கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 24 பேர் காவல்துறை விசாரணையில் மரணமடைந்துள்ளனர். இது பொதுமக்களின் சீற்றத்தையும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நடைமுறைகள் குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்படுவதையும் தூண்டுகிறது. சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் காவல் துறை விசாரணையின்போது மரணமடைந்த அஜித் குமார் என்ற 27 வயது நபர் தொடர்பான வழக்கு, இந்திய அளவில் கடுமையான விமர்சனங்களை பெற்றது.
இது போன்ற காவல் நிலைய மரணங்கள் நடப்பது முதன் முறையல்ல. இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இது தொடர்கதையாக உள்ளது. இதுபோன்ற மரணங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்த போதிலும், இதற்கான நடவடிக்கை பெரிய அலையில் எடுக்கப்படவில்லை.
நிலைப்பாட்டில் மாற்றம்: திமுக எதிர்க்கட்சியில் இருந்தபோது, அதிமுக அரசாங்கத்தின் கீழ் காவல் மரணங்களை கண்டித்து குரல் கொடுத்தது. 2020 ஆம் ஆண்டு சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இது பரவலான போராட்டங்களையும் விமர்சனங்களையும் தூண்டியது. திமுக தலைவர்கள் இந்த மரணங்களை “மனித உரிமை மீறல்கள்” என்றும் இதனால் அப்போதைய முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், 2021 இல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, காவல் நிலைய மரணங்கள் அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர்கள் தற்போது மௌனம் கத்துவருவது பல குற்றச்சாட்டுகளை எழுப்புகிறது.
24 காவல் மரணங்கள்: தமிழ்நாடு முழுவதும் காவல் நிலைய மரணங்கள் நீண்டு கொண்டே உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் காவல்துறை விசரணையில் உயிரிழந்தவர்களின் விவரம் வெளியாகியுள்ளது. அதன் படி முருகானந்தம் (அரியலூர்), கோகுல் (செங்கல்பட்டு), விக்னேஷ், அப்புராஜ், ஆகாஷ் (சென்னை), பாஸ்கர் (கடலூர்), சங்கர் (கரூர்), பிரபாகரன், சின்னதுரை, விக்னேஷ்வரன் (நாமக்கல்), அஜித்குமார் (புதுக்கோட்டை), பாலகுமார் (ராமநாதபுரம்), டாக்டர். தடிவீரன் (திருச்சி), சாந்தகுமார் (திருநெல்வேலி), தங்கசாமி (திருவள்ளூர்), கார்த்தி (தென்காசி), அற்புதராஜா, ராஜா (மதுரை), விக்னேஷ்வரன், ஜெயக்குமார், தங்கப்பாண்டி (விழுப்புரம்), செந்தில் (விருதுநகர், தர்மபுரி). ஆகியோர் ஆவர்.
ஒவ்வொரு காவல் நிலைய மரண வழக்கும், காவல்துறை விசாரணை நடைமுறைகளை கேள்வி எழுப்பிக்கின்றது.
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மற்றும் நிறைவேறாத எதிர்பார்ப்புகள்: காவல்துறை பொறுப்புணர்வை உறுதி செய்தல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், விசாரணைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், காவல் நிலையங்களில் சிசிடிவி கண்காணிப்பை நிறுவுதல் மற்றும் சுயாதீன புகார் குழுக்களை அமைத்தல் போன்றவைகளை 2021 தேர்தல் அறிக்கையில், திமுக குறிப்பிட்டிருந்தது.
ஆனால் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆகியும், இந்த வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை. காவல் நிலையங்களுக்குள் கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்துவதிலோ அல்லது பொது பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதிலோ குறைந்தபட்ச முன்னேற்றம் மற்றுமே அடைந்துள்ளது.
வாக்குறுதிகளுக்கும், செயல்படுத்தலுக்கும் இடையிலான இடைவெளி பொதுமக்களின் ஏமாற்றத்தை ஆழப்படுத்தியுள்ளது, குறிப்பாக ஒரு காலத்தில் கட்சியின் சீர்திருத்தவாத நிலைப்பாட்டை நம்பியவர்களிடையே.
காவல் நிலைய மரணங்களின் அதிகரிப்பு காலாவதியான விசாரணை முறைகள், கட்டுப்படுத்தப்படாத காவல்துறை ஆக்கிரமிப்பு மற்றும் தாமதமான மருத்துவ பராமரிப்பு ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்புடையது என்று மனித உரிமைக் குழுக்களும் எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.
எஞ்சியுள்ள கேள்வி: தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பு இன்னும் எத்தனை உயிர்கள் இழக்கப்படும்? அழுத்தம் அதிகரிக்கும் போது, அரசாங்கத்தின் நம்பகத்தன்மையும் நீதிக்கான அதன் அர்ப்பணிப்பும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சோதிக்கப்படுகின்றன.