12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! மத்திய அரசு வேலை ரெடி..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) 2023ஆம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் ஜூன் மாதம் 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


பதவிகள்:

மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்ற பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர் (Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant), டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) போன்ற பதவிகள் நிரப்பப்பட உள்ளன.

* டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 12ஆம் வகுப்பில் கணிதம் உள்ளடங்கிய அறிவியல் பாடங்களை எடுத்து படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 01-08-2023 அன்று 18-27க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

விண்ணப்பதாரர்களின் வயது, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு அட்டவணை, எவ்விதம் விண்ணப்பிக்க வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் தேர்வாணையத்தின் அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் அதனை பதிவிறக்கம் செய்து மேலும் தெளிவு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் ssc.nic.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 08.06.2023 ஆகும்.

ஆன்லைன் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனுப்பும் புகைப்படத்தில் தொப்பியோ, கண்ணாடியே அணிந்திருக்கக் கூடாது. அவர்கள் புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும்.

CHELLA

Next Post

’அவன விட நீ தான் எனக்கு முக்கியம்’..!! காதல் கணவனை கழட்டிவிட்டு இன்ஸ்டா காதலனுடன் ஓடிப்போன பெண்..!!

Mon May 22 , 2023
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோம்பைபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். நித்யா கோம்பைபுதூரில் உள்ள அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றினார். இந்நிலையில் நித்யா அதிக நேரம் செல்போனில் பொழுதைக் கழித்ததாக கூறப்படுகிறது. இதில் இன்ஸ்டாகிராமில் நவீன் என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் புஷ்பராஜுக்கு தெரியவரவே, நித்யாவை அவர் […]
’அவன விட நீ தான் எனக்கு முக்கியம்’..!! காதல் கணவனை கழட்டிவிட்டு இன்ஸ்டா காதலனுடன் ஓடிப்போன பெண்..!!

You May Like