கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 337 காலி பணியிடங்கள்.. ITI, Diploma, Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

job 1 1

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.


ஐடிஐ தகுதி:

  • ஃபிட்டர் – 24
  • மெஷினிஸ்ட் – 04
  • வெல்டர் (கேஸ் & எலக்ட்ரிக்) – 04
  • எலக்ட்ரீஷியன் – 35
  • எலக்ட்ரானிக் மெக்கானிக் – 15
  • பம்ப் ஆபரேட்டர் – மெக்கானிக் – 04
  • இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் – 17
  • மெக்கானிக் குளிர்பதன மற்றும் ஏர் கண்டிஷனிங் – 11
  • கணினி ஆபரேட்டர் – புரோகிராமிங் உதவியாளர் (COPA) – 05

டிப்ளமோ அப்ரண்டிஸ் காலியிட விவரங்கள்:

  • மெக்கானிக்கல் – 42
  • எலக்ட்ரிக்கல் – 24
  • கெமிக்கல் – 05
  • எலக்ட்ரானிக்ஸ் – 15
  • சிவில் – 08

டிகிரி முடித்தவர்களுக்கான பணியிடங்கள்

  • மெக்கானிக்கல் – 28
  • எலக்ட்ரிக்கல் – 16
  • கெமிக்கல் – 03
  • இன்ஸ்ட்ருமென்டேஷன் – 11
  • எலக்ட்ரானிக்ஸ் – 09
  • சிவில் – 08
  • பி.எஸ்சி (இயற்பியல்/வேதியியல்) – 26
  • பி.ஏ/பி.எஸ்சி/பி.காம்/ஏதேனும் பட்டம் – 20 துறை சார்ந்த பிரிவிபில், ஐடிஐ, டிப்ளமோ,பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் எவ்வளவு? ஐடிஐ அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கு ரூ.7,700, டிப்ளமோ அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கு ரூ. 8,000, பட்டதாரி அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கு ரூ.9 ஆயிரம் வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து தெரிந்து கொண்ட பின்னர் https://www.nats.education.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 21.07.2025 கடைசி நாளாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை உரிய ஆவணங்களுடன் கீழ்காணும் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: Senior Manager(HRM, Kudankulam Nuclear power project, Nuclear power corporation of india Limited, Kudankulam PO, Radhapuram Taluk, Tirunelveli District, Tamil Nadu: 627106.

Read more: அஜித்குமார் மரண வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு..!!

Next Post

ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் ஊதியம் கட்.. அரசு ஊழியர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் எச்சரிக்கை!!

Tue Jul 8 , 2025
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் வழங்கப்படாது என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன. மத்திய அரசின் […]
muruganantham

You May Like