லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC) நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரி (Apprentice Development Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு வணிக சந்தைப் பற்றிய புரிதலும், நல்ல தகவல் தொடர்புத் திறனும் கொண்ட திறமையுள்ள இளம் பட்டதாரிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம் 1,516 அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். தேர்வு மற்றும் நியமனங்களில், அரசின் இட ஒதுக்கீட்டு முறை உட்பட்ட அரசின் விதிகளின்படி இருக்கும் என்று லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

பயிற்சிக் காலத்தில், அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு உதவித் தொகையாக (Stipend) மாதம் ரூ.51,500/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எல்ஐசி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://licindia.in/-யில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் 10.02.2023-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.