காலையில் இட்லி அல்லது தோசை மாவு இல்லையென்றால் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் கோதுமை ரவை இருந்தாலே, சில எளிய பொருட்களுடன் சுவையான மற்றும் மென்மையான பணியாரத்தை செய்து அசத்தலாம். இதற்கு காரசாரமான தேங்காய் சட்னியை சைடு டிஷ்ஷாக பரிமாறினால், காலை உணவு இன்னும் ருசியாக மாறும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த காம்பினேஷன், குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய ஆரோக்கியமான […]
வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவும் முக்கியமான பொருட்களில் துடைப்பமும் ஒன்றாகும். ஆனால், தினமும் பயன்படுத்துவதால் அதன் நார்கள் விரிவது, தூசி மற்றும் அழுக்கு படிவது, துர்நாற்றம் ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் வரலாம். இதனால் துடைப்பத்தின் செயல்திறனும் குறையக்கூடும். இந்தப் பிரச்சினைகளைத் தவிர்க்க, வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய ஒரு பராமரிப்பு முறையை அவ்வப்போது பின்பற்றலாம். அதற்கு உப்பு மற்றும் வெள்ளை வினிகர் கலந்த வெதுவெதுப்பான நீரில் துடைப்பத்தை இரவு முழுவதும் ஊறவைத்து […]
காலை உணவு ஆரோக்கியமாகவும், வயிறு நிறைவாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சத்துமாவு கஞ்சி ஒரு சிறந்த தேர்வாகும். டீ, காபி போன்ற பானங்களுக்கு மாற்றாகவும், உடலுக்கு நீண்ட நேரம் ஆற்றலை வழங்கக்கூடிய பானமாகவும் இது கருதப்படுகிறது. புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த கஞ்சி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவாகும். பொதுவாக சத்துமாவு பல்வேறு தானியங்கள், சிறுதானியங்கள் மற்றும் பயறு […]
இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை ஆகியவை கருதப்படுகின்றன. சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சையுடன், சத்தான உணவுப் பழக்கங்களையும் இயற்கை உணவுகளையும் இணைத்துக்கொள்வது பலருக்கும் பயனளிக்கக்கூடும். ஆளி விதைகள் (Flax Seeds) உடலுக்கு தேவையான நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 […]
நாவல் பழம் என்பது இந்தியாவில் பரவலாகக் கிடைக்கும் பருவகாலப் பழங்களில் ஒன்றாகும். கருநீலம் அல்லது அடர் ஊதா நிறத்தில் காணப்படும் இந்தப் பழம், இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவை கலந்த தனித்துவமான சுவையால் பலரையும் கவர்கிறது. சுவைக்காக மட்டுமல்லாமல், உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளையும் வழங்கும் பழமாகவும் இது அறியப்படுகிறது. பாரம்பரிய மருத்துவ முறைகளிலும், சமீபத்திய சில ஆராய்ச்சிகளிலும் நாவல் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. நாவல் பழத்தில் […]
சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகேயுள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் 24 வயதான ரவி சாஹு. இவர் திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இவரது உறவினர்கள் இவரை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. ஆனால் இறுதியாக அவரது சடலம் காட்டுப் பகுதியில் கிடந்துள்ளது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரவியின் செல்போன் […]
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள பர்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ரன்வீர் சிங். இவருக்கு முகேஷ், ரவீந்திரா என்ற இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், இவரது இரண்டாவது மகன் ரவீந்திராவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஃபதேஹாபாத் பகுதியில் உள்ள ரன்வாய் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளது. ஆனால், திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் […]
எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்த சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில், ஒரு சராசரி கார் உரிமையாளரால் தங்கள் வாகனத்தின் எரிபொருள் சிக்கனத்தை (மைலேஜ்) தாங்களாகவே துல்லியமாக அளவிட முடியாது என்றும், அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் நடத்தும் சோதனைகளையே அவர்கள் நம்பியிருக்க வேண்டும் என்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.. E20 பெட்ரோலுக்கு மாறிய பிறகு வாகன ஓட்டிகள் எரிபொருள் சிக்கனத்தை எவ்வாறு அளவிட வேண்டும்? ஒரு வாகனத்தின் […]
தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றன. இதில் அப்பாவி பெண்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், மற்றொரு புறம் பெண்களே தங்களுக்குநடக்கும் பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கின்றனர். இதற்கு உதாரணமாக, சென்னையில் ஒரே நாளில் இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 25 வயதான பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் ஒருவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸ் வேலை […]
பணம் தர மறுத்த மனைவி மற்றும் மகள்கள் மீது நபர் ஒருவர் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் 65 வயதான செல்வராஜ். கூலித்தொழிலாளியான இவருக்கு 60 வயதான விஜயலெட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 38 வயதான மேனகா என்ற மகளும், 25 வயதான மவுனிகா என்ற மகளும் உள்ளனர். மேனகா தனது கணவருடன் ஏற்பட்ட […]

