கர்நாடகா மாநிலம் கொடிகேஹள்ளி பகுதியில் மீண்டும், மீண்டும் உறவுக்கு அழைத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் பெண்மணியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கொடிகேஹள்ளி பகுதி, பத்ரப்பா லே அவுட் பகுதியை சேர்ந்த 48 வயதான ஷோபா என்பவர் வசித்து வந்தார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த ஷோபா, தனியாக வசித்து வந்தார். இவரை அவரது மகள், கடந்த 19ம் தேதி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார். பலமுறை தொடர்பு கொண்டும் ஷோபா அழைப்பை ஏற்காததால், சந்தேகமடைந்த மகள், வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது, தனது தாயார் ஷோபா, நிர்வாணமாக பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மகள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. ஹேரோஹள்ளி பகுதியைச் சேர்ந்த 23 வயதான நவீன் என்பவருடன், ஷோபாவிற்கு இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது.
இதனால், அடிக்கடி ஷோபா வீட்டிற்கு வந்து நவீன், உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதேபோல், கொலை நடந்த அன்று ஷோபாவின் வீட்டிற்கு நவீன் வந்திருந்தார். அவர்கள் இருவரும் உடல் ரீதியாக நெருக்கமாக இருந்துள்ளனர். ஆனாலும், மீண்டும் மீண்டும் அந்த உறவுக்கு நவீனை ஷோபா வற்புறுத்தியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த வாலிபர் நவீன் ஷோபாவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, நவீனை கைது செய்த கொடிகேஹள்ளி போலீசார், அவரிடம் ஷோபா கொலை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.