சென்ற சில மாதங்களாக குற்றாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஆகவே அறிவியில் நீர் வற்றி போய் பாறைகள் மட்டுமே காணப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் கவலை அடைந்தனர். இத்தகைய சூழ்நிலையில் தற்சமயம் தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆகவே குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்டவற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக, குற்றாலத்தில் குளிப்பதற்கு பொதுமக்களின் வருகையும் அதிகரித்திருக்கிறது. […]

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியார் பட்டியை சேர்ந்தவர் ராஜதுரைலிங்கம்(43) அதை தொகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இந்த சூழ்நிலையில் ஒரு மாணவரை சக மாணவர்கள் முன்னிலையில் பாலியல் ரீதியாக கேலி கிண்டல் உள்ளிட்டவையை செய்ததாக புகார் எழுந்தது. இதன் காரணமாக, மனமுடைந்த அந்த பள்ளி மாணவன் பள்ளிக்கு செல்லாமல் இருந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், பள்ளிக்கு செல்லாமல் […]

பாலியல் ரீதியான அத்துமிரல்கள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணம் தான் இருக்கிறது.அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையினருக்கு தமிழக அரசு அறிவுறுத்தினாலும் அதன் பேரில் காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கை இது போன்ற சமூக விரோத செயலை ஒருபோதும் கட்டுப்படுத்துவதில்லை என்பதே பொதுமக்களின் ஆதங்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவர் நேற்று […]

தென் மாவட்டங்களை பொறுத்தவரையில் அரிவாள் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று காவல்துறையினர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் காலம் காலமாக தென் மாவட்ட மக்களின் இரத்தத்திலேயே ஊறிப்போன அரிவாள் கலாச்சாரம் அவ்வளவு எளிதில் குறைந்து விடுமா என்ன? தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் தேவ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த உறவினர்களான ஐயப்பன் மற்றும் செல்லத்துரை உள்ளிட்டோர் இடையே நில பிரச்சினை குறித்து […]

சென்னை பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் என்ற திலீப்குமார் இவர் தன்னுடைய மனைவி ஹேமலதா அவர்களுடைய 2½ வயது பெண் குழந்தை ஹாசினி உள்ளிட்டோருடன் கடந்த 6 மாதங்களாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணா நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில், சக்திவேல் காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்ததாகவும், ஹேமலதா ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆலங்குளம் அரசு […]

கணவன், மனைவிக்குள் பிரச்சனை வருவது என்பது சகஜமான விஷயம் தான். ஆனால் அந்த பிரச்சனைக்காக உயிரை மாய்த்துக் கொள்வது எந்த விதத்திலும் தீர்வாகாது. அந்த விதத்தில், தென்காசி வாசுதேவநல்லூர் பகுதியில் சேர்ந்தவர் முருகன் மீனா உள்ளிட்ட தம்பதியினர் முருகன் ஒரு தனியார் ப்ளூ மெட்டல் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகின்றார். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் பிரியா(7) , […]

ஒரு சிலர் தவறுகள் செய்யும்போது நாம் செய்வது தவறு என்று உணர்ந்து கொள்வதில்லை. ஆனால் தவறை செய்து முடித்துவிட்டு அதன் பிறகு அந்த தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக பல விபரீத முடிவுகளை மேற்கொள்வார்கள். அந்த விபரீத முடிவானது அவர்களை மட்டுமல்லாமல் அவர்களை சுற்றி இருப்பவர்களையும் மிகப்பெரிய சிக்கலுக்கு ஆளாக்கிவிடும். அந்த வகையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட கரிவலம் நந்தநல்லூரை அடுத்துள்ள பொட்டல்பட்டி காலனியைச் சேர்ந்தவர் சுடலை(53). இவர் கடந்த […]