முதல்வரின் காலை உணவு திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டமாக மாற்றியுள்ளது தற்போதய தவெக அரசு. அதுமட்டுமின்றி 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலானஇந்த காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு செப்.15-ம் தேதி அறிஞ்ஞர் அண்ணா […]
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அதி அழுத்த பிராணவாயு சிகிச்சை மையத்தை அமைச்சர் அருண் ராஜ் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் ‘கில்லி’ பட காட்சி திரையிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நேற்று (ஜூலை 17) சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் அதி அழுத்த பிராணவாயு சிகிச்சை (High-pressure oxygen therapy)மையத்தைத் திறந்து வைத்தார். இந்த சிகிச்சை மூலம் […]
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் இன்றுடன் 1,522வது நாளை எட்டியுள்ளது. இந்த நீண்டகால மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்த வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. போரின் போது, உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இதற்கிடையில், போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டதாக கூறப்பட்டாலும், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதன் காரணமாக மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், […]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெறும் 5 நபர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டுள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(ஏப்ரல் 23ஆம் தேதி) நடைபெற்று வருகிறது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது. அதே நேரத்தில், ஆட்சியை கைப்பற்ற […]
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தமிழக பாஜக தனது 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. “புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, மாநிலத்தின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது. “பாரம்பரிய அடிப்படையிலிருந்து நவீன முன்னேற்றத்திற்கு” என்ற நோக்கத்துடன், மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பல திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான முக்கிய திட்டங்கள்: […]
மகளிர் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த விவாதங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா சமீபத்தில் லோக்சபாவில் வாக்கெடுப்புக்கு வந்தது. இந்த மசோதா பெண்களுக்கு சட்டமன்றங்களில் அதிகமான இடத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டது. வாக்கெடுப்பில் மொத்தம் 489 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் மசோதாவுக்கு ஆதரவாக 278 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில், 211 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மகளிர் இட […]
விளாத்திகுளம் துயரம்: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மாலை, இயற்கை உபாதைக்காக வெளியே சென்ற பிளஸ் டூ மாணவி வீட்டிற்கு திரும்பாத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து நடைபெற்ற தேடுதலில், அடுத்த நாள் (மார்ச் 11) கிராமம் அருகிலுள்ள புதர்பகுதியில், உடலில் காயங்களுடன் அந்த மாணவி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மாணவியின் ஆடைகள் களையப்பட்டிருந்த நிலையில் இருந்தது, இதன் காரணமாக பாலியல் வன்கொடுமை நடந்திருக்கலாம் என்ற […]
“சொன்னதைச் செய்வோம்… செய்வதைச் சொல்வோம்…” என்பது தி.மு.க-வின் முக்கிய அரசியல் வாசகமாக இருந்தாலும், கடந்த ஐந்து ஆண்டுகளின் ஆட்சியைப் பார்த்தால் அந்த வாசகம் நடைமுறையில் பல இடங்களில் பொருந்தவில்லை என்ற விமர்சனம் எழுகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளுடன் ஆட்சியைப் பிடித்த தி.மு.க, தற்போது 2026 தேர்தலை முன்னிட்டு புதிய தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பகுதி (அதாவது 70%-80%) வாக்குறுதிகளை […]
தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் நடந்து வருகிறது, இது இந்த வருடம் மே 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதே போல் புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ந்தேதியும், அசாம் மாநில சட்டசபை மே 20-ந்தேதியும், மேற்கு வங்காள மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே 7-ந்தேதியும், கேரள சட்டசபை மே 23-ந்தேதியும் முடிவடைகிறது. இதன் காரணமாக அசாம், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களிலும் […]
மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்ற இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களின் பயணத்தைச் சுற்றி சர்ச்சை உருவாகியுள்ளது. மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று வரவேற்காதது மட்டுமல்லாமல், ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சில அடிப்படை வசதிகளிலும் குறைபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அவருக்காக ஒதுக்கப்பட்ட கழிவறையில் தண்ணீர் இல்லாதது மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்லும் சாலைகளில் குப்பைகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து […]

