ஜெர்மனி நாட்டில் உள்ள மக்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்துவதை விட பணத்தை ரொக்கமாக எடுத்து செலவு செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். இதனால் அந்நாட்டில் கிட்டத்தட்ட 53 ஆயிரம் ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி கொண்ட கொள்ளையர்கள் ஏடிஎம்களை வெடிவைத்து தகர்த்து கொள்ளை அடித்து வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் நெதர்லாந்தை மையமாகக் கொண்ட கும்பல்கள் ஈடுபட்டிருக்கலாம் என ஜெர்மனி போலீசார் சந்தேகிக்கின்றனர். இவர்கள் ஜெர்மனியில் கொள்ளையடித்து விட்டு நெதர்லாந்து எல்லைக்கு தப்பி ஓடிவிடுகிறார்கள். இதனால் அவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசார் கூறுகின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் ஜெர்மனியில் 496 ஏடிஎம்கள் வெடிவைத்து தகர்த்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.