fbpx

எனக்கும், அக்‌ஷய்குமாருக்கும் 30 வயசு வித்தியாசம்! விமர்சனங்களுக்கு பதிலளித்த மனுஷி சில்லார்!

Bade Miyan Chote Miyan’ படத்தில் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்த மனுஷி சில்லார் தனக்கும், அக்‌ஷய் குமாருக்கும் 30 வயது வித்தியாசம் என தெரிவித்துள்ளார்.

manushi chhillar: 2017ம் ஆண்டு மிஸ் வோர்ல்ட் பட்டத்தை வென்ற இந்தியப் பெண்ணான மனுஷி சில்லார், திரைத்துறையில் நடிகையாக வலம் வர விரும்பினார், அதை தொடர்ந்து, தன் முதல் படத்திலேயா பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்‌ஷய் குமாருடன் ‘சாம்ராட் பிருத்விராஜ்’ என்ற பீரியாடிக் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தது. இதையடுத்து தற்போது மீண்டும் அக்‌ஷய் குமாருடன் ‘Bade Miyan Chote Miyan’ நடித்திருக்கிறார்.

கடந்த வாரம் 11ம் தேதி வெளியான இத்திரைப்படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படம் குறித்த ட்ரோல்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் சிலர், 26 வயதாகும் மனுஷி சில்லார், 56 வயதாகும் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு மனைவியாக நடித்திருப்பதைக் கேலி செய்து வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், நடிகை மனுஷி சில்லார், “தனக்கும் அக்‌ஷய் குமார் சாருக்கும் 30 வயது வித்தியாசம் இருப்பதாகவும், இந்த படத்தில் அவரின் மனைவியாக நடித்தது குறித்தும் பலரும் சமூக வலைதளங்களில் கேலி செய்வதைப் பார்த்தேன். அக்‌ஷய் குமார் சார் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் என்றும் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைப்பதை யார் வேண்டாம் என நிராகரிப்பார்கள் என்றார். அதுமட்டுமின்றி படக்குழுவினர் நன்றாக யோசித்து கதைக்கேற்றவாறுதான் நடிகர்களைத் தேர்வு செய்கிறார்கள் எனவும்,  தனக்காக நான்தான் பேசியாக வேண்டும் என்று காட்டமாக பதலளித்துள்ளார்.

“10,000 புடவைகள், 1,250 கிலோ வெள்ளி, 28 கிலோ தங்கம்..” இந்தியாவின் பணக்கார நடிகை யார்..? ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே, இவர்களில் யாரும் இல்லை..!

shyamala

Next Post

பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?" - இளையராஜாவுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Wed Apr 24 , 2024
தமிழ்நாட்டில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. அந்த வகையில், இசையமைப்பாளர் இளையராஜாவின் 4 ஆயிரத்து 500 பாடல்களைப் பயன்படுத்த எக்கோ மற்றும் அகி (A.G.I) உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அனிதா சுமந்த், தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களைப் […]

You May Like