மனித வாழ்க்கை என்பது பிரச்சனைகளால் சூழப்பட்ட ஒரு பெரும் சோதனைதான். முன் ஜென்ம பாவம், இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள், பித்ரு தோஷம், கிரக தோஷம், குடும்ப சாபம் என ஏராளமான காரணங்களால் நம்மில் பலர் வாழ்க்கையில் தடைகளை எதிர்கொள்கிறோம்.
இவை தீர, பகவான் சிவன் அருளை நாடுவது தான் எளிய தீர்வாகக் கருதப்படுகிறது. சிவன் பாவங்களையும், தோஷங்களையும் நீக்கும் பரமோன்னதமான தெய்வம். அதனால் உலகெங்கும் உள்ள பக்தர்கள், தங்கள் பிரச்சனைகளுக்கேற்ப, குறிப்பிட்ட சிவஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவதைக் காணலாம். இங்கு பாவங்கள் நீங்க, முக்தி கிடைக்க, சாபங்கள் விலக, சந்ததிப் பேறு பெற, மனநலம் மீள, திருமணத் தோஷங்கள் நீங்க உள்ளிட்ட 108 வகையான பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் சிவாலயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
- சந்திர தோஷம் விலக – திருமுல்லைவாயில்
- கல்வி மேன்மை – திருவெண்காடு
- பிராமண குற்றம் விலக – திருநெல்வேலி
- முக்தி கிடைக்க – திருக்குற்றாலம்
- நட்சத்திர தோஷம் விலக – மதுரை
- வாழ வழி தெரியாதவர்கள் – திருப்பரங்குன்றம்
- தீராத பாவம் விலக – திருவாடானை
- மனநலம் சரியாக – திருமுருகன் பூண்டி
- குழந்தை தோஷம் விலக – திருப்பாதிரிப்புலியூர்
- செய்வினை தோஷம் விலக – திருவக்கரை
- வாணிப பாவம் விலக – திருவேற்காடு
- மூன்று தலைமுறை தோஷம் விலக – மயிலாப்பூர்
- காமத்தால் ஏற்ற தோஷம் விலக – திருஅரசிலி
- வீண் வம்பு விலக – திருவாலங்காடு
- ஞானம் கிடைக்க – செய்யாறு
- பந்த பாசத்திலிருந்து விடுபட – திருப்பனங்காடு
- கொலை பாதக பாவம் விலக – தக்கோலம்
- குடும்ப கவலைகள் நீங்க – திருப்பாச்சூர்
- பித்ருதோஷம் விலக – திருவெண்ணைநல்லூர்
- நல்ல மனைவி அமைய – திருவதிகை
- முக்தி பெற – திருவாண்டார்
- பாவம் விலக – விருத்தாச்சலம்
- பசுவை கொன்ற பாவம் தீர – கரூர்
- பித்ரு தோஷம் நீங்க – கொடுமுடி
- முன்ஜென்ம பாவம் விலக – திருக்குடந்தை
- கர்மவினைகள் அகல – திருச்சி
- கஷ்டங்கள் விலக – திருநள்ளாறு
- மனநோய் விலக – திருவிடைமருதூர்
- ஞானம் பெற – திருவாவடுதுறை
- தீராத கஷ்டம் நீங்க – திருவாஞ்சியம்
- கல்வியில் முன்னேற்றம் உண்டாக – திருமறைக்காடு
- முக்தி பெற – திருத்தில்லை
- மரண பயம் விலக – திருநாவலூர்
- பல தலைமுறை சாபம் விலக – திருவாரூர்
- சர்ப்பதோஷம் விலக – நாகப்பட்டினம்
- முக்தி கிடைக்க – காஞ்சிபுரம்
- நினைத்த காரியம் நடக்க – திருவண்ணாமலை
- முன்வினை விலக – திருநெல்லிக்கா
- மணவாழ்க்கை சிறக்க – திருச்செங்கோடு
- கர்ப்ப சிதைவு தோஷம் விலக – திருகருக்காவூர்
- நோய் விலக – வைத்தீஸ்வரன் கோவில்
- பிரம்ம தோஷம் விலக – திருகோடிக்கரை
- இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய – குடவாசல்
- துணிவு பிறக்க – சிக்கல்
- வம்பு வழக்குகள் விலக – திருச்செங்காட்டங்குடி
- தோல் நோய்கள், புண்கள் குணமாக – திருக்கண்டீச்சுரம்
- குடும்ப கவலை விலக – மருதாநல்லூர்
- குழந்தை பாக்கியம் பெற, வறுமை நீங்க – திருக்கருவேலி
- முன் ஜென்ம பாவம் விலக – தேரெழுத்தூர்
- திருமண வாழ்க்கை அமைய – திருச்சத்திமுற்றம்
- கர்வம் நீங்க – திருப்பராய்துறை
- தீராத துயரம் தீர – திருநெடுங்களம்
- அதிகாரத்தால் வீழ்ந்தவர்கள் சுகம் பெற – திருவெறும்பூர்
- யம பயம் விலக – திருப்பைஞ்ஞீலி
- அக்னி தோஷம் விலக – திருவையாறு
- பாவம் தீர – திருவைகாவூர்
- திருமண தோஷம் விலக – திருக்கஞ்சனூர்
- குழந்தை பாக்கியம் கிடைக்க – திருமங்கலக்குடி
- திருமண தோஷம் விலக – திருமணஞ்சேரி
- மறுபிறவி வேண்டாதவர்கள் – பிரான்மலை
- தேவ தோஷம் விலக – திருகோகர்ணம்
- பெரியோரை அவமதித்த குற்றம் நீங்க – திருப்புகழூர்
- குல சாபம் நீங்க – சீர்காழி
- செவ்வாய் தோஷம் விலக – வைத்தீஸ்வரன் கோவில்
- குரு துரோக பாவம் நீங்க – தலைஞாயிறு
- பிறன்மனை நாடிய தோஷம் விலக – திருப்பனந்தாள்
- மரண பயம் விலக – திருப்புறம்
- மோட்சம் வேண்ட – திருநெய்த்தானம்
- கர்மவினை அகல – திருவானைக்காவல்
- அகம்பாவத்தால் ஏற்பட்ட தோஷம் விலக – திருவேதிக்குடி
- வறுமை அகல – திருவலஞ்சுழி
- சர்ப்ப சாபம் விலக – திருநாகேஸ்வரம்
- நவகிரகதோஷம் விலக – கும்பகோணம்
- வேதத்தை பரிகாசித்த பாவம் தீர – கோனேரிராஜபுரம்
- சூரிய தோஷம் விலக – காரைக்கால்
- குல வம்ச பாவம் நீங்க – திருசெம்பெரின்பள்ளி
- அடிமையாட்கள் சாபம் விலக – தலைச்செங்காடு
- சோமாஸ்கந்தரை குலதெய்வமாக கொண்டவர்கள் – அன்னூர்
- ஞானம் பெற – நன்னிலம்
- கணவரின் சந்தேக பார்வை விலக – திருக்கண்ணாபுரம்
- தம்பதிகள் அன்பு பெருக – திருமருகல்
- பங்காளி பகை விலக – திருச்சிக்கல்
- இல்லறம் சிறக்க – திருச்சேறை
- நவகிரக பாதிப்பு விலக – திருக்குவளை
- செவ்வாய் தோஷம் விலக – திருவாய்மூர்
- கல்வி மேன்மை பெற – திருநெல்லிக்கா
- வறுமை விலக – வண்டுறை
- வினைகள் விலக – திருக்கடிக்குளம்
- புத்திர தோஷம் விலக, செல்வம் சேர – திருஆலங்குடி
- அமைதி பெற – கொட்டாரம்
- சந்திர தோஷம் விலக – திட்டை
- ராகு தோஷம் விலக – பசுபதி கோவில்
- பாவங்கள் விலக – கொட்டையூர்
- சனி தோஷம் விலக – ஓமாம்புலியூர்
- சிவனடியாரை அவமதித்த பாவம் விலக – தருமபுரம்
- அனைத்து பாவங்களும் விலக – மயிலாடுதுறை
- கர்மவினைகள் அகல – உத்திரகோச மங்கை
- பித்ருதோஷம் விலக – ராமேஸ்வரம்
- பிறவி பயன் கிடைக்க – காளையார்கோவில்
- ஊழ்வினை தோஷம் விலக – பெண்ணாடம்
- கர்மவினை அகல – ராஜேந்திரப்பட்டினம்
- ஏழு தலைமுறை பாவங்கள் விலக – அவினாசியப்பர்
- நினைத்த காரியம் நடக்க – குரங்கினில் முட்டம்
- பித்ரு தோஷ போக – பவானி
- மண வாழ்க்கை சிறக்க – ஆச்சான்புரம்
- திருஷ்டி தோஷம் விலக – ஆடுதுறை
- சர்ப்ப தோஷம் விலக – சங்கரன்கோவில்
- முன் ஜென்ம பாவம் விலக – தேரெழுத்தூர்
Read more: ஜோதிடப்படி.. கணவர் வேலைக்கு வெளியே சென்றவுடன்.. மனைவி இதைச் செய்யக்கூடாது..!!