புதுச்சேரியில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மாதாந்திர உணவு தானிய மானிய தொகையை தடையின்றி பெறுவதற்கு, ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கைப்பேசி எண்களை உரிய ஆவணங்களுடன் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும், தவறினால் மானியம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை திட்டவட்டமாக எச்சரித்துள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
சென்னையில் தங்கம் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு இன்று சற்றே நிம்மதியான செய்தி வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது. நேற்றைய தினம் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் விலை ரூ.14,220க்கும் ஒரு சவரன் ரூ.1,13,760க்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்றைய தினத்தை விட இன்றைய தினம் தங்கத்தின் விலை மிக குறைந்ததுள்ளது. இன்றைய வர்த்தக நிலவரப்படி, ஒரு கிராம் தங்கத்தின் […]
ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறும் சம்பளதாரர்களுக்கு, அவர்களின் ஓய்வுக்கால தேவையைப் பூர்த்தி செய்ய வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) மட்டுமே போதுமானதா என்பது குறித்த முக்கிய ஆய்வுகள் வெளியாகியுள்ளன. மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் இ.பி.எஃப் நிதி, கூட்டு வட்டி அடிப்படையில் பல ஆண்டுகள் வளர்ந்து பெரிய தொகையாக மாறினாலும், பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளும்போது அது மட்டுமே முழுமையான பாதுகாப்பைத் தராது என நிதி வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். […]
தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சிக்கு புதிய வேகம் கொடுக்கும் நோக்கில், மாநில அரசு ஒருங்கிணைக்கும் பிரம்மாண்ட முதலீட்டாளர்கள் மாநாடு நாளை சென்னையில் நடைபெறுகிறது. சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த முக்கிய நிகழ்விற்கு முதலமைச்சர் விஜய் தலைமை தாங்குகிறார். இதில் நாட்டின் முன்னணித் தொழில் அதிபர்கள், பன்னாட்டு நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகள் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள உள்ளனர். மாநிலத்தில் தொழிற்கட்டமைப்பை […]
LPG Gas | வீட்டு சமையல் எரிவாயு பயனாளிகள் ஆதார் வாயிலாக உண்மைத் தன்மையை சரிபார்க்க தவறினால், சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாது என்று பரவி வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தியே என மத்திய பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தகுதியான பயனாளிகளுக்கு அரசு வழங்கும் மானியம் முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், சமையல் எரிவாயு இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க எண்ணெய் நிறுவனங்களுக்கு […]
உலக அளவில் முன்னணி ஆன்லைன் வீடியோ தளமாக திகழும் யூடியூப் (YouTube), பொழுதுபோக்கு, கல்வி, செய்தி, தொழில்நுட்பம் மற்றும் வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த படைப்பாளிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும் வருமானம் ஈட்டவும் முக்கியக் களமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், யூடியூப் நிறுவனம் தனது ‘யூடியூப் பார்ட்னர் புரோகிராம்’ (YouTube Partner Program) தகுதி விதிகளில் மிக முக்கியக் கெடுபிடிகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய மாற்றங்கள் […]
இந்தியாவில் யுபிஐ தொடங்கபட்ட காலத்திலிருந்தே நுகர்வோருக்கு முற்றிலும் இலவசமாகவே வழஙகபட்டு வருகிறது. எதிர்காலத்திலும் ஒவ்வொரு இந்தியரும் எவ்விதமான பரிவர்த்தனை கட்டணமும் இன்றி இந்த உடனடி டிஜிட்டல் சேவையை தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் ‘வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் மசோதா 2026’ மீதான விவாதத்தின் போது பேசிய அவர், இந்த மசோதாவானது 2007-ஆம் ஆண்டின் ‘பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைமைகள் சட்டத்தின்’ […]
ரஷ்யா மற்றும் அந்நாட்டிடம் இருந்து எண்ணெய், எரிவாயு போன்ற எரிசக்திப் பொருட்களை கொள்முதல் செய்யும் நாடுகளை இலக்காகக்கொண்டு, அமெரிக்க செனட் சபை புதிய தடைகள் சட்ட மசோதாவிற்கு 86-11 என்ற கணக்கில் ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீதான போரில் மாஸ்கோவின் பொருளாதார வலிமையை முடக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, ரஷ்யாவிடம் இருந்து பெருமளவில் எரிசக்தியை இறக்குமதி செய்யும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும். […]
யுபிஐ (UPI) டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ரூ. 2,000 தொகைக்கு மேல் மேற்கொள்ளப்படும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.25 சதவீதம் முதல் 0.4 சதவீதம் வரை கட்டணம் (MDR) விதிக்க அனுமதி அளிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த சட்டத் திருத்த மசோதாவில், மின்னணுப் பணப்பரிமாற்றங்களுக்கு வங்கிகளும் சேவை நிறுவனங்களும் கட்டணம் […]
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களை திரும்பப் செலுத்துமாறு வலியுறுத்தும் போது, கடன் வசூல் முகவர்கள் (Recovery Agents) வரம்பு மீறிச் செயல்படுவதை தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ➣ கடன் வழங்கிய நிறுவனங்களோ அல்லது வசூல் முகவர்களோ வாடிக்கையாளர்களைக் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். இந்த நேரத்தை தாண்டி […]

