மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எல்லை பாதுகாப்பு படை (BSF), 2025 ஆம் ஆண்டிற்கான புதிய வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. அதன்படி எல்லை பாதுகப்பு படையின் கம்யூனிகேஷன் பிரிவில் ரேடியோ அப்ரேட்டர் மற்றும் ரேடியோ மெக்கானிக் ஆகிய பதவிகளுக்கு ஆட்கள் தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணியிடவிவரம்:
தலைமை கான்ஸ்டபிள் (ரேடியோ அப்ரேட்டர்) – 910 காலிப்பணியிடங்கள்
தலைமை கான்ஸ்டபிள் (ரேடியோ மெக்கானிக்) – 211 காலிப்பணியிடங்கள்
வயது வரம்பு: தலைமை கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்க 18 வயதை நிரப்பி இருக்க வேண்டும். மேலும், அதிகபடியாக பொதுப் பிரிவினர் 25 வயது வரையும், ஒபிசி பிரிவினர் 28 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 30 வயது வரையும் இருக்கலாம். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஏற்கனவே அரசு பணியில் இருக்கும் நபர்களுக்கு தளர்வு உள்ளது.
ரேடியோ அப்ரேட்டர் (Radio Operator) – தகுதி
12-ம் வகுப்பு (Physics, Chemistry, Maths) – 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி + பின்வரும் எந்த ஒரு பிரிவில் ITI சான்றிதழ்.
- Radio & TV
- Electrical Engineering
- Computer Operator & Programming Assistant (COPA)
- Data Preparation & Computer Software
- General Electronics Engineering
- Data Entry Operator
ரேடியோ மெக்கானிக் (Radio Mechanic) – தகுதி
12-ம் வகுப்பு (Science subjects) – 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது பின்வரும் எந்த ஒரு பிரிவில் ITI சான்றிதழ்
- Radio & TV
- General Electronics
- Computer Operator & Programming Assistant (COPA)
- Data Preparation & Computer Software
- Electrician
- Fitter
- Information Technology
- Electronics System Maintenance
- Communication Equipment Maintenance
- Network Technician
- Computer Hardware
- Mechatronics
- Data Entry Operator
சம்பள விவரம்: இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை 4 கீழ் மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு நடைமுறை:
* விண்ணப்பித்த அனைவரும் முதலில் உடற்தகுதி தேர்வில் பங்கேற்க வேண்டும்.
* உடற்தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு நடத்தப்படும்.
* ஆவணங்கள் (Certificates) சரிபார்க்கப்படும்.
* மருத்துவ பரிசோதனை (Medical Test) மேற்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் பெற்றுள்ளவர்கள் https://rectt.bsf.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கு விலக்கு இருப்பினும் ரூ.50 சேவை கட்டணம் செலுத்த வேண்டும்.
கடைசி தேதி: செப்டம்பர் 23 வரை விண்ணப்பிக்கலாம்.