496 ஏடிஎம்-கள் வெடிவைத்து தகர்ப்பு..!! குறிவைத்து தாக்கும் கொள்ளையர்கள்..!! திடுக்கிடும் சம்பவம்..!!

ஜெர்மனி நாட்டில் உள்ள மக்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்துவதை விட பணத்தை ரொக்கமாக எடுத்து செலவு செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். இதனால் அந்நாட்டில் கிட்டத்தட்ட 53 ஆயிரம் ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி கொண்ட கொள்ளையர்கள் ஏடிஎம்களை வெடிவைத்து தகர்த்து கொள்ளை அடித்து வருகின்றனர்.


இந்த கொள்ளை சம்பவத்தில் நெதர்லாந்தை மையமாகக் கொண்ட கும்பல்கள் ஈடுபட்டிருக்கலாம் என ஜெர்மனி போலீசார் சந்தேகிக்கின்றனர். இவர்கள் ஜெர்மனியில் கொள்ளையடித்து விட்டு நெதர்லாந்து எல்லைக்கு தப்பி ஓடிவிடுகிறார்கள். இதனால் அவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசார் கூறுகின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் ஜெர்மனியில் 496 ஏடிஎம்கள் வெடிவைத்து தகர்த்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

CHELLA

Next Post

கள்ளக்காதலி வீட்டிலேயே செட்டிலான கணவன்..!! மனமுடைந்த மனைவி எடுத்த விபரீத முடிவு..!!

Tue Apr 18 , 2023
கணவரின் கள்ளக்காதல் விவகாரத்தால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை ஆவடியை அடுத்த கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (40). இவர், கூலிவேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமலா (35). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக ராஜா வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனால் ராஜா […]
Fake love

You May Like