தென்காசி மாவட்டம் ஊர்மேழலகியான் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (25) இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இத்தகைய நிலையில், அதே ஊரை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மாணிக்கம் கட்டாயப்படுத்தி தன்னுடைய பைக்கில் ஏற்றுக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த சம்பவம் குறித்து […]

திருநெல்வேலியை சேர்ந்த ஹரி நாடார் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த சட்டசபை பொது தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம்கண்டு சுமார் 37 ஆயிரம் வாக்குகளை பெற்றவர் இந்த ஹரி நாடார். தொழிலதிபரான இவர் ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் இருந்து வருகிறார். ஹரி நாடார் மீது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சார்ந்த இஸ்மாயில் பரகத் […]

தென்காசி மாவட்ட பகுதியில் உள்ள சங்கரன்கோவிலின் அருகே இருக்கும் வாசுதேவநல்லூரில் வசித்து வந்தவர்கள் ஐயப்பன் மற்றும் செல்லதுரை என்பவர்கள். இருவருக்கும் இடையே நில பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  இந்த நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் நில பிரச்சனை தொடர்பாக பெரும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி ஒருவருக்கொருவர் மாறி மாறி பலமாக தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.  இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த செல்லதுரை ஐயப்பனை அரிவாளால் […]

தென்காசி மாவட்ட பகுதியில் செல்வகுமார் என்பவர் தனது மகன் ஆனந்துடன் வசித்து வருகிறார். மகன் மற்றும் உறவினர் சூரியராஜ் என்பவரும் ஒன்றாக சேர்ந்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இருவருமே ஒன்றாக மோட்டார் சைக்கிளில் சென்று சுற்றுபுற கிராமங்களில் பால் எடுத்துவிட்டு இரவு 11 மணி அளவில் வீடு திரும்புவார்கள். இதனை தொடர்ந்து அந்த பாலை மறுநாள் காலை மக்களிடம் வினியோகிப்பார்கள். நேற்று இரவு இவர்கள் பால் எடுக்கச் சென்ற […]

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பகுதியில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சத்தியபாமா. சத்தியபாமா சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் ஏரலை பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்ற வாலிபர் குறி சொல்வதாக கூறி அந்தப் பகுதிக்கு வந்துள்ளார். அதனை தொடர்ந்து சத்தியபாமா அவரிடம் குறி கேட்டுள்ளார். அந்த வாலிபர் உன் கணவர் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் , அதற்கு […]

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆய்க்குடியில் பகுதியில் ஸ்ரீபாலசுப்பிரமணியசாமி என்ற கோவில் அமைந்து இருக்கின்றது. இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கி நிகழ்ந்து வந்தது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நேரத்தில் ஆய்க்குடியில் உள்ள சிவன் கோவின் திடலில் நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளித்து , சூரபத்மன் உள்ளிட்ட சூரர்களை வதம் செய்தார். இந்நிகழ்ச்சியில், […]