சென்னையில் மின் வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று (ஆகஸ்ட் 13) சில முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. மின் வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளன. பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள்:கே.கே. நகர் பகுதியில், காவேரி ரங்கன் நகர், கே.கே. சாலை, லோகையா […]
மும்பை நிலச்சரிவு: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சக்காரிவு காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட விபத்து:மும்பையின் குர்லா பகுதியில் உள்ள சிராக் நகர் அருகே கவுசியா சாவ்ல் பகுதியில் அதிகாலை சுமார் 3.48 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதியின் […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தனித் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை அமைச்சர் அருண் முன்மொழிந்தார். நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து பேசினார்கள். அப்போது, நீட் தேர்வு முறைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தில் பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும், மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசு […]
சென்னையில் பொதுமக்களின் இணைய பயன்பாட்டை எளிதாக்கும் வகையில், 44 இடங்களில் இலவச வைபை (WiFi) சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இலவச வைபை (WiFi) வசதி 10.08.2026 முதல் மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் முக்கிய பகுதிகளில் இலவச வைபை (WiFi) வசதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் முதற்கட்டமாக, மெரினா […]
சென்னையில் தெருநாய்கள் மூலம் பரவும் ரேபிஸ் நோயை கட்டுப்படுத்தும் வகையில், மாநகராட்சி சார்பில் மிகப்பெரிய தடுப்பூசி முகாம் இன்று (ஆகஸ்ட் 11) முதல் தொடங்குகிறது. இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 2 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதுடன், அக மற்றும் புற ஒட்டுண்ணிகளை கட்டுப்படுத்தும் மருந்துகளும் வழங்கப்பட உள்ளன. 30 குழுக்கள் களத்தில் இறக்கம்:மாநகராட்சி சார்பில் இந்தப் பணிக்காக 30 சிறப்பு […]
கொலம்பியா நிலநடுக்கம்: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டின் மேற்கு பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி சோகோ (Chocó) பிராந்தியத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் அருகே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பல்வேறு நகரங்களில் உணரப்பட்டதுடன், வெனிசுலா உள்ளிட்ட அண்டை பகுதிகளிலும் அதிர்வுகள் […]
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் நடந்த பாம்பு கடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த 6 மாணவிகளை பாம்பு கடித்ததில், 3 மாணவிகள் உயிரிழந்தனர். மேலும் 3 மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்ட தனோரா தாலுகாவில் உள்ள ஜப்தலை கிராமத்தில் அரசு உதவி பெறும் பழங்குடியினர் உறைவிடப் பள்ளி […]
தமிழக அரசியலில் எதிர்காலத்தில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரபல ஜோதிடர் ரத்தன் பண்டிட் தெரிவித்துள்ளார். குறிப்பாக, நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், தற்போதைய முதலமைச்சர் விஜய்க்கும் அவருக்கும் இடையே புதிய அரசியல் போட்டி உருவாகலாம் என அவர் கணித்துள்ளார். அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நீண்டகாலமாக ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வருபவர் ரத்தன் பண்டிட். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்ததாகவும், தற்போதைய […]
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் நடிகை த்ரிஷா அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் தற்போது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. கட்சியின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் அரசியல் செயல்பாடுகளுடன் த்ரிஷாவின் பெயர் தொடர்ந்து தொடர்புபடுத்தப்பட்டு வரும் நிலையில், அவரது அரசியல் வருகை குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் சூழலில், திரையுலகைச் சேர்ந்த சில முக்கிய […]
தமிழகத்தில் அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் நெல் விளைச்சல் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் தாக்கமாக தமிழக சந்தைக்கு வரும் அரிசியின் வரத்து குறைந்து, பல்வேறு அரிசி ரகங்களின் விலை சுமார் 10 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கும் […]

