fbpx

ஜூலை 26-ம் தேதியான இன்று, கார்கில் விஜய் திவாஸ் தினத்தை இந்தியா கொண்டாடுகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் கார்கில் பகுதியில் 1999 ஆண்டு பாகிஸ்தான் ஊடுருவ முயற்சித்தது, இதனை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்தனர். இதனை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறத.

ஒவ்வொரு ஆண்டும் போரில் வெற்றிகரமான மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காக போராடிய வீரர்களுக்கு …

தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.55,360க்கு விற்பனையாகிறது.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும், தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தங்கம் விலை ஏற்ற …

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அரசுக்கு கிடைத்த வெற்றிக்கு பரிசு என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2022 செப்டம்பர் 9-ம் தேதி மின்கட்டணத்தை அரசு உயர்த்தியது. அதேபோல கடந்த ஜூன் 30-ம் தேதி கட்டணம் 6 சதவீதம் உயர்த்தப்பட்து. தற்போது, 2024-25 ஆண்டுக்கான மின் …

தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம், கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும், தமிழ்நாட்டில், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களான, …

Rajnath Singh: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை அதிகாலை, முதுகு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள பழைய தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் கண்காணிப்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிலையாக உள்ளதாகவும், நாளை (வெள்ளிக்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை …

வீட்டில் இருக்கும் சிலிண்டர்கள் வெடிப்பது குறித்து பல செய்திகளை நாம் படித்திருப்போம். இது போன்ற விபத்து ஏற்படாமல் தடுக்க எண்ணெய் நிறுவனங்கள் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும், எதிர்பாரா விதமாக எங்கோ ஒரு இடத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. அப்படி சிலிண்டர் வெடிப்பதால் பல சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உயிர் சேதங்களுக்கு ஈடு …

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் சேர விரும்பும் பெற்றோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் ஒரு பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி பத்திரம், 2 குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வைப்பு நிதி பத்திரம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் …

சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர், நேற்றிரவு அவரது வீட்டருகே ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது உணவு டெலிவரி செய்யும் நபர்கள் போல வந்த மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் அவரை சூழ்ந்து வெட்டி சாய்த்தது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங் சம்பவ இடத்திலேயே …

2024 யூரோ கால்பந்து தொடரின் காலிறுதி போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் காலிறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதியது. இந்த தொடரை நடத்தும் ஜெர்மனி அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இருஅணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் ஸ்பெயின் அணியின் வீரர் ஒல்மோ முதல் …

கர்நாடகாவில் சாலையோரம் விற்பனையாகும் பானி பூரிகளின் தரம் குறித்து புகார்கள் எழுந்ததையடுத்து, அம்மாநிலத்தில் விற்கப்படும் அனைத்து வகையான ஓட்டல்களிலும் பானி பூரி மாதிரிகளை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போதுதான், கேன்சரை விளைவிக்கும் செயற்கை நிறமிகள் பானிபூரியில் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் இதே புகார் தமிழ்நாட்டிலும் கிளம்பியது. பானி பூரிக்கு தயாராகும் மசாலா தண்ணீரில், …