பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள மஜிதா சாலை பைபாஸ் அருகே ஏற்பட்ட குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார்.
செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில் அமிர்தசரஸில் உள்ள மஜிதா சாலை பைபாஸில் ஒரு பெரிய குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பயங்கரவாதிகளின் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளனர். இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மஜிதா சாலை பைபாஸ் அருகே வசிக்கும் குடியிருப்பாளர்கள் கூறுகையில், காலையில் மக்கள் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, டீசென்ட் அவென்யூவுக்கு வெளியே திடீரென ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டது. குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன், சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, ஒருவர் படுகாயமடைந்து, கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார். அவன் வலியால் அலறிக் கொண்டிருந்தார்.
சதார் காவல் நிலையம் போலீசார் காயமடைந்த நபரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, உயிரிழந்தவர் ஒரு ஸ்கிராப் வியாபாரியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர், ஸ்கிராப் பொருட்களில் இருந்த பழைய குண்டை அகற்றுவதற்காக, அந்த இடத்திற்கு அதை கொண்டு வந்திருக்க வாய்ப்பு உள்ளது. அந்த குண்டை உடைக்க முயன்றபோது திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தற்போது, வெடிந்த பொருள் உண்மையில் எவ்வகை குண்டு என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Read more: கூட்டணி வைப்பதற்கு ஏன் கட்சி தொடங்க வேண்டும்.. அந்த கட்சியிலே இணையலாமே..!! – சீமான்