13வது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்!… நாளை அட்டவணை அறிவிப்பு!

13வது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வரும் 27 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.


ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இந்த தொடரை இந்தியா நடத்துவதால், இந்தியா நேரடியாக இந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா தவிர, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகளும் தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து எஞ்சிய 2 இடங்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டி தற்போது ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. 2 இடங்களுக்கான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, இலங்கை, அயர்லாந்து, ஓமன், ஸ்காட்லாந்து, நேபாளம், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பலப்பரீட்சை நடத்துகின்றன.

குரூப் ஏ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம், அமெரிக்கா ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த இரு பிரிவுகளிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோதும். இதில் மொத்தம் 20 போட்டிகள் நடக்கும். அதன் பிறகு இந்த இரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெறும். இதில், ஒவ்வொரு அணியும் விளையாடாத அணிகளுடன் போட்டியிடும். இதில் கடைசியாக இடம் பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு போராடும். இறுதிப் போட்டிக்கு வரும் இரு அணிகளும் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும். உலகக் கோப்பையில் 2 அணிகளும் 9 மற்றும் 10வது இடத்தைப் பிடிக்கும்.

இந்த நிலையில், 13ஆவது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வரும் 27 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. ஐசிசி ஆண்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடருக்கான அட்டவணை வரும் 27 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு மும்பையில் வைத்து அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அட்டவணை வெளியாகி 100 நாட்களுக்கு பிறகு உலகக் கோப்பை தொடர் நடக்கிறது.

KOKILA

Next Post

இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை!... குவகாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவு!

Mon Jun 26 , 2023
இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை விதித்து குவகாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொந்தரவு குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் WFI தலைவர் பிரிஜ் பூஷன், கடந்த மார்ச் மாதத்துடன் தனது மூன்றாவது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், WFI தலைவர் தேர்தல் மே மாதம் 7 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் விளையாட்டு அமைச்சகம் அதனை செல்லாது என அறிவித்தது.பிறகு இந்திய மல்யுத்த சம்மேளன விவகாரங்களை சமாளிப்பதற்கும், 45 நாட்களுக்குள் […]
gauhati high court

You May Like