10 வயது சிறுமியை கொடூரமாக தாக்கி கொலை செய்த 25 இளைஞர்கள்..!! புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

10 வயது சிறுமியை 25 இளைஞர்கள் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குடும்பத்தினர் அங்கிருக்கும் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர், ஆட்டோவில் புறப்பட்டுச் சென்ற அவர்கள், கோவிலில் இருந்த பித்தளை பொருட்களை திருடிச் செல்வதாக அப்பகுதி இளைஞர்களுக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, 25 இளைஞர்கள் அந்த ஆட்டோவை விரட்டிச் சென்றனர். பிறகு ஆட்டோவை மடக்கிப் பிடித்த இளைஞர்கள், ஆட்டோவில் இருந்தவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். ஆட்டோவில் இருந்து 6 பேரில் 10 வயது சிறுமியையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் அந்த சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

10 வயது சிறுமியை கொடூரமாக தாக்கி கொலை செய்த 25 இளைஞர்கள்..!! புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

இதையடுத்து, தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமி உட்பட அந்த குடும்பத்தினரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், இளைஞர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, 25 இளைஞர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

CHELLA

Next Post

தனியார் வங்கியில் டிகிரி முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! விண்ணப்பிக்க 30-ம் தேதி கடைசி நாள்… முழு விவரம்

Thu Nov 17 , 2022
கத்தோலிக்க சிரியன் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Regional Sales Manager – Gold Loan பணிகளுக்கு என மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்.. மேலும் பணியில் […]
bank jobs sarkari naulri 5033579 835x547 m

You May Like