சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அதி அழுத்த பிராணவாயு சிகிச்சை மையத்தை அமைச்சர் அருண் ராஜ் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் ‘கில்லி’ பட காட்சி திரையிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நேற்று (ஜூலை 17) சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் அதி அழுத்த பிராணவாயு சிகிச்சை (High-pressure oxygen therapy)மையத்தைத் திறந்து வைத்தார். இந்த சிகிச்சை மூலம் […]
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வட்டாச்சியர் அலுவலகங்களில் நேற்று (ஜூலை 17)லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த திடீர் சோதனையில் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதோடு ,லஞ்சம் வாங்கிய பலர் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். லஞ்சம் வாங்குவோர் குறித்து புகார் அளிக்க வாட்ஸாப் எண் மற்றும் இமெயில் முகவரி உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பட்டா மாறுதல், சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் நில அளவை போன்ற […]
பொதுமக்கள் மற்றும் தணிக்கைக்கு உட்பட்ட நிறுவனங்களுக்காக Public Grievance Portal என்ற புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,பொதுமக்கள் மற்றும் தணிக்கைக்கு உட்பட்ட நிறுவனங்கள் தங்களது புகார்கள் மற்றும் சந்தேகங்களை எளிதாக பதிவு செய்து தீர்வு பெறும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி CAMS இணையதளத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. தலைமை தணிக்கை இயக்குநரின்கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை, மாநில அரசு தணிக்கைத் துறை, […]
தேங்காய் என்பது நமது அன்றாட உணவில் முக்கிய இடம் வகிக்கும் இயற்கை உணவுப் பொருளாகும். சமையலில் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்கும் சருமத்திற்கும் பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியதாகவும் கருதப்படுகிறது. மேலும், தலைமுடி பராமரிப்பிலும் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்கள் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தேங்காயில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அதை அளவோடு உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு தேவையான […]
பலரும் படுக்கை விரிப்புகள் அழுக்காகத் தெரிந்த பிறகுதான் அவற்றை துவைப்பது வழக்கம். ஆனால், சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி, வெளிப்படையாக சுத்தமாகத் தெரிந்தாலும், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் போர்வைகளில் தினமும் வியர்வை, உடலிலிருந்து உதிரும் சருமத் துகள்கள், உடல் எண்ணெய், தூசி மற்றும் நுண்ணுயிரிகள் படிந்துகொண்டே இருக்கும். இதனால் அவற்றை சரியான இடைவெளியில் சுத்தம் செய்யாவிட்டால், சருமப் பிரச்சினைகள், ஒவ்வாமை, துர்நாற்றம் மற்றும் தூக்கத்தின் தரத்தில் பாதிப்பு போன்ற […]
வெள்ளை நிற ஆடைகள் அணிந்தால் தோற்றத்திற்கு தனி அழகும் நேர்த்தியும் கிடைக்கும். ஆனால் அவற்றை நீண்ட நாட்கள் அதே வெண்மையுடன் பராமரிப்பது பலருக்கும் சவாலாகவே உள்ளது. சில முறை துவைத்த பிறகே வெள்ளை ஆடைகள் மஞ்சள் அல்லது சாம்பல் நிறமாக மாறத் தொடங்குகின்றன. வியர்வை, அழுக்கு, தவறான துவைக்கும் முறை மற்றும் அதிகப்படியான சோப்பு பயன்பாடு போன்ற காரணங்களால் இந்த மாற்றம் ஏற்படுகிறது. இருப்பினும், சில எளிய பராமரிப்பு முறைகளைப் […]
காலை அல்லது மாலை நேரத்தில் சுலபமாகவும், ஆரோக்கியமாகவும் ஒரு டிபன் செய்ய நினைக்கிறீர்களா? அதிலும் மாவை அரைத்து பல மணி நேரம் புளிக்க வைக்க நேரமில்லையா? அப்படியானால், உடனடியாக தயாரிக்கக்கூடிய கம்பு தோசை ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். சிறுதானியமான கம்பில் நார்ச்சத்து, இரும்புச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால், இது உடல்நலத்திற்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. குறிப்பாக உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்புபவர்களும், சமச்சீர் உணவுமுறையை பின்பற்றுபவர்களும் கம்பை உணவில் […]
கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டத்தில் பெற்றோரே பணத்திற்காக தங்கள் மகளை வெளிநாட்டில் உள்ள விபச்சார கும்பலிடம் விற்றதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மல்லேனஹள்ளி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (50) மற்றும் அவரது மனைவி கிராந்தி (48) ஆகியோர் ஹக்கி-பிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். வனப்பகுதிகளில் கிடைக்கும் அரிய மூலிகைகளை சேகரித்து விற்பனை செய்வதே இவர்களின் தொழிலாகும். இதன் […]
சமூக வலைதளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து நடைபெறும் உருவக்கேலி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நடிகை குஷ்புவின் மகள்கள் அவந்திகா மற்றும் குஷியை இழிவுபடுத்தும் பதிவுகளுக்கு நடிகையும் அரசியல்வாதியுமான ராதிகா சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இணையத்தில் பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மனிதர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளார். தான் இந்த பதிவை மிகுந்த வேதனையுடனும் […]
திருச்சி தீரநகரை சேர்ந்தவர் 38 வயதான சம்பத்குமார். மிளகு பாறை பகுதியில் பீடா கடை நடத்தி வரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தனது தாய்மாமன் மகளான கவிதாவை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் ஒரு மகளும் ஏழாம் வகுப்பு படித்து வரும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கவிதா தினமும் சமைத்து தனது கணவருக்கு மதிய உணவு எடுத்துச் செல்வது வழக்கம். தனது […]

