கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 2 வயது மகன்..!! சித்ரவதை செய்து கொடூரமாக கொன்ற தாய்..!!

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சலிம்பாய் வாகேர். இவருக்கும் ஹூசேனா என்ற பெண்ணுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு ரெஹான் மற்றும் ஆர்யன் என்ற ஆண் குழந்தைகள் இருந்தன. தம்பதிக்கு இடையே தொடர் சண்டைகள் ஏற்படவே ஹூசேனா கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், ஹூசேனாவுக்கு ஜாகிர் பக்கீர் என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த உறவுக்கு 2 குழந்தைகளும் இடையூறாக இருந்து வந்துள்ளது. இதனால், தாய் ஹூசேனா பெற்ற குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.


இந்த கள்ளக்காதல் விவகாரம் குறித்து கணவர் சலிம்பாய் வாகேர், மனைவியை கண்டித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹூசேனா தனது தாய் வீட்டை விட்டு வெளியேறி காதலன் ஜாகீருடன் தனி வீடு எடுத்து வசிக்கத் தொடங்கியுள்ளார். 4 வயது மூத்த மகனை தாய் வீட்டிலேயே விட்டுவிட்டு, 2 வயது குழந்தை ஆர்யனை மட்டும் தன்னோடு அழைத்துச் சென்றுள்ளார் ஹூசேனா. இந்நிலையில், கடந்த மார்ச் 8ஆம் தேதி ஆர்யன் நோய்வாய்பட்டு இறந்துவிட்டதாக தந்தை சலீமுக்கு தகவல் வந்துள்ளது. பதறிப்போய் வந்து குழந்தையை பார்த்த சலீம், குழந்தையின் வயிறு, முதுகு பகுதிகளில் காயங்களும் தழும்புகளும் இருந்துள்ளது.

தனது மனைவியும், அவரது காதலன் ஜாகீரும் தான் குழந்தையை அடித்து துன்புறுத்தி கொலை செய்ததாக சலீம் காவல்துறையில் புகார் அளித்தார். தொடர்ந்து குழந்தைக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், குழந்தை சித்தரவதை செய்யப்பட்டு உயிரிழந்தது உறுதியானது. இதையடுத்து, ஹூசேனா மற்றும் காதலன் ஜாகீர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

CHELLA

Next Post

சீரியல் கில்லர் கேள்விப்பட்டிருப்பீங்க!! சீரியல் கிஸ்ஸர் பாத்திருக்கீங்களா???? எகிறிகுதித்து பெண்ணுக்கு முத்தம் தந்த மர்ம நபர்!

Mon Mar 13 , 2023
தற்போது இருக்கும் காலகட்டங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சிசிடிவி காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் பெண் ஒருவரை திடீரென அப்பகுதிக்கு வரும் ஆண் ஒருவர் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை இழுத்து முத்தம் கொடுக்கிறார். இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் பீகார் மாநிலத்தில் உள்ள […]
IMG 20230313 WA0060

You May Like