தண்ணீர் குடிப்பது, சூரிய ஒளியில் செலவிடும் நேரம் உள்ளிட்ட பல விஷயங்களும் சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது சருமத்தில் அழற்சி, முகப்பரு போன்ற பிரச்சினைகளை அதிகரிக்கலாம். அதே […]

