விளையாட வந்த சிறுமியிடம் விளையாட்டு காட்டிய 3 சிறுவர்கள்..!! பலாத்கார வீடியோ வெளியானதால் பரபரப்பு..!!

ஹரியானா குருகிராமில் 14 வயது சிறுமியை 3 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் எனவும் , அதனை வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


ஹரியானா மாநிலம் குருகிராமில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. அப்போது விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்த 14 வயது சிறுமியை 3 சிறுவர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த 2022 டிசம்பர் மாதமே நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இந்த சிறுவர்கள் இந்த செயலை வீடியோ எடுத்து அதை வைரலாக்குவோம் என்று சிறுமியை மிரட்டியுள்ளனர். மேலும், குற்றவாளிகள் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியும் உள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது தலைமறைவாகி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அந்த நபர்கள், சம்பவத்தை வீடியோ எடுத்து அதனை இன்டர்நெட்டில் பதிவேற்றியுள்ளனர் எனவும் வாட்ஸ் அப் மூலம் அந்த சிறுமிக்கும் வீடியோ பகிரப்படவே, அந்த சிறுமியின் தந்தை காவல்துறையை அணுகியுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

அதானி நிறுவன கடன் விவரங்கள்..!! முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

Mon Mar 13 , 2023
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மீது அண்மையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. இதைத்தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்குகள் மிக கடுமையாக சரிந்தன. அதானி குழுமம் பல்வேறு சவால்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறது. பல்வேறு கடன்களை அடைத்து முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த அதானி குழுமம் முயற்சி செய்து வருகிறது. இதனிடையே ஏப்ரல் 2025 முதிர்வுத் தேதிக்கு முன், ரூ.7,374 கோடி ஈக்விட்டி-பேக்டட் ஃபைனான்சிங் நிலுவை தொகைகளை […]
WhatsApp Image 2023 01 09 at 9.18.39 AM

You May Like