மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 25% உயர்வு..!! முதலமைச்சர் அசத்தல் அறிவிப்பு..!!

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 25% உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.


புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 2022ஆம் ஆண்டுக்கான மாநில விருதுகளை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர், “மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். சில நேரங்களில் உதவித்தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இனி வரும் காலங்களில் இதுபோன்று இல்லாமல், முதியோருக்கு உரிய நேரத்தில் உதவித்தொகை வழங்குவதுபோல் மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய நேரத்தில் உதவித்தொகை வழங்கப்படும். மற்றவர்களுக்கு வழங்குவதைவிட மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 25% உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 25% உயர்வு..!! முதலமைச்சர் அசத்தல் அறிவிப்பு..!!

வேலைவாய்ப்பில் யுடிசி பணிக்கு ஆட்கள் எடுக்கும்போது, அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% வழங்க வாய்ப்பு இருந்தால் கொடுக்கலாம். ஆனால், ஒரு சில துறையில் 10-க்கும் குறைவான பணியிடங்கள் எடுக்கும்போது, அப்பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று இடங்களை கொடுக்க முடியாத நிலை உள்ளது. அதிகமான எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு கொடுக்கும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை அரசு நிச்சயமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளும்” என்றார்.

CHELLA

Next Post

பெரும் அதிர்ச்சி..!! வகுப்பறையை பூட்டி 13 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த பள்ளி மாணவர்கள்..!!

Sat Dec 3 , 2022
வகுப்பறையில் தனியாக இருந்த 13 வயது சிறுமியை மாணவர்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மட்டுங்கா என்ற பகுதி உள்ளது. இங்கு BMC என்ற பள்ளி இயங்கி வரும் நிலையில், பல்வேறு மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் நடன பயிற்சிக்கு சென்றுள்ளனர். அப்போது அதே வகுப்பில் படிக்கும் 13 […]
Rape e1667877828212

You May Like