தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

ஆவியில் வேகவைத்து தயாரிக்கப்படும் உணவுகளில் இடியாப்பம் மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. செரிமானத்திற்கு இலகுவாக இருப்பதால், பலரும் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இது உள்ளது. பொதுவாக இடியாப்பம் அரிசி மாவில் தான் தயாரிக்கப்படுகிறது. ஆனால், அரிசியை குறைக்க விரும்புபவர்கள் அல்லது மாற்று தானியங்களை உணவில் சேர்க்க நினைப்பவர்கள், ராகி மாவில் இடியாப்பம் செய்து சாப்பிடலாம். ராகி இடியாப்பம் சுவையாக இருப்பதுடன், நார்ச்சத்து மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்ததாகும். இதனால், […]

நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, காலை உணவாக மட்டுமல்லாமல் இரவு உணவாகவும் பெரும்பாலான வீடுகளில் இட்லி அல்லது தோசைதான் சாப்பிடப்படுகிறது. இதற்காக அடிக்கடி வீட்டில் மாவு அரைப்பது நேரம் எடுக்கும் என்பதால், இன்றைய அவசர வாழ்க்கை முறையில் பலரும் கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் பாக்கெட் மாவை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள், தனியாக வசிக்கும் இளைஞர்கள், நேரம் குறைவாக இருப்பவர்கள் ஆகியோருக்கு பாக்கெட் மாவு மிகவும் வசதியான தேர்வாக […]

பூண்டு மற்றும் தேன் இரண்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்த இயற்கை உணவுகளாகக் கருதப்படுகின்றன. இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடும். இதை தயாரிக்க, தேவையான அளவு பூண்டுப் பற்களை தோல் நீக்கி ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, அவை முழுவதும் மூழ்கும் அளவிற்கு தூய தேனை ஊற்றி, குறைந்தது 24 மணி நேரம் ஊறவைக்கலாம். அதன் பிறகு, தினமும் காலையில் வெறும் வயிற்றில் […]

பெண்கள் நாட்டின் கண்கள் என்று பலர் கூறுவதுண்டு. ஆனால், அந்தக் கண்களை நாம் கவனிப்பதே இல்லை என்பதுதான் உண்மை. பொதுவாக பெண்கள், தனது வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்தி, அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்வார்கள். ஆனால், அது தனக்கென்று வரும்போது, மிச்சம் மீதிகளை மட்டும் சாப்பிட்டுவிட்டு, வீட்டிற்காகவே உழைத்து கடைசி வரை வாழ்ந்து விடுவார்கள். இதனால்தான், பல பெண்கள் இளம் வயதிலேயே வயதான தோற்றத்திற்கு மாறுகிறார்கள். […]

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள பர்சதேபூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் திவாரி. குடிபழக்கத்திற்கு அடிமையான சஞ்சீவ் திவாரி, அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் குடியை நிறுத்துமாறு அவரது மனைவி அடிக்கடி அறிவுறுத்தியுள்ளார். ஆனால் சஞ்சீவ் திவாரி அதை பொருட்படுத்தவில்லை. இதனால் கணவன் மனைவி இடையே நாளுக்கு நாள் தகராறு அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில், வழக்கம் போல கடந்த சில நாட்களுக்கு […]

தமிழ் தொலைக்காட்சி உலகில் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்பவர் கலா மாஸ்டர். ஐந்து வயதிலேயே நடனப் பயணத்தைத் தொடங்கிய அவர், 12 வயதில் உதவி நடன இயக்குநராக தனது பணியை ஆரம்பித்தார். 26 வயதில் உலக அழகி (மிஸ் வேர்ல்ட்) போட்டிக்காக 320 நடனக் கலைஞர்களை ஒருங்கிணைத்து நடன அமைப்பை வடிவமைத்தார். தற்போது, தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நடன இயக்குநர்களில் ஒருவராகவும், தமிழ் தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பைப் […]

பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் அனில் ராய். இவருக்கு 25 வயதான ப்ரீத்தி குமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு 10 வயதான ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அனில் ராய், தற்போது ராஜஸ்தானில் வசித்து வரும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மாமியார்- மருமகளிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜூலை 7ம் தேதி இரவு, தனது சகோதரர் ராகவ் குமாருடன் ப்ரீத்தி குமாரி வீடியோ […]

குழந்தைகளை வளர்ப்பது என்பது அவர்களுக்கு உணவு, கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றை மட்டும் கற்றுக் கொடுப்பது அல்ல. எந்த சூழ்நிலையிலும் தங்களுக்கு நேரும் பிரச்சினைகள், அச்சம் அல்லது துன்புறுத்தல்கள் குறித்து தயக்கமின்றி பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கையையும் அவர்களிடம் உருவாக்க வேண்டும். குழந்தைகள் மனம் திறந்து பேசும் சூழலை பெற்றோர் ஏற்படுத்தினால், பல துயர சம்பவங்களை ஆரம்பத்திலேயே தடுக்க முடியும். ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர், தனக்கு […]

நாகர்கர்னூல் மாவட்டம் கொல்லாபூர் நகரில் உள்ள அரசு முதுநிலை (பிஜி) கல்லூரியின் முதல்வர், மாணவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தப்பிக்க முயன்ற மாணவர், தற்காப்பிற்காக குற்றம்சாட்டப்பட்ட முதல்வரின் பிறப்புறுப்பைக் கடித்ததாக கூறப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டவர், பாலமூரு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கொல்லாபூர் முதுநிலை மையத்தின் முதல்வர் டாக்டர் மார்கே போலோனீஸ். கடந்த ஜூலை 7-ஆம் தேதி இரவு, மாணவரை தனது அறைக்கு வருமாறு அழைத்த […]

கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடுகளும், தகராறுகளும் ஏற்படுவது பல குடும்பங்களில் காணப்படும் ஒரு சாதாரண நிகழ்வாகும். ஆனால், கோபம் மற்றும் ஆத்திரத்தில் எடுக்கும் சில முடிவுகள் எதிர்பாராத விபரீதங்களை ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில், சாத்தூரில் கணவருடன் ஏற்பட்ட தகராறால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் செய்த செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சாத்துார் சங்கராபுரத்தை சேர்ந்தவர் 34 வயதான மணி. அட்டை மில் ஒன்றில் […]