மொஹாலி ஆக்ஸிஜன் ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் 2 பேர் பலியான நிலையில், பலர் காயமடைந்தனர்..
பஞ்சாபின் மொஹாலியில் உள்ள ஒரு ஆக்ஸிஜன் ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.. சுமார் மூன்று பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நகரின் 11 ஆம் கட்டத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது. தகவல் கிடைத்ததும், மருத்துவக் குழுக்கள், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாக ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர். காயமடைந்தவர்கள் மருத்துவ உதவிக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்…
“இந்த சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கூடுதலாக, காயமடைந்த மூன்று பேர் சிகிச்சைக்காக 6 ஆம் கட்ட சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக எஸ்பி சிட்டி சிரிவெண்ணெலா தெரிவித்தார். மேலும் “11 ஆம் கட்டத்தின் தொழில்துறை பகுதியில், காலை 9 மணியளவில் பயங்கர வெடி வெடிப்பு நிகழ்ந்தது, 2 ஊழியர்கள் உயிரிழந்தனர்.. 3 பேர் காயமடைந்தனர்… முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது, அதற்கான காரணத்தை நாங்கள் இன்னும் கண்டுபிடித்து வருகிறோம்… இன்னும் சில கசிவு இருக்கலாம்,” என்று கூறினார்.
Read More : தாலியோட ஈரம் கூட காயல.. முதலிரவு அறைக்கு சென்ற கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!