இரும்பு பீரோ மின்கம்பியில் உரசி 3 பேர் பலி …

தருமபுரி மாவட்டத்தில் வீடு காலி செய்தபோது இரும்பு பீரோ மின்கம்பியில் உரசியதில் 3 பேர் பலிதாபமாக உயிரிழந்தனர்.

தருமபுரி அருகே சந்தேப்பேட்டையைச் சேர்ந்தவர் பச்சியப்பன். இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் 2வது மாடியில் குடியிருந்தவர்கள் இலியாஸ் பாஷா மற்றும் குடும்பத்தினர். 9 ஆண்டுகளாக வசித்துவந்த நிலையில் வேறொரு வீட்டிற்கு செல்ல ஏற்பாடுகள் செய்தார். இவரது 2 மகன்களும் வெளியூரில் வேலைபார்த்து வருகின்றனர்.


வாடகை வீட்டில் இருந்து உடமைகளை எடுத்துக்கொண்டு புதிய வீட்டிற்கு கொண்டு செல்ல பொருட்களை மினி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தார். லாரி ஓட்டுனர் கோபி 2வது மாடியில் இருந்து பொருட்களை கீழே இறக்கிக் கொண்டிருந்தார். கோபியின் நண்பர் குமார் மற்றும் வீட்டு உரிமையாளர் பச்சியப்பன் ஆகியோர் இவர்களுக்கு உதவி செய்துள்ளனர்.

அப்போது வீட்டின் அருகே மின்கம்பி சென்றுள்ளது. பீரோவை கீழே இறக்கியபோது மின்கம்பியில் உரசியுள்ளது. மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் கோபி , இலியாஸ் ஆகியோர் உயிரிழந்தனர். பச்சியப்பன் மற்றும் குமார் ஆகியோரை மீட்டு காவல்துறையினர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பச்சியப்பனும் உயிரிழந்தார்.

வீடு காலி செய்தபோது நடந்த துயரமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மகன்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து தருமபுரிக்கு அவர்கள் விரைந்துள்ளனர்.

Next Post

’’ஜிப்மர் மருத்துவமனையில் பாராசிட்டமால் கூட இல்லை’’ ... தமிழிசை சவுந்தராஜன் விளக்கம்…

Thu Sep 22 , 2022
ஜிப்மர் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் , முறையான சிகிச்சை அளிப்பதில்லை என பல்வேறு புகார்கள் குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கமளித்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மீது தொடர்ந்து புகார்கள் எழுவதை அடுத்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் பாராசிட்டாம்மால் மாத்திரை கூட இல்லையாமே , அதற்கும் தட்டுப்பாடு உள்ளதாமே என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த […]
தமிழிசை

You May Like