1,429 ஹெல்த் இன்ஸ்பெக்டர் காலியிடங்கள்..!! 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! மாதம் ரூ.71,900 வரை சம்பளம்..!!

Health Inspector 2025

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், மாநில சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 1429 சுகாதார ஆய்வாளர் கிரேடு-II (Health Inspector Grade-II) பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)

பணியின் பெயர்: சுகாதார ஆய்வாளர் கிரேடு-II

மொத்த காலியிடங்கள்: 1,429

பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்

சம்பளம்: இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு, மாதம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை ஊதியம் வழங்கப்படும்.

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு :

* 12-ஆம் வகுப்பு (HSC) தேர்வில் உயிரியல் (Biology) அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடப் பிரிவுகளைப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்வில் தமிழ் மொழிப் பாடத்தை ஒரு பாடமாகப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* மேலும், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குநரால் வழங்கப்பட்ட இரண்டு வருட பன்நோக்கு சுகாதாரப் பணியாளர் (MPHW) (ஆண்) / சுகாதார ஆய்வாளர் (HI) / சுகாதாரத் துறை ஆய்வாளர் (SI) பாடப் பிரிவின் சான்றிதழையும் பெற்றிருப்பது கட்டாயம்.

* விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

தேர்வு முறை மற்றும் விண்ணப்பக் கட்டணம் :

* தமிழ் மொழித் தகுதித் தேர்வு (10-ஆம் வகுப்பு தரத்தில் – இது தகுதித் தேர்வாகும்).

* கணினி வழித் தேர்வு (CBT) – சுகாதார ஆய்வாளர் கிரேடு-II பணிக்கான கொள்குறி வகை (Objective Type) தேர்வு.

விண்ணப்பக் கட்டணம் :

SC / SCA / ST / DAP பிரிவினருக்கு: ரூ.300/-

மற்ற பிரிவினருக்கு: ரூ.600/-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான நபர்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://mrb.tn.gov.in/ மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 16, 2025 ஆகும்.

Read More : இன்று வரை மர்மம் விலகாத கோயில்..!! லிங்க கருவறையில் தலைகீழாக தெரியும் நிழல்..!! எங்கு இருக்கு தெரியுமா..?

CHELLA

Next Post

நாமக்கல் மாவட்ட தனியார் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்...!

Wed Oct 29 , 2025
நாமக்கல் மாவட்டம் Excel பொறியியல் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை. கல்லூரியில் உணவு சமைக்கவும், கல்லூரியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் Excel பொறியியல் கல்லூரி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு 1000-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். சிலர், இக்கல்லூரிக்குச் சொந்தமான விடுதியில் தங்கிப் […]
excel college 2025

You May Like