ஒரு காலத்தில் கிராமப்புறங்களில் பல வீடுகளில் காலையுணவாக இருந்தது பழைய சாதம். முந்தைய நாள் மீதமிருந்த சாதத்தை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிடும் இந்த வழக்கம், இன்று மீண்டும் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக, நொதித்த (Fermented) உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லவை என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், பழைய சாதத்தின் ஊட்டச்சத்து குறித்தும் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பாரம்பரிய உணவு உடலுக்கு என்னென்ன நன்மைகளை […]

காலையை ஆரோக்கியமான உணவுடன் தொடங்குவது உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கும். அந்த வகையில், இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்த உலர் திராட்சையும், அதில் ஊறிய தண்ணீரும் பலரால் ஆரோக்கியமான காலை வழக்கமாகப் பின்பற்றப்படுகிறது. உலர் திராட்சையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் பல்வேறு தாதுக்கள் இருப்பதால், அளவோடு எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு தேவையான சில முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இப்போது ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய சில நன்மைகள் குறித்து […]

முகம் மற்றும் கைகளின் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலர், பாதங்களின் பராமரிப்பை கவனிக்காமல் விடுகிறார்கள். இதன் விளைவாக, குதிகால்களில் வறட்சி அதிகரித்து தோல் வெடிப்பு ஏற்படலாம். நீண்ட நேரம் நிற்பது, காலணியின்றி நடப்பது, உடலில் ஈரப்பதம் குறைவது போன்ற காரணங்களாலும் இந்தப் பிரச்சனை உருவாகும். இதைத் தவிர்க்க, பாதங்களை சுத்தமாக வைத்திருப்பதோடு, அவ்வப்போது இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிப்பு அளிப்பதும் நல்லது. அந்த வகையில், வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சில […]

மனிதர்களின் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள் இருந்தாலும், பெரும்பாலானோர் சந்திக்கும் பொதுவான பிரச்சனை என்றால் அது முடி உதிர்வுதான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள் முதல் பெண்கள் வரை என பலரும் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பல நிறுவனங்கள் பல்வேறு பெயர்களில் விதவிதமான முடி எண்ணெய்களை விற்பனை செய்து வருகின்றன. ஆனால், அவை அனைவருக்கும் எதிர்பார்த்த பலனை அளிக்கிறதா என்பது பலரிடமும் எழும் […]

பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெற வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கும். அதற்காக விலையுயர்ந்த அழகுப் பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துபவர்களும் ஏராளம். ஆனால், வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் சில இயற்கை பொருட்களை பயன்படுத்தி சருமத்தை பராமரிக்கவும், அதன் இயற்கையான பொலிவை மேம்படுத்தவும் முடியும். அந்த வகையில், எளிதாக தயாரிக்கக்கூடிய சில வீட்டுவழி ஃபேஸ் பேக்குகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். வெயிலின் தாக்கம், மாசு, […]

தெலங்கானா மாநிலம், சூர்யபேட்டையை சேர்ந்தவர் நகிரிகாந்தி ரவி. லாரி ஓட்டுநரான இவருக்கு இந்து என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு, 5 வயதான தனுஷ் மற்றும் 2 வயதான ரேவந்த் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவர்களின் வீட்டில் இருந்து அடிக்கடி குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த […]

பெற்றோர்கள் பொதுவாக, தெரியாத நபர்களிடம் பேசவோ பழகவோ கூடாது என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்துவார்கள். இதற்குக் காரணம், அந்நியர்களால் ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சம்தான். ஆனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பல நேரங்களில் அவர்களுக்குத் தெரிந்த நபர்களாலோ அல்லது நெருங்கிய உறவினர்களாலோ நடைபெறுகின்றன என்பதைக் பல ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் தனது சொந்த மாமாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் […]

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 33 வயதான ரேணுகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இவர் தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். கட்டிட வேலைக்கு சென்று வந்த இவருக்கும் வீட்டின் அருகே வசித்து வரும் அனிதா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. […]

கள்ளத்தொடர்பு சம்பவங்கள் தற்போது சமூகத்தில் அதிகரித்து வருவதாக அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன. இதனால் பல குடும்பங்கள் சீர்குலைவதோடு, அதன் பாதிப்பை அதிகமாகச் சந்திப்பவர்கள் குழந்தைகளே. அந்த வகையில், கோயம்புத்தூரில் பெண் ஒருவரின் கள்ளத்தொடர்பு காரணமாக அவரது மகன்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மார்க்கெட் சாலையில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியில் திருப்பத்தூரைச் சேர்ந்த 30 வயதான பூவரசன் என்பவர் […]

ராமநாதபுரத்தில் தந்தையை இழந்த சிறுமி ஒருவரை, அவரது சொந்த தாத்தாவே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, அவர் கர்ப்பமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் மூவலூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இவர் உயிரிழந்த நிலையில், தற்போது இவரது மனைவி மற்றும் 15 வயது மகள் அதே கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளனர். […]